NewsPR கோரி அணிவகுப்பை ஆரம்பித்த இலங்கையர் 40 நாட்களுக்கு பிறகு சிட்னி...

PR கோரி அணிவகுப்பை ஆரம்பித்த இலங்கையர் 40 நாட்களுக்கு பிறகு சிட்னி திரும்பினார்

-

தற்போது அவுஸ்திரேலியாவில் அகதிகள் விசாவில் உள்ளவர்களுக்கும் அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் நிரந்தரத் தீர்வைக் கோரி இலங்கையரால் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் இலக்கை அடைந்துள்ளது.

நீல் பார்ரா ஆகஸ்ட் 1 ஆம் தேதி விக்டோரியாவின் பல்லாரத்தில் இருந்து இந்த நடைபயணத்தை தொடங்கினார்.

1,000 கிலோ மீட்டர் நடைப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை சிட்னிக்கு வந்திருந்தார்.

12,500க்கும் மேற்பட்ட அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி 19,000 கையெழுத்துகளுடன் கூடிய மனு ஒன்றையும் நீல் பாரா கொண்டுவந்து, அது சிட்னியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.

2008ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின் போது இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற நீல் பாரா மற்றும் அவரது மனைவி மற்றும் அவர்களது 3 பிள்ளைகள், ஏறக்குறைய 9 வருடங்களாக வீசா எதுவுமின்றி நாட்டில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...