Newsசிட்னி சாலை நடுவே தீப்பற்றிய லொறி - உடல் கருகி பலியான...

சிட்னி சாலை நடுவே தீப்பற்றிய லொறி – உடல் கருகி பலியான பெண்

-

சிட்னியில் விபத்தில் சிக்கி சாலை நடுவே நெருப்பு கோளமான பிக்-அப் லொறி ஒன்றில் சிக்கிக்கொண்ட பெண் ஒருவர் உடல் கருகி பலியாகியுள்ளார்.

சிட்னியின் தென்மேற்கே மெனங்கிள் சாலையில் ஒரு வாரம் முன்னர் விடிகாலை சுமார் 4.20 மணிக்கு குறித்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பிக்-அப் லொறியில் பயணித்த சேல மௌமலங்கா என்ற பெண்மணி உடல் கருகி மரணமடைந்தார்.

இவரது உறவினர் ஒருவர் பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு, காயங்களுடன் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டார். இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டதில் 37 வயதான மௌமலங்கா பயணித்த பிக்-அப் லொறி நெருப்பு கோளமாக மாறியுள்ளது.

இதில் சிக்கிக்கொண்ட அவர் பரிதாபமாக பலியானார். சிட்னியின் டோங்கன் சமூகத்தை சேர்ந்தவர் சேலா மௌமலங்கா. அவரது திடீர் மறைவு அந்த சமூக மக்களை கடுமையாக பாதித்துள்ளது.

விபத்து நடந்த பகுதியில், உங்களை மீட்க நான் இல்லாமல் போனேன் என ஒருவர் உருக்கமாக அஞ்சலி செய்துள்ளார். நீங்கள் தூக்கத்தில் இருப்பது தெரியும், எழுந்து வாருங்கள் என இன்னொருவர் பதிவு செய்துள்ளார்.

அழகான தருணங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டவர் நீங்கள், ஒரு காலத்திலும் இந்த நினைவுகள் நீங்காது என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

மேற்கு ஆஸ்திரேலிய மக்கள் தடுப்பூசி பெறுவது கட்டாயம் – சுகாதார அதிகாரிகள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் காய்ச்சல் தடுப்பூசி போடுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது . தேசிய நோய்த்தடுப்பு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி, மேற்கு ஆஸ்திரேலியாவில் 65 வயதுக்குட்பட்டவர்களில் காய்ச்சல்...

நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்கும் ANZ வங்கி

ரிசர்வ் வங்கியின் அடுத்த பணவியல் கொள்கை நடவடிக்கைக்கு இன்னும் 11 நாட்கள் மீதமுள்ள நிலையில், நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்க ANZ வங்கிக்கு ரிசர்வ் வங்கி...

வரி விதிப்புக்கு எதிராக விக்டோரியன் நாடாளுமன்றம் அருகே போராட்டம்

விக்டோரியன் பாராளுமன்றத்திற்கு அருகில் தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் இணைந்தனர். விக்டோரியாவின் முன்மொழியப்பட்ட அவசர சேவை வரியை எதிர்த்துப் போராடுவதற்காக அவர்கள் நாடாளுமன்றத்தின் படிகளில்...

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

மெல்பேர்ண் புறநகர்ப் பகுதியில் கங்காருவை கொடுமைப்படுத்திய இருவர்ன கைது

நகரின் முக்கிய புறநகர்ப் பகுதியில் ஒரு கங்காருவை கொடூரமாகக் கொடுமைப்படுத்தியதாகக் கூறி, இரண்டு ஆண்கள் மீது போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். ஏப்ரல் 23 ஆம் திகதி இரவு...

வரி விதிப்புக்கு எதிராக விக்டோரியன் நாடாளுமன்றம் அருகே போராட்டம்

விக்டோரியன் பாராளுமன்றத்திற்கு அருகில் தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் இணைந்தனர். விக்டோரியாவின் முன்மொழியப்பட்ட அவசர சேவை வரியை எதிர்த்துப் போராடுவதற்காக அவர்கள் நாடாளுமன்றத்தின் படிகளில்...