Newsநகரின் மையத்தில் உள்ள பசுமை வீடு - கழுகாய் சுற்றும் ரியல்...

நகரின் மையத்தில் உள்ள பசுமை வீடு – கழுகாய் சுற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள்

-

அவுஸ்திரேலியாவில் 30 மில்லியன் டொலர்கள் வரை விலை கொடுக்க பலர் தயாராக இருக்கும் நிலையிலும் நகரின் மையத்தில் வீட்டுடன் இருக்கும் நிலத்தை விற்க ஜம்மித் என்பவரின் குடும்பம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி புறநகர் பகுதியில் ஜம்மித் என்பவரின் குடும்பத்திற்கு சொந்தமான 1.9 ஹெக்டேர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் நடுவே 5 படுக்கையறைகள் கொண்ட வீடு ஒன்றில் ஜம்மித் என்பவரது குடும்பம் வசித்து வருகின்றனர்.

இந்த வீட்டின் சிறப்பம்சம் என்னவென்றால் இவர்களது வீடு அமைந்துள்ள நிலப்பகுதியை சுற்றியுள்ள பிற பகுதிகள் முழுவதும் வீடுகள் அடுத்தடுத்து அமைந்துள்ளன.

ஆனால் இவர்களது வீடு மட்டும் சுற்றிலும் பச்சையாக இயற்கையான அமைப்புடன் பெரும் நிலத்திற்கு நடுவே வீடு அமைந்துள்ளதால் மிகவும் அழகாக உள்ளது.

இந்நிலையில் ஜம்மித்தின் நிலத்தை எப்படியாவது வாங்கி அதில் வீடுகளை கட்டி விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கில் பல ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் நிலத்தை வாங்க 10 ஆண்டுகளுக்கு மேல் முயற்சித்து வருகின்றனர்.

சமீபத்தில் இதற்காக 30 மில்லியன் டொலர் வரை ஜம்மித் குடும்பத்திற்கு வழங்க ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் முன்வந்துள்ளனர்.

ஆனால் ஜம்மித் குடும்பத்தினர் அவர்களது அழகான நிலத்தை விற்பனை செய்ய மறுப்பு தெரிவித்து விட்டனர்.

இது தொடர்பாக ஜம்மித் குடும்ப உறுப்பினர் டையானே ஜம்மித் பேசிய போது, இந்த பகுதி முழுவதும் ஒரு காலத்தில் விவசாய பகுதியாக இருந்தது, அதனால் இங்கு பண்ணை வீடுகள் மட்டுமே இருந்தது.

ஆனால் தற்போது எங்கு பார்த்தாலும் வீடுகளாக உள்ளது, இருப்பினும் எங்களுக்கு இயற்கையான சூழலை விட்டு வெளியேற மனம் வரவில்லை, அதனால் இந்த நிலத்தை விற்பனை செய்யப்போவது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Latest news

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...

பாலிக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு கடுமையான விதிகள்

பல ஆஸ்திரேலியர்கள் விடுமுறை கிடைத்தவுடன் பாலிக்குச் செல்ல ஆர்வமாக உள்ளனர். கடற்கரைக்குச் செல்ல MOPED அல்லது மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு எடுப்பது அவர்களுக்குப் பழக்கமாகிவிட்டது. ஆனால் பாலி அதிகாரிகள்...