Cinemaபூகம்பமாக வெடிக்கும் ARR விவகாரம்- "உங்களுக்கு 15 நாள் தான் டைம்"

பூகம்பமாக வெடிக்கும் ARR விவகாரம்- “உங்களுக்கு 15 நாள் தான் டைம்”

-

2018-ல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான மாநாட்டில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இசை நிகழ்ச்சிக்காக ஏ.ஆர். ரகுமானுக்கு ரூ.29.50 லட்சம் (இந்திய ரூபா) முன் பணம் வழங்கப்பட்டது.

இசை நிகழ்ச்சி நடைபெறாத நிலையில் அந்த தொகையை திரும்ப தருமாறு ஏஆர் ரகுமானுக்கு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

ஆனால், ஏ.ஆர். ரகுமான் முன்பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பி தரவில்லை” எனக் கூறப்பட்டிருந்தது. தொடர்ந்து, “ஏ.ஆர்.ரகுமான் அவரது செயலாளர் செந்தில் வேலவன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் மேலாளரும், தி குரூப் நிறுவனத்தின் உரிமையாளருமான செந்தில் வேலவன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில், “அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் அளித்த புகாருக்கும், ஏ.ஆர். ரஹ்மானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்தச் சங்கத்திடம் இருந்து இசை நிகழ்சசி நடத்த ரூ.29.50 லட்சம் வாங்கப்பட்டது.

இதற்கிடையில் நிகழ்ச்சி நடத்துவதற்கான தொகை அதிகரிப்பு காரணமாக அவர்கள் நிகழ்ச்சியை ரத்து செய்தனர். ரத்து செய்தாலும் முன்பணத்தொகை திருப்பி வழங்கப்பட மாட்டாது என்பது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அனைத்து இசை நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் இந்திய அறுவைசிகிச்சை நிபுனர்கள் சங்கத்திற்கு எதிராக எ அர் ரஹ்மான் அவதுாறு வழக்கு தொடர்ந்தார். இதை எதிர்த்து அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் பதில் நோட்டீஸ் அனுப்பியதால் பரபரப்பு நிலை ஏற்பட்டது.

அந்த நோட்டீஸில் ஏ.ஆர்.ரஹ்மான் தங்கள் சங்கத்திடம் உடனடியாக நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்க ​வேண்டும் என்றும், நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் ரூ.15 கோடி செலுத்த வேண்டுமென்றும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

தன் தோழிகளை 10 வருடங்கள் ஏமாற்றிய பெண்ணுக்கு கிடைத்த தண்டனை

இறுதி நிலை புற்றுநோய் இருப்பது போல் நடித்து மக்களை ஏமாற்றிய ஒரு பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பத்து வருடங்களுக்கும் மேலாக, Amanda Power என்ற பெண் தான்...

மின்சார சேமிப்பு குறித்து நுகர்வோர் ஆணையம் விசாரணை

ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (ACCC), எரிசக்தி சேமிப்பு பொருட்களை தவறாக விளம்பரப்படுத்தும் வணிகங்களை விசாரிக்கத் தயாராகி வருகிறது. இந்த விசாரணை தொடர்பாக ஆஸ்திரேலிய நுகர்வோர்...

நெதன்யாகுவின் கடிதத்திற்கு அல்பானீஸ் அளித்த பதில்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், உலகத் தலைவர்களை மரியாதையுடன் நடத்துவதாகக் கூறுகிறார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அல்பானீஸ் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக உறுதியளித்ததாகவும், தீவிர...

அதிகரித்து வரும் கட்டணங்களால் குளிரில் வாடும் ஆஸ்திரேலியர்கள்

வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் ஹீட்டர்களின் பயன்பாட்டைக் குறைத்துள்ளதாக ஒரு புதிய கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. அதிக மின்சாரக் கட்டணங்களைத் தவிர்ப்பதற்காக ஆஸ்திரேலியர்களில் 13...

அதிகரித்து வரும் கட்டணங்களால் குளிரில் வாடும் ஆஸ்திரேலியர்கள்

வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் ஹீட்டர்களின் பயன்பாட்டைக் குறைத்துள்ளதாக ஒரு புதிய கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. அதிக மின்சாரக் கட்டணங்களைத் தவிர்ப்பதற்காக ஆஸ்திரேலியர்களில் 13...

குற்றங்கள் பற்றிய தகவல்களைப் பரப்புபவர்களுக்கு ஒரு அறிவிப்பு

அனைத்து ஆஸ்திரேலியர்களும் குழு அரட்டைகளிலோ அல்லது சமூக ஊடகங்களிலோ குற்றம் மற்றும் சந்தேகத்திற்கிடமான நடத்தை பற்றி பதிவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். குற்றங்கள் பற்றிய தகவல்களை...