Newsசிட்னி சாலை நடுவே தீப்பற்றிய லொறி - உடல் கருகி பலியான...

சிட்னி சாலை நடுவே தீப்பற்றிய லொறி – உடல் கருகி பலியான பெண்

-

சிட்னியில் விபத்தில் சிக்கி சாலை நடுவே நெருப்பு கோளமான பிக்-அப் லொறி ஒன்றில் சிக்கிக்கொண்ட பெண் ஒருவர் உடல் கருகி பலியாகியுள்ளார்.

சிட்னியின் தென்மேற்கே மெனங்கிள் சாலையில் ஒரு வாரம் முன்னர் விடிகாலை சுமார் 4.20 மணிக்கு குறித்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பிக்-அப் லொறியில் பயணித்த சேல மௌமலங்கா என்ற பெண்மணி உடல் கருகி மரணமடைந்தார்.

இவரது உறவினர் ஒருவர் பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு, காயங்களுடன் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டார். இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டதில் 37 வயதான மௌமலங்கா பயணித்த பிக்-அப் லொறி நெருப்பு கோளமாக மாறியுள்ளது.

இதில் சிக்கிக்கொண்ட அவர் பரிதாபமாக பலியானார். சிட்னியின் டோங்கன் சமூகத்தை சேர்ந்தவர் சேலா மௌமலங்கா. அவரது திடீர் மறைவு அந்த சமூக மக்களை கடுமையாக பாதித்துள்ளது.

விபத்து நடந்த பகுதியில், உங்களை மீட்க நான் இல்லாமல் போனேன் என ஒருவர் உருக்கமாக அஞ்சலி செய்துள்ளார். நீங்கள் தூக்கத்தில் இருப்பது தெரியும், எழுந்து வாருங்கள் என இன்னொருவர் பதிவு செய்துள்ளார்.

அழகான தருணங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டவர் நீங்கள், ஒரு காலத்திலும் இந்த நினைவுகள் நீங்காது என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...

பாலிக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு கடுமையான விதிகள்

பல ஆஸ்திரேலியர்கள் விடுமுறை கிடைத்தவுடன் பாலிக்குச் செல்ல ஆர்வமாக உள்ளனர். கடற்கரைக்குச் செல்ல MOPED அல்லது மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு எடுப்பது அவர்களுக்குப் பழக்கமாகிவிட்டது. ஆனால் பாலி அதிகாரிகள்...