Breaking Newsஆஸ்திரேலியாவில் காரில் 2 கி.மீ தொலைவு இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்

ஆஸ்திரேலியாவில் காரில் 2 கி.மீ தொலைவு இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்

-

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நபர் ஒருவர் 15 வயது இளைஞரை சாலையூடாக காரில் 2 கி.மீ தொலைவு இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அந்த இளைஞர் தற்போது மருத்துவ ரீதியான கோமாவில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் நியூ சவுத் வேல்ஸ் பொலிசார் தெரிவிக்கையில்,

வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் காரில் அமர்ந்திருந்த 19 வயது நபரும், 15 வயது இளைஞனும் பிளாக்டவுனில் உள்ள தெருவில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் சட்டென்று காருடன் அந்த நபர் கிளம்ப, தவறி விழுந்த அந்த 15 வயது இளைஞர் காருடன் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். சுமார் 2 கி.மீ தொலைவு இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், அந்த இளைஞர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பிளாக்டவுன் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட, அங்கிருந்து வெஸ்ட்மீட் சிறார்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். மிக ஆபத்தான நிலையில் இருந்தாலும் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்றே மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...