Melbourneமனைவியின் பிரசவ அறுவைசிகிச்சையால் கணவனுக்கு மனநோய் - 1 பில்லியன் டொலர்...

மனைவியின் பிரசவ அறுவைசிகிச்சையால் கணவனுக்கு மனநோய் – 1 பில்லியன் டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு

-

மனைவியின் அறுவைசிகிச்சை பிரசவத்தை நேரில் பார்த்ததால் தமது மன நோய் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி மெல்போர்னில் உள்ள மருத்துவமனை மீது இழப்பீடு கேட்டு ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மெல்போர்னில் உள்ள ராயல் மகளிர் மருத்துவமனை மீது சுமார் 1 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர் இழப்பீடு கேட்டு அனில் கொப்புல என்ற அவுஸ்திரேலிய நபர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். ராயல் மகளிர் மருத்துவமனையில் கடந்த 2018 ஜனவரி மாதம் அனில் கொப்புலவின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில் மனைவியின் அறுவைசிகிச்சை பிரசவத்தை நேரில் பார்க்க அனுமதித்ததன் மூலம் தொடர்புடைய மருத்துவமனை தமக்கு செய்ய வேண்டிய கடமையை மீறியதாக கொப்புலா தமது வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாழ்க்கையை மாற்றியமைக்கும் வகையில் உளவியல் பாதிப்பை ஏற்பட்டதன் காரணமாக தனக்கு நஷ்டஈடு தர வேண்டியுள்ளதாக கொப்புலா தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, தமக்கு ஏற்பட்ட உளவியல் பாதிப்பு காரணமாக தமது திருமண உறவே பாதிக்கப்பட்டது என்றார். ஆனால் ராயல் மகளிர் மருத்துவமனை எந்த விதி மீறலையும் முன்னெடுக்கவில்லை என விளக்கமளித்துள்ளது.

அனில் கொப்புலா 1 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர் இழப்பீடு கேட்டுள்ள நிலையில் அவருக்கு மருத்துவ சோதனை முன்னெடுக்கப்பட்டது. அதில் இழப்பீடு அளிக்கும் வகையில், அவரது உளவியல் பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டது.

ஆனால் அந்த மருத்துவ ஆய்வறிக்கையையும் அவர் நிராகரித்துள்ளார். இந்த நிலையில், தொடர்புடைய விவகாரத்தில் கொப்புலாவுக்கு எந்தவிதமான பொருளாதார நஷ்டமும் ஏற்படவில்லை என்பதாலும், அவரது நோய் கடுமையான பாதிப்பு என்று கருதப்படுவதற்கான வரம்பை அடையாததாலும், கொப்புலாவுக்கு எந்த நஷ்டமும் இல்லை என்று நீதிபதி முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

Latest news

தனது சேவையை நிறுத்திய Skype

Skype ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய பிறகு அதன் வீடியோ அழைப்பு சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது. Microsoft 2011 ஆம் ஆண்டு ஸ்கைப்பை 8.5 பில்லியன் டாலருக்கு...

மனித மூளையை கொல்லும் டிஜிட்டல் திரை – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஒரு நாளைக்கு அதிக நேரம் டிஜிட்டல் திரைகளில் செலவிடுவது ஒரு நபரின் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. இது மூளையின் செயல்பாடு...

விக்டோரியாவில் ரத்து செய்யப்படும் அபாயத்தில் உள்ள பிரபலமான இசை விழா

விக்டோரியா மக்களிடையே பிரபலமான இசை விழாவாகக் கருதப்படும் "Esoteric Music Festival" நடத்துவது தொடர்பாக பல சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்த முறை மார்ச் 7 முதல் 11...

விக்டோரியர்களுக்கு எதிர்காலத்தில் எளிதாகிவிடும் விமானப் பயணம்

விக்டோரியாவில் உள்ள பல பிராந்திய விமான நிலையங்களில் வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு மேலும் 4.5 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. மத்திய அரசால் செயல்படுத்தப்படும் பிராந்திய விமான...

விக்டோரியர்களுக்கு எதிர்காலத்தில் எளிதாகிவிடும் விமானப் பயணம்

விக்டோரியாவில் உள்ள பல பிராந்திய விமான நிலையங்களில் வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு மேலும் 4.5 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. மத்திய அரசால் செயல்படுத்தப்படும் பிராந்திய விமான...

அதிகமாக சாப்பிடும் ஆஸ்திரேலியர்களுக்கு ஆபத்தில் உள்ளதாக எச்சரிக்கை

ஐந்து நாட்களுக்கு அதிகமாக சாப்பிடுவது மனித மூளையில் ஆரோக்கியமற்ற உணவு முறைகளுக்கான ஏக்கத்தை உருவாக்குகிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வில் 20 முதல்...