Cinemaபூகம்பமாக வெடிக்கும் ARR விவகாரம்- "உங்களுக்கு 15 நாள் தான் டைம்"

பூகம்பமாக வெடிக்கும் ARR விவகாரம்- “உங்களுக்கு 15 நாள் தான் டைம்”

-

2018-ல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான மாநாட்டில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இசை நிகழ்ச்சிக்காக ஏ.ஆர். ரகுமானுக்கு ரூ.29.50 லட்சம் (இந்திய ரூபா) முன் பணம் வழங்கப்பட்டது.

இசை நிகழ்ச்சி நடைபெறாத நிலையில் அந்த தொகையை திரும்ப தருமாறு ஏஆர் ரகுமானுக்கு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

ஆனால், ஏ.ஆர். ரகுமான் முன்பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பி தரவில்லை” எனக் கூறப்பட்டிருந்தது. தொடர்ந்து, “ஏ.ஆர்.ரகுமான் அவரது செயலாளர் செந்தில் வேலவன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் மேலாளரும், தி குரூப் நிறுவனத்தின் உரிமையாளருமான செந்தில் வேலவன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில், “அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் அளித்த புகாருக்கும், ஏ.ஆர். ரஹ்மானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்தச் சங்கத்திடம் இருந்து இசை நிகழ்சசி நடத்த ரூ.29.50 லட்சம் வாங்கப்பட்டது.

இதற்கிடையில் நிகழ்ச்சி நடத்துவதற்கான தொகை அதிகரிப்பு காரணமாக அவர்கள் நிகழ்ச்சியை ரத்து செய்தனர். ரத்து செய்தாலும் முன்பணத்தொகை திருப்பி வழங்கப்பட மாட்டாது என்பது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அனைத்து இசை நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் இந்திய அறுவைசிகிச்சை நிபுனர்கள் சங்கத்திற்கு எதிராக எ அர் ரஹ்மான் அவதுாறு வழக்கு தொடர்ந்தார். இதை எதிர்த்து அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் பதில் நோட்டீஸ் அனுப்பியதால் பரபரப்பு நிலை ஏற்பட்டது.

அந்த நோட்டீஸில் ஏ.ஆர்.ரஹ்மான் தங்கள் சங்கத்திடம் உடனடியாக நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்க ​வேண்டும் என்றும், நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் ரூ.15 கோடி செலுத்த வேண்டுமென்றும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

இஸ்ரேலிய ஜனாதிபதியின் ஆஸ்திரேலிய பயணம் குறித்து அல்பானீஸ் சிறப்பு அறிக்கை

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் ஆஸ்திரேலியா பயணம் குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது முடிவை ஆதரித்துள்ளார். டிசம்பர் 14 ஆம் திகதி Bondi...

அமெரிக்க-ரஷ்யா அணுசக்தி ஒப்பந்தத்தின் முடிவு உலக முடிவின் தொடக்கமா?

உலகின் இரண்டு சக்திவாய்ந்த அணுசக்தி நாடுகளான அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளதால், உலகம் கடுமையான ஆபத்தை எதிர்கொள்கிறது...

குழந்தை பருவ தடுப்பூசிகள் இல்லாததால் ஆஸ்திரேலியாவில் ஆபத்து உள்ள குழந்தைகளின் உயிர்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் Whooping இருமல் நோய் வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலியாவில் இப்போது அதிக எண்ணிக்கையிலான...

12 மற்றும் 13 வயதுடைய இரு NSW சிறுவர்கள் பல கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது

நியூ சவுத் வேல்ஸின் Upper Hunter Shire-இல் உள்ள Scone நகரில் ஒரு கடையில் நடந்த கொள்ளை தொடர்பாக 12 மற்றும் 13 வயதுடைய இரண்டு...

12 மற்றும் 13 வயதுடைய இரு NSW சிறுவர்கள் பல கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது

நியூ சவுத் வேல்ஸின் Upper Hunter Shire-இல் உள்ள Scone நகரில் ஒரு கடையில் நடந்த கொள்ளை தொடர்பாக 12 மற்றும் 13 வயதுடைய இரண்டு...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள்

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக தனிநபர்களால் நடத்தப்படும் பயங்கரவாதச் செயல்களை அடையாளம் காண்பது ஒரு பெரிய சவாலாக இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆன்லைனில் செயல்படும்...