News13 அடி நீள முதலையை சுட்டு கொன்ற புளோரிடா அதிகாரிகள்

13 அடி நீள முதலையை சுட்டு கொன்ற புளோரிடா அதிகாரிகள்

-

அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் புளோரிடா. இதன் தலைநகரம் டல்லஹாசீ. இம்மாநிலத்தின் மத்திய மேற்கு பகுதியில் பினாலஸ் கவுன்டி பகுதி அமைந்துள்ளது.

இப்பகுதியின் ஷெரீப் அலுவலகத்திற்கு அங்குள்ள நீர்நிலை ஒன்றில் ஒரு உடல் தென்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து உடனடியாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

சம்பவ இடமான ரிட்ஜ்க்ரெஸ்ட் பகுதியில் 121-வது தெருவிற்கும் 134-வது வடக்கு நிழற்சாலைக்கும் அருகில் உள்ள நீர்நிலையில் ஒரு 13-அடி நீள முதலை தென்பட்டுள்ளது.

அதன் வாயில் ஒரு மனித உடலின் பாகம் தெரிந்தது. இதனையடுத்து ஷெரீப் உத்தரவின் பேரில் அந்த முதலை சுடப்பட்டது.

அதிகாரிகள் அதன் வாயிலிருந்த மனித உடல் பாகங்களை ஆய்வுக்காக பத்திரமாக வெளியில் எடுத்துள்ளனர்.

இந்த நடவடிக்கைக்கு ஷெரீப் அலுவலகத்தினருடன் அம்மாநில மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளும் இணைந்து செயற்பட்டுள்ளனர்.

விசாரணையில், இறந்தது 41 வயதான சப்ரீனா பெக்காம் எனும் பெண்மணி என தெரிய வந்துள்ளது. சில மணி நேரம் நடைபெற்ற இந்த நடவடிக்கையை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியி அடைந்துள்ளனர்.

Latest news

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழியை வெளிப்படுத்தும் நுகர்வோர் ஆணையம்

கூடுதல் பணத்தை மிச்சப்படுத்த ஆஸ்திரேலியர்கள் எரிசக்தி சப்ளையர்களை மாற்றுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். தேசியத் தலைவர் டேவிட் லிட்டில்பிரவுட், எரிசக்தி விலைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், எரிசக்தி...

விக்டோரியாவில் அதிகரித்து வரும் கத்திக்குத்து சம்பவங்கள்

விக்டோரியாவில் 2025 டிசம்பர் பிற்பகுதியிலிருந்து தொடர்ச்சியான கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆறு நாட்களுக்கு முன்பு ஃபிட்ஸ்ராய் மற்றும் கிளைடில் நடந்த கத்திக்குத்து சம்பவங்களில் இரண்டு பேர் இறந்ததைத்...

குயின்ஸ்லாந்தில் 200மிமீக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

நூற்றுக்கணக்கான மில்லிமீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், குயின்ஸ்லாந்து மக்கள் திடீர் வெள்ளத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். Carpentaria வளைகுடாவிலிருந்து கிழக்கு கடற்கரை வரை மாநிலத்தின் முழு...

ஆயிரக்கணக்கான சட்டவிரோத மின்சார வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

குயின்ஸ்லாந்து முழுவதும் சட்டவிரோத மின்-ஸ்கூட்டர் மற்றும் மின்-பைக் பயன்பாட்டை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட நடவடிக்கையில் 2000க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் முதல் டிசம்பர் 23 வரை,...

குயின்ஸ்லாந்தில் 200மிமீக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

நூற்றுக்கணக்கான மில்லிமீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், குயின்ஸ்லாந்து மக்கள் திடீர் வெள்ளத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். Carpentaria வளைகுடாவிலிருந்து கிழக்கு கடற்கரை வரை மாநிலத்தின் முழு...

மருத்துவ மையத்தின் மீது பேருந்து மோதி விபத்து

சிட்னி வடக்கின் Rydeல் உள்ள ஒரு மருத்துவ மையத்தின் மீது பேருந்து மோதியதில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை 9...