Newsநகரின் மையத்தில் உள்ள பசுமை வீடு - கழுகாய் சுற்றும் ரியல்...

நகரின் மையத்தில் உள்ள பசுமை வீடு – கழுகாய் சுற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள்

-

அவுஸ்திரேலியாவில் 30 மில்லியன் டொலர்கள் வரை விலை கொடுக்க பலர் தயாராக இருக்கும் நிலையிலும் நகரின் மையத்தில் வீட்டுடன் இருக்கும் நிலத்தை விற்க ஜம்மித் என்பவரின் குடும்பம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி புறநகர் பகுதியில் ஜம்மித் என்பவரின் குடும்பத்திற்கு சொந்தமான 1.9 ஹெக்டேர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் நடுவே 5 படுக்கையறைகள் கொண்ட வீடு ஒன்றில் ஜம்மித் என்பவரது குடும்பம் வசித்து வருகின்றனர்.

இந்த வீட்டின் சிறப்பம்சம் என்னவென்றால் இவர்களது வீடு அமைந்துள்ள நிலப்பகுதியை சுற்றியுள்ள பிற பகுதிகள் முழுவதும் வீடுகள் அடுத்தடுத்து அமைந்துள்ளன.

ஆனால் இவர்களது வீடு மட்டும் சுற்றிலும் பச்சையாக இயற்கையான அமைப்புடன் பெரும் நிலத்திற்கு நடுவே வீடு அமைந்துள்ளதால் மிகவும் அழகாக உள்ளது.

இந்நிலையில் ஜம்மித்தின் நிலத்தை எப்படியாவது வாங்கி அதில் வீடுகளை கட்டி விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கில் பல ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் நிலத்தை வாங்க 10 ஆண்டுகளுக்கு மேல் முயற்சித்து வருகின்றனர்.

சமீபத்தில் இதற்காக 30 மில்லியன் டொலர் வரை ஜம்மித் குடும்பத்திற்கு வழங்க ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் முன்வந்துள்ளனர்.

ஆனால் ஜம்மித் குடும்பத்தினர் அவர்களது அழகான நிலத்தை விற்பனை செய்ய மறுப்பு தெரிவித்து விட்டனர்.

இது தொடர்பாக ஜம்மித் குடும்ப உறுப்பினர் டையானே ஜம்மித் பேசிய போது, இந்த பகுதி முழுவதும் ஒரு காலத்தில் விவசாய பகுதியாக இருந்தது, அதனால் இங்கு பண்ணை வீடுகள் மட்டுமே இருந்தது.

ஆனால் தற்போது எங்கு பார்த்தாலும் வீடுகளாக உள்ளது, இருப்பினும் எங்களுக்கு இயற்கையான சூழலை விட்டு வெளியேற மனம் வரவில்லை, அதனால் இந்த நிலத்தை விற்பனை செய்யப்போவது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Latest news

சமூக ஊடகங்களின் அச்சுறுத்தலில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற மற்றொரு முயற்சி

நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா பிரச்சாரம், சமூக ஊடகங்களின் அச்சுறுத்தலில் இருந்து ஆஸ்திரேலியாவின் குழந்தைகளைக் காப்பாற்ற அரசாங்கத்தை கட்டாயப்படுத்தும் ஆன்லைன் மனுவில் கையெழுத்திட திட்டமிட்டுள்ளது. நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா...

அதிவேக ஆம்புலன்ஸ் சேவை கொண்ட மாநிலங்களின் பட்டியல் இதோ!

ஆஸ்திரேலியா மாநிலங்களில் அவசர அழைப்புகளுக்கு விரைவாக பதிலளிக்கும் ஆம்புலன்ஸ் சேவை பற்றிய சமீபத்திய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 3 ஆண்டுகளுக்குப் பிறகு, தெற்கு ஆஸ்திரேலிய ஆம்புலன்ஸ் சேவை...

விக்டோரியாவின் மக்கள் தொகை பற்றி வெளியான புதிய தகவல்

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளரும் மாநிலமாக விக்டோரியா அடையாளம் காணப்பட்டுள்ளது. 2022-2023 நிதியாண்டிற்கான புள்ளியியல் தரவுகளின்படி, மெல்போர்னின் மக்கள்தொகை 3.3 சதவீதம் அதிகரித்துள்ளது, இது விக்டோரியாவின் மற்ற பகுதிகளுடன்...

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு வயதுக் கட்டுப்பாடுகள்

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு வயதுக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கைகள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், இணையத்தில் குழந்தைகளின்...

போண்டாய் சந்தியில் வாள்வெட்டுக்கு இலக்கானவரின் தாயார் அரசாங்கத்திடம் விடுத்துள்ள வேண்டுகோள்

போண்டாய் சந்தியில் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவரின் தாயொருவர் அரசாங்கத்திடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளார். இந்த குற்றத்தில் ஈடுபட்ட நபரைப் போன்ற மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல நிதி மற்றும்...

கைது செய்யப்பட்ட மெல்போர்னில் போராட்டக்காரர்கள்

மெல்போர்னின் CBD இல் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆதரவு போராட்ட குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு தனித்தனி கூட்டங்களிலும் சுமார்...