Newsமறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியை கொலை செய்ய முயன்ற இந்தியர்

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியை கொலை செய்ய முயன்ற இந்தியர்

-

இங்கிலாந்தில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியை கொலை செய்ய முயன்ற இந்தியருக்கு 9 ஆண்டுகள் கடுழிய சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லண்டனில் இந்திய வம்சாவளியான ஜஸ்வந்த் சிங் சைலு என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்றுள்ளார். முகமூடி அணிந்து சென்ற அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் பிடித்தனர். இதனையடுத்து இவரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

அதாவது 1919 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிவாங்க மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியை கொலை செய்யும் நோக்கத்தில் தான் இங்கு வந்ததாக தெரிவித்தார். இதனையடுத்து அவரை கைது செய்த பொலிஸார் அவருக்கு மனநல பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இது குறித்த வழக்கு விசாரணை அந்த நாட்டின் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது. இதில் ஜஸ்வந்த் சிங் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் அவருக்கு 9 ஆண்டுகள் கடுழிய சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Latest news

வேலைகளில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றி நடத்தப்படும் ஆராய்ச்சி

ஆஸ்திரேலியர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்த AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து ஒரு முக்கியமான உரையாடல் நடைபெற்று வருகிறது. சமீபத்திய அரசாங்க அறிக்கை ஒன்று, AI தொழில்நுட்பம்...

ஆஸ்திரேலியாவில் உயர்ந்துள்ள நாணயம் அல்லாத தங்க ஏற்றுமதி

ஆஸ்திரேலியாவின் நாணயம் அல்லாத தங்க ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. முக்கிய ஏற்றுமதியாளர் அமெரிக்கா, 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு தங்க ஏற்றுமதி $2.9 பில்லியன்...

கடல் குதிரைகளை உயிர்ப்பிக்க புதிய திட்டம்

1,200க்கும் மேற்பட்ட பூர்வீக கடல் குதிரைகள் கடலோரப் பகுதிகளில் விடப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கடுமையான பேரழிவுகள் காரணமாக, இந்த பூர்வீக கடல்...

அரை மணி நேரத்தில் $500 சம்பாதிக்க ஒரு ஆஸ்திரேலியரிடமிருந்து ஒரு புதிய வழி

ஒரு ஆஸ்திரேலியர் புதிய கண்டுபிடிப்பு மூலம் 30 நிமிடங்களில் 500 டாலர் சம்பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Matt Carpenter சமீபத்தில் பல்வேறு கடைகளில் வாங்கிய பழைய பொருட்களை ஆன்லைனில்...

ஆஸ்திரேலியாவில் உயர்ந்துள்ள நாணயம் அல்லாத தங்க ஏற்றுமதி

ஆஸ்திரேலியாவின் நாணயம் அல்லாத தங்க ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. முக்கிய ஏற்றுமதியாளர் அமெரிக்கா, 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு தங்க ஏற்றுமதி $2.9 பில்லியன்...

மெல்பேர்ணில் 11 முறை கத்தியால் குத்தப்பட்ட நபர் – மூன்று பேர் மீது குற்றம்

மெல்பேர்ண் Kew Eastல் உள்ள தனது வீட்டிற்குள் நுழைந்த ஒரு கும்பலை எதிர்த்துப் போராட முயன்றபோது தந்தை ஒருவர் அரிவாளால் குத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 39 வயதுடைய...