Newsஎலான் மஸ்க்கின் குழந்தை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

எலான் மஸ்க்கின் குழந்தை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

-

தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் அவரது முன்னாள் காதலி கிரிம்ஸிக்கும் மூன்றாவது குழந்தை இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

எலான் மஸ்க் வாழ்க்கை வரலாற்று நூலை ஆசிரியர் வால்டர் ஐசக்சன் எழுதியுள்ளார். இதற்காக 2 ஆண்டுகளாக எலான் மஸ்க் மற்றும் அவரின் நெருங்கியவர்களிடம் அவர் தகவல்களை திரட்டியுள்ளார்.

சமீபத்தில் எலான் மஸ்க் – ஷிவோன் ஸிலிஸ் தம்பதிக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளின் புகைப்படத்தை வால்டர் ஐசக்சன் இணையத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், அவர் எழுதியுள்ள நூலில் எலான் மஸ்க் – கிரிம்ஸுக்கு பிறந்த மூன்றாவது குழந்தை பற்றிய தகவல் தற்போது வைரலாகி வருகின்றது.

எலான் மஸ்க், கனடாவை சேர்ந்த கிரிம்ஸ் என்பவருடன் கடந்த 2018 முதல் 2022 வரை காதலில் இருந்தார். இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்ததாகதான் இவ்வளவு காலம் அனைவரும் அறிந்ததே.

ஆனால், மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தை உள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

அந்த குழந்தையின் பெயர் டெக்னோ மெக்கானிக்கஸ் என்றும், செல்லமாக டாவ் எனப் பெயரிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இரகசியமாக வளர்க்கப்படும் இந்த குழந்தையின் வயது அல்லது பிறந்த திகதி குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கிற்கு மூன்றுமுறை விவாகரத்தாகியுள்ளது. அவருக்கு மொத்தம் 10 குழந்தைகள் உள்ளனர்.

Latest news

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி, தோஷாகானா வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய துப்பாக்கி கொள்முதல்

ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான Bondi தாக்குதலைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் (NSW)...

இளைஞர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள விக்டோரியன் பிரதமர் 

கடந்த சில நாட்களாக விக்டோரியாவின் Mordialloc கடலோரப் பகுதியில் இளைஞர்கள் குழுவின் கலவர நடத்தை பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள்...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

கிறிஸ்துமஸுக்கு முன்பு எரிபொருள் விலை எப்படி உயரும்?

கிறிஸ்துமஸுக்கு சில நாட்களுக்கு முன்பு, குயின்ஸ்லாந்து முழுவதும் பெட்ரோல் விலை திடீரென அதிகரித்துள்ளது. இந்த பண்டிகை காலத்தில் இந்த அதிகரிப்பு "மிகவும் நியாயமற்றது மற்றும் எதிர்பாராதது" என்று...