Newsஇனி வெள்ளிக்கிழமைகளிலும் Opal கட்டணச் சலுகைகள் இல்லை

இனி வெள்ளிக்கிழமைகளிலும் Opal கட்டணச் சலுகைகள் இல்லை

-

நியூ சவுத் வேல்ஸில் ஓபல் அட்டை முறைக்கு புதிய திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, போக்குவரத்து நெரிசல் இல்லாத நேரங்களில் பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு தற்போது வழங்கப்படும் 30 சதவீத கட்டணச் சலுகை வெள்ளிக்கிழமைகளிலும் வழங்கப்பட உள்ளது.

இதுவரை, இந்தச் சலுகை காலை 06.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 03 மணி முதல் இரவு 07 மணி வரையிலும், வார இறுதி நாட்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் அதிக நெரிசல் இல்லாத நேரங்களாகக் கருதப்பட்டது.

எவ்வாறாயினும், ஒரு வாரத்திற்குள் 08 பயணங்களை நிறைவு செய்யும் பயணிகளுக்கு வழங்கப்படும் கட்டணத்தில் பாதியளவிலான சலுகையை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்துள்ள பணவீக்கத்திற்கு ஏற்ப இந்த ஓபல் கட்டண சலுகை வழங்கப்படும் என நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த திருத்தங்கள் அனைத்தும் அக்டோபர் 16 முதல் அமலுக்கு வரும்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...