Newsஎலான் மஸ்க்கின் குழந்தை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

எலான் மஸ்க்கின் குழந்தை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

-

தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் அவரது முன்னாள் காதலி கிரிம்ஸிக்கும் மூன்றாவது குழந்தை இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

எலான் மஸ்க் வாழ்க்கை வரலாற்று நூலை ஆசிரியர் வால்டர் ஐசக்சன் எழுதியுள்ளார். இதற்காக 2 ஆண்டுகளாக எலான் மஸ்க் மற்றும் அவரின் நெருங்கியவர்களிடம் அவர் தகவல்களை திரட்டியுள்ளார்.

சமீபத்தில் எலான் மஸ்க் – ஷிவோன் ஸிலிஸ் தம்பதிக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளின் புகைப்படத்தை வால்டர் ஐசக்சன் இணையத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், அவர் எழுதியுள்ள நூலில் எலான் மஸ்க் – கிரிம்ஸுக்கு பிறந்த மூன்றாவது குழந்தை பற்றிய தகவல் தற்போது வைரலாகி வருகின்றது.

எலான் மஸ்க், கனடாவை சேர்ந்த கிரிம்ஸ் என்பவருடன் கடந்த 2018 முதல் 2022 வரை காதலில் இருந்தார். இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்ததாகதான் இவ்வளவு காலம் அனைவரும் அறிந்ததே.

ஆனால், மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தை உள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

அந்த குழந்தையின் பெயர் டெக்னோ மெக்கானிக்கஸ் என்றும், செல்லமாக டாவ் எனப் பெயரிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இரகசியமாக வளர்க்கப்படும் இந்த குழந்தையின் வயது அல்லது பிறந்த திகதி குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கிற்கு மூன்றுமுறை விவாகரத்தாகியுள்ளது. அவருக்கு மொத்தம் 10 குழந்தைகள் உள்ளனர்.

Latest news

ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கியதால் NAB $130 மில்லியன் இழப்பை சந்திக்கும்

NAB நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக ஒரு உள் மதிப்பாய்வு கண்டறிந்ததை அடுத்து, இந்த ஆண்டு அது $130 மில்லியன் இழப்பை சந்திக்கும். சம்பளப் பிரச்சினைகளை...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...

மோடி – புட்டின் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்  ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் நேற்று தொலைபேசியில்  உரையாடியுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத் தொலைபேசி உரையாடலில்  அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப்புடன்...

பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்படுகிறது Campbell Arcade

மெல்பேர்ணின் மையப்பகுதியில் அமைந்துள்ள Campbell Arcade, இப்போது பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 1955 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள இந்த நிலத்தடி சுரங்கப்பாதை, மெட்ரோ சுரங்கப்பாதை...

பெர்த் மழைநீர் வடிகாலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல்

பெர்த்தின் வடக்கில் மழைநீர் வடிகாலில் ஒரு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதால், நகர முழுவதும் மகப்பேறு மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் அலெக்சாண்டர் ஹைட்ஸில்...