Sports81 ஓட்டங்களால் நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி - உலக கிண்ண...

81 ஓட்டங்களால் நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி – உலக கிண்ண தொடர் 2023

-

உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்று ஹைத்ராபாத்தில் இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி 81 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

இதன்படி பாகிஸ்தான் அணி 49 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 286 ஓட்டங்களை பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பாக Saud Shakeel மற்றும் Mohammad Rizwan ஆகியோர் தலா 68 ஓட்டங்களை பெற்றனர்.

நெதர்லாந்து அணி சார்பில் Bas de Leede, 62 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை பெற்றார்.

பதிலுக்கு 287 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய நெதர்லாந்து அணி 41 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 205 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

நெதர்லாந்து அணி சார்பில் Bas de Leede, 67 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக Haris Rauf, 3 விக்கெட்டுக்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Latest news

கடல் குதிரைகளை உயிர்ப்பிக்க புதிய திட்டம்

1,200க்கும் மேற்பட்ட பூர்வீக கடல் குதிரைகள் கடலோரப் பகுதிகளில் விடப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கடுமையான பேரழிவுகள் காரணமாக, இந்த பூர்வீக கடல்...

அரை மணி நேரத்தில் $500 சம்பாதிக்க ஒரு ஆஸ்திரேலியரிடமிருந்து ஒரு புதிய வழி

ஒரு ஆஸ்திரேலியர் புதிய கண்டுபிடிப்பு மூலம் 30 நிமிடங்களில் 500 டாலர் சம்பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Matt Carpenter சமீபத்தில் பல்வேறு கடைகளில் வாங்கிய பழைய பொருட்களை ஆன்லைனில்...

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...