Newsநகரின் மையத்தில் உள்ள பசுமை வீடு - கழுகாய் சுற்றும் ரியல்...

நகரின் மையத்தில் உள்ள பசுமை வீடு – கழுகாய் சுற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள்

-

அவுஸ்திரேலியாவில் 30 மில்லியன் டொலர்கள் வரை விலை கொடுக்க பலர் தயாராக இருக்கும் நிலையிலும் நகரின் மையத்தில் வீட்டுடன் இருக்கும் நிலத்தை விற்க ஜம்மித் என்பவரின் குடும்பம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி புறநகர் பகுதியில் ஜம்மித் என்பவரின் குடும்பத்திற்கு சொந்தமான 1.9 ஹெக்டேர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் நடுவே 5 படுக்கையறைகள் கொண்ட வீடு ஒன்றில் ஜம்மித் என்பவரது குடும்பம் வசித்து வருகின்றனர்.

இந்த வீட்டின் சிறப்பம்சம் என்னவென்றால் இவர்களது வீடு அமைந்துள்ள நிலப்பகுதியை சுற்றியுள்ள பிற பகுதிகள் முழுவதும் வீடுகள் அடுத்தடுத்து அமைந்துள்ளன.

ஆனால் இவர்களது வீடு மட்டும் சுற்றிலும் பச்சையாக இயற்கையான அமைப்புடன் பெரும் நிலத்திற்கு நடுவே வீடு அமைந்துள்ளதால் மிகவும் அழகாக உள்ளது.

இந்நிலையில் ஜம்மித்தின் நிலத்தை எப்படியாவது வாங்கி அதில் வீடுகளை கட்டி விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கில் பல ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் நிலத்தை வாங்க 10 ஆண்டுகளுக்கு மேல் முயற்சித்து வருகின்றனர்.

சமீபத்தில் இதற்காக 30 மில்லியன் டொலர் வரை ஜம்மித் குடும்பத்திற்கு வழங்க ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் முன்வந்துள்ளனர்.

ஆனால் ஜம்மித் குடும்பத்தினர் அவர்களது அழகான நிலத்தை விற்பனை செய்ய மறுப்பு தெரிவித்து விட்டனர்.

இது தொடர்பாக ஜம்மித் குடும்ப உறுப்பினர் டையானே ஜம்மித் பேசிய போது, இந்த பகுதி முழுவதும் ஒரு காலத்தில் விவசாய பகுதியாக இருந்தது, அதனால் இங்கு பண்ணை வீடுகள் மட்டுமே இருந்தது.

ஆனால் தற்போது எங்கு பார்த்தாலும் வீடுகளாக உள்ளது, இருப்பினும் எங்களுக்கு இயற்கையான சூழலை விட்டு வெளியேற மனம் வரவில்லை, அதனால் இந்த நிலத்தை விற்பனை செய்யப்போவது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Latest news

அடுத்த பத்து ஆண்டுகளுக்கு மின்சாரக் கட்டணம் தொடர்ந்து உயருமா?

அடுத்த பத்தாண்டுகளில் மின்சாரக் கட்டணங்கள் உயரும் என்று ஆஸ்திரேலிய குடும்பங்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி ஜாம்பவான்களான AGL, EnergyAustralia மற்றும் Origin ஆகியவற்றை உள்ளடக்கிய ஆஸ்திரேலிய எரிசக்தி கவுன்சில்...

பள்ளிகளுக்குள் மிரட்டல் விடுக்கும் பெற்றோருக்கு கடுமையான தண்டனை

தெற்கு ஆஸ்திரேலிய பள்ளிகளில் துஷ்பிரயோகம் செய்யும் பெற்றோரின் ஆபத்தான அதிகரிப்பு காரணமாக புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று அமுலுக்கு வந்த இந்தச் சட்டத்தின் கீழ், பள்ளிகளில் வன்முறை,...

ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான Contact Lens மறுசுழற்சி செய்யும் முறை!

ஆஸ்திரேலியா முழுவதும் பிளாஸ்டிக் Contact Lens பாக்கெட்டுகளை மறுசுழற்சி செய்வதற்கான ஒரு எளிய வழி தொடங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 700,000 ஆஸ்திரேலியர்கள் தினசரி அல்லது மாதாந்திர Lens அணிகிறார்கள்....

விக்டோரியன் லிபரல் கட்சிக்கு புதிய தலைவர்

விக்டோரியன் லிபரல் கட்சி தனது புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஜெஸ் வில்சனைத் தேர்ந்தெடுத்துள்ளது. வில்சன் 19-13 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றார். விக்டோரியன் லிபரல் கட்சியை வழிநடத்தும்...

விக்டோரியன் லிபரல் கட்சிக்கு புதிய தலைவர்

விக்டோரியன் லிபரல் கட்சி தனது புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஜெஸ் வில்சனைத் தேர்ந்தெடுத்துள்ளது. வில்சன் 19-13 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றார். விக்டோரியன் லிபரல் கட்சியை வழிநடத்தும்...

கிறிஸ்தவர்கள் அதிகம் துன்புறுத்தப்படுகின்றனர் – பாப்பரசர் பகிரங்க குற்றச்சாட்டு

பங்களாதேஷ் உட்பட பல நாடுகளில் கிறிஸ்தவர்கள் அதிக துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக பாப்பரசர் லியோ கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பாப்பரசர் 16ஆம் லியோ, சமூக வலைதளத்தில் ஒரு...