Newsநகரின் மையத்தில் உள்ள பசுமை வீடு - கழுகாய் சுற்றும் ரியல்...

நகரின் மையத்தில் உள்ள பசுமை வீடு – கழுகாய் சுற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள்

-

அவுஸ்திரேலியாவில் 30 மில்லியன் டொலர்கள் வரை விலை கொடுக்க பலர் தயாராக இருக்கும் நிலையிலும் நகரின் மையத்தில் வீட்டுடன் இருக்கும் நிலத்தை விற்க ஜம்மித் என்பவரின் குடும்பம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி புறநகர் பகுதியில் ஜம்மித் என்பவரின் குடும்பத்திற்கு சொந்தமான 1.9 ஹெக்டேர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் நடுவே 5 படுக்கையறைகள் கொண்ட வீடு ஒன்றில் ஜம்மித் என்பவரது குடும்பம் வசித்து வருகின்றனர்.

இந்த வீட்டின் சிறப்பம்சம் என்னவென்றால் இவர்களது வீடு அமைந்துள்ள நிலப்பகுதியை சுற்றியுள்ள பிற பகுதிகள் முழுவதும் வீடுகள் அடுத்தடுத்து அமைந்துள்ளன.

ஆனால் இவர்களது வீடு மட்டும் சுற்றிலும் பச்சையாக இயற்கையான அமைப்புடன் பெரும் நிலத்திற்கு நடுவே வீடு அமைந்துள்ளதால் மிகவும் அழகாக உள்ளது.

இந்நிலையில் ஜம்மித்தின் நிலத்தை எப்படியாவது வாங்கி அதில் வீடுகளை கட்டி விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கில் பல ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் நிலத்தை வாங்க 10 ஆண்டுகளுக்கு மேல் முயற்சித்து வருகின்றனர்.

சமீபத்தில் இதற்காக 30 மில்லியன் டொலர் வரை ஜம்மித் குடும்பத்திற்கு வழங்க ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் முன்வந்துள்ளனர்.

ஆனால் ஜம்மித் குடும்பத்தினர் அவர்களது அழகான நிலத்தை விற்பனை செய்ய மறுப்பு தெரிவித்து விட்டனர்.

இது தொடர்பாக ஜம்மித் குடும்ப உறுப்பினர் டையானே ஜம்மித் பேசிய போது, இந்த பகுதி முழுவதும் ஒரு காலத்தில் விவசாய பகுதியாக இருந்தது, அதனால் இங்கு பண்ணை வீடுகள் மட்டுமே இருந்தது.

ஆனால் தற்போது எங்கு பார்த்தாலும் வீடுகளாக உள்ளது, இருப்பினும் எங்களுக்கு இயற்கையான சூழலை விட்டு வெளியேற மனம் வரவில்லை, அதனால் இந்த நிலத்தை விற்பனை செய்யப்போவது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...