Melbourneமனைவியின் பிரசவ அறுவைசிகிச்சையால் கணவனுக்கு மனநோய் - 1 பில்லியன் டொலர்...

மனைவியின் பிரசவ அறுவைசிகிச்சையால் கணவனுக்கு மனநோய் – 1 பில்லியன் டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு

-

மனைவியின் அறுவைசிகிச்சை பிரசவத்தை நேரில் பார்த்ததால் தமது மன நோய் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி மெல்போர்னில் உள்ள மருத்துவமனை மீது இழப்பீடு கேட்டு ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மெல்போர்னில் உள்ள ராயல் மகளிர் மருத்துவமனை மீது சுமார் 1 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர் இழப்பீடு கேட்டு அனில் கொப்புல என்ற அவுஸ்திரேலிய நபர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். ராயல் மகளிர் மருத்துவமனையில் கடந்த 2018 ஜனவரி மாதம் அனில் கொப்புலவின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில் மனைவியின் அறுவைசிகிச்சை பிரசவத்தை நேரில் பார்க்க அனுமதித்ததன் மூலம் தொடர்புடைய மருத்துவமனை தமக்கு செய்ய வேண்டிய கடமையை மீறியதாக கொப்புலா தமது வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாழ்க்கையை மாற்றியமைக்கும் வகையில் உளவியல் பாதிப்பை ஏற்பட்டதன் காரணமாக தனக்கு நஷ்டஈடு தர வேண்டியுள்ளதாக கொப்புலா தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, தமக்கு ஏற்பட்ட உளவியல் பாதிப்பு காரணமாக தமது திருமண உறவே பாதிக்கப்பட்டது என்றார். ஆனால் ராயல் மகளிர் மருத்துவமனை எந்த விதி மீறலையும் முன்னெடுக்கவில்லை என விளக்கமளித்துள்ளது.

அனில் கொப்புலா 1 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர் இழப்பீடு கேட்டுள்ள நிலையில் அவருக்கு மருத்துவ சோதனை முன்னெடுக்கப்பட்டது. அதில் இழப்பீடு அளிக்கும் வகையில், அவரது உளவியல் பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டது.

ஆனால் அந்த மருத்துவ ஆய்வறிக்கையையும் அவர் நிராகரித்துள்ளார். இந்த நிலையில், தொடர்புடைய விவகாரத்தில் கொப்புலாவுக்கு எந்தவிதமான பொருளாதார நஷ்டமும் ஏற்படவில்லை என்பதாலும், அவரது நோய் கடுமையான பாதிப்பு என்று கருதப்படுவதற்கான வரம்பை அடையாததாலும், கொப்புலாவுக்கு எந்த நஷ்டமும் இல்லை என்று நீதிபதி முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...