Newsமறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியை கொலை செய்ய முயன்ற இந்தியர்

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியை கொலை செய்ய முயன்ற இந்தியர்

-

இங்கிலாந்தில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியை கொலை செய்ய முயன்ற இந்தியருக்கு 9 ஆண்டுகள் கடுழிய சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லண்டனில் இந்திய வம்சாவளியான ஜஸ்வந்த் சிங் சைலு என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்றுள்ளார். முகமூடி அணிந்து சென்ற அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் பிடித்தனர். இதனையடுத்து இவரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

அதாவது 1919 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிவாங்க மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியை கொலை செய்யும் நோக்கத்தில் தான் இங்கு வந்ததாக தெரிவித்தார். இதனையடுத்து அவரை கைது செய்த பொலிஸார் அவருக்கு மனநல பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இது குறித்த வழக்கு விசாரணை அந்த நாட்டின் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது. இதில் ஜஸ்வந்த் சிங் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் அவருக்கு 9 ஆண்டுகள் கடுழிய சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...