நேற்று பிற்பகல் சிட்னி ஓபரா ஹவுஸ் அருகே நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு பேரணியால் நியூ சவுத் வேல்ஸ் பிரதமர் கிறிஸ் மின்ன்ஸ் உட்பட பல தரப்பினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இது அவுஸ்திரேலியாவில் மத நல்லிணக்கத்திற்கு தடையாக இருப்பதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள யூத சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கிறிஸ் மின்ன்ஸ் கூறினார்.
ஏறக்குறைய 1,000 பேர் கலந்து கொண்ட இந்த பேரணியில் இஸ்ரேலிய கொடிகளை எரித்தது உட்பட பல வன்முறை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய சிசிடிவி காட்சிகள் பயன்படுத்தப்படும் என நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.





