News13 அடி நீள முதலையை சுட்டு கொன்ற புளோரிடா அதிகாரிகள்

13 அடி நீள முதலையை சுட்டு கொன்ற புளோரிடா அதிகாரிகள்

-

அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் புளோரிடா. இதன் தலைநகரம் டல்லஹாசீ. இம்மாநிலத்தின் மத்திய மேற்கு பகுதியில் பினாலஸ் கவுன்டி பகுதி அமைந்துள்ளது.

இப்பகுதியின் ஷெரீப் அலுவலகத்திற்கு அங்குள்ள நீர்நிலை ஒன்றில் ஒரு உடல் தென்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து உடனடியாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

சம்பவ இடமான ரிட்ஜ்க்ரெஸ்ட் பகுதியில் 121-வது தெருவிற்கும் 134-வது வடக்கு நிழற்சாலைக்கும் அருகில் உள்ள நீர்நிலையில் ஒரு 13-அடி நீள முதலை தென்பட்டுள்ளது.

அதன் வாயில் ஒரு மனித உடலின் பாகம் தெரிந்தது. இதனையடுத்து ஷெரீப் உத்தரவின் பேரில் அந்த முதலை சுடப்பட்டது.

அதிகாரிகள் அதன் வாயிலிருந்த மனித உடல் பாகங்களை ஆய்வுக்காக பத்திரமாக வெளியில் எடுத்துள்ளனர்.

இந்த நடவடிக்கைக்கு ஷெரீப் அலுவலகத்தினருடன் அம்மாநில மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளும் இணைந்து செயற்பட்டுள்ளனர்.

விசாரணையில், இறந்தது 41 வயதான சப்ரீனா பெக்காம் எனும் பெண்மணி என தெரிய வந்துள்ளது. சில மணி நேரம் நடைபெற்ற இந்த நடவடிக்கையை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியி அடைந்துள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியாவின் சிறந்த 10 கடற்கரைகள் எவை தெரியுமா?

2025 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆஸ்திரேலியாவின் சிறந்த 10 கடற்கரைகள் வெளியிடப்பட்டுள்ளன. முதல் இடத்தை டாஸ்மேனியா கடற்கரையில் உள்ள Bay of Fires பிடித்துள்ளது . இந்த...

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்திய குடியேறிகளின் நிலை

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்திய குடியேறிகள் குழு ஒன்று, அதிபர் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் பேசியுள்ளது. கடந்த புதன்கிழமை வட இந்தியாவில் நூறு இந்திய குடியேறிகளை...

கோவிட்-19ஆல் வேறு அரிய நோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக தகவல்

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்களில் COVID-19 நோயால் இறந்தவர்களில் எட்டு அரிய நோய்கள் அடையாளம் காணப்பட்டதாக லான்செட் டிஜிட்டல் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எதிர்கால தொற்றுநோய் திட்டமிடல்...

நெருக்கடியில் உள்ள மேற்கு ஆஸ்திரேலியாவின் சுகாதார சேவை

மேற்கு ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டுப் பணியாளர்களுக்குப் பதிலாக உள்ளூர் சுகாதாரப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியத்தை மருத்துவ சங்கம் வலியுறுத்துகிறது. தற்போது அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்...

கோவிட்-19ஆல் வேறு அரிய நோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக தகவல்

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்களில் COVID-19 நோயால் இறந்தவர்களில் எட்டு அரிய நோய்கள் அடையாளம் காணப்பட்டதாக லான்செட் டிஜிட்டல் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எதிர்கால தொற்றுநோய் திட்டமிடல்...

வார இறுதியில் வடக்கு குயின்ஸ்லாந்தில் மேலும் வெள்ள அபாய எச்சரிக்கை

வார இறுதியில் வடக்கு குயின்ஸ்லாந்து மக்களுக்கு மேலும் வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. டவுன்ஸ்வில்லுக்கு தெற்கே ஹௌடன் ஆற்றின் குறுக்கே உள்ள கெய்ர்ன்ஸ் முதல் ராக்ஹாம்ப்டன் வரையிலான பகுதி,...