Newsமறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியை கொலை செய்ய முயன்ற இந்தியர்

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியை கொலை செய்ய முயன்ற இந்தியர்

-

இங்கிலாந்தில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியை கொலை செய்ய முயன்ற இந்தியருக்கு 9 ஆண்டுகள் கடுழிய சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லண்டனில் இந்திய வம்சாவளியான ஜஸ்வந்த் சிங் சைலு என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்றுள்ளார். முகமூடி அணிந்து சென்ற அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் பிடித்தனர். இதனையடுத்து இவரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

அதாவது 1919 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிவாங்க மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியை கொலை செய்யும் நோக்கத்தில் தான் இங்கு வந்ததாக தெரிவித்தார். இதனையடுத்து அவரை கைது செய்த பொலிஸார் அவருக்கு மனநல பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இது குறித்த வழக்கு விசாரணை அந்த நாட்டின் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது. இதில் ஜஸ்வந்த் சிங் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் அவருக்கு 9 ஆண்டுகள் கடுழிய சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Latest news

மசாஜ் சலூனில் விசித்திரமாக நடந்து கொண்ட ஒருவர் பணிநீக்கம்

குயின்ஸ்லாந்தில் உள்ள பிரபலமான ஷாப்பிங் மால்களில் உள்ள மசாஜ் சென்டர்களில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது போலீசார் வழக்குப்...

போலி ரேபிஸ் தடுப்பூசிகள் பற்றி எச்சரிக்கை

Abhayrab எனப்படும் ரேபிஸ் தடுப்பூசியின் போலித் தொகுதிகள் நவம்பர் 1, 2023 முதல் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளதை ஆஸ்திரேலிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (ATAGI) உறுதிப்படுத்தியுள்ளது. இந்த...

சட்டவிரோத குடியேறிகள் தானாக வெளியேறினால் சன்மானம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியேற்ற சட்டத்தை கடுமையாக்கி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்போரை வெளியேற்ற நுாதன...

Bondi பயங்கரவாதத் தாக்குதலின் நாயகர்களைத் தேடி சிறப்பு கௌரவ விருதுகள்

Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட மாவீரர்களுக்கு சிறப்பு மரியாதைகளை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அறிவித்தார். நேற்று காலை கான்பெராவில் ஊடகங்களுக்குப் பேசிய அல்பானீஸ், புதிய சிறப்பு...

சந்திரனில் அணு மின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ள ரஷ்யா

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சந்திரனில் அணு மின் நிலையமொன்றை நிறுவ திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த இலட்சியத் திட்டம், சந்திர விண்வெளித் திட்டத்திற்கும் சீனாவுடன்...

விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் கடைகள் திறக்கும் நேரம்

நீங்கள் பொருட்கள் வாங்க வேண்டிய இடங்கள், அடுத்த சில நாட்களில் திறந்திருக்கும் திகதிகள் மற்றும் நேரங்களை நாங்கள் உங்களுக்குத் தெரிவித்துள்ளோம். கிறிஸ்துமஸ் தினம், Boxing தினம் மற்றும்...