Sportsதென்னாபிரிக்க அணி அபார வெற்றி - உலக கிண்ண தொடர் 2023

தென்னாபிரிக்க அணி அபார வெற்றி – உலக கிண்ண தொடர் 2023

-

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 10ஆவது போட்டி நேற்று இடம்பெற்றது.

நேற்று இடம்பெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதின.

குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அந்த வகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 07 விக்கெட்டுக்களை இழந்து 311 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில், அதிகபடியாக குயின்டன் டி கொக் 109 ஓட்டங்களையும், எய்டன் மார்க்ரம் 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், அவுஸ்திரேலிய அணியின் க்ளென் மெக்ஸ்வெல் 34 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதனையடுத்து ,312 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 177 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

அணிசார்பில், அதிகபடியாக மார்னஸ் லபுஸ்காக்னே 46 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய அவுஸ்திரேலிய அணியின் ஏனைய வீரர்கள் 30க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றனர்.

பந்துவீச்சில், தென்னாபிரிக்க அணியின் காகிசோ ரபாடா 33 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.   

Latest news

இலங்கையர் ஒருவரை தாக்கிய பிரித்தானிய பொலிஸ் அதிகாரிக்கு விதிக்கப்பட்ட தண்டனை

இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒருவரை குற்றவாளி என தவறாக நினைத்து தாக்கிய குற்றத்திற்காக இங்கிலாந்து பெருநகர காவல்துறை அதிகாரி ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் கொலை...

பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர $925 மில்லியன்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பான அவசர அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, வன்கொடுமைத் திட்டத்தை நிறுவுவதற்கு $925 மில்லியன் பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வன்முறைக்கு உள்ளாகும்...

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பேச சிறப்பு அமைச்சரவை கூட்டம்

அவுஸ்திரேலியாவில் பெரிதும் பேசப்பட்டு வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறித்து விவாதிக்க இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. வன்முறையை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து...

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் காப்பீட்டின் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை

அவுஸ்திரேலியாவில் அபாயகரமான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு காப்புறுதி பணம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் மட்டுமன்றி கலிபோர்னியா மற்றும் புளோரிடாவிலும் பல வீட்டுக் காப்புறுதித் துறைகள்...

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் காப்பீட்டின் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை

அவுஸ்திரேலியாவில் அபாயகரமான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு காப்புறுதி பணம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் மட்டுமன்றி கலிபோர்னியா மற்றும் புளோரிடாவிலும் பல வீட்டுக் காப்புறுதித் துறைகள்...

மீண்டும் தனது பொதுப்பணியை ஆரம்பித்தார் அரசர் சார்லஸ்

கடந்த பெப்ரவரி மாதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அரசர் சார்லஸ் நேற்று (30) மீண்டும் தனது பொதுப்பணியை ஆரம்பித்தார். அது, ராணி கமிலாவுடன் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்குச்...