Newsசிட்னி ரயில் தண்டவாளத்தில் மரங்கள் விழுந்ததால் பல ரயில்கள் ரத்து

சிட்னி ரயில் தண்டவாளத்தில் மரங்கள் விழுந்ததால் பல ரயில்கள் ரத்து

-

சிட்னியில் தண்டவாளத்தில் மரங்கள் விழுந்ததால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன

இதன்படி, கப்ரமட்டாவிலிருந்து கிரான்வில் மற்றும் பிளாக்டவுனில் இருந்து பென்ரித் வரையிலான புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாநிலம் முழுவதும் மணிக்கு 82 கிமீ வேகத்தில் காற்று வீசியதால், பெரிய மரங்கள் ரயில் பாதையில் விழுந்தன.

ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் ஏராளமான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கூடுதல் பேருந்து சேவைகளை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சூறாவளிக்குப் பிறகு, மாநிலம் முழுவதும் கனமழை பெய்தது.

இதேவேளை, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் கிழக்கு விக்டோரியா மாகாணங்களில் மணிக்கு 107 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை திணைக்களம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மத்திய கடற்பரப்பில் கடல் அலைகள் சூறாவளியை எதிர்கொண்டு 5 அடி உயரத்திற்கு எழலாம் எனவும் வானிலை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர போப் ஆண்டவருக்கு அழைப்பு

கத்தோலிக்கர்களின் ஒரு பெரிய குழுவின் சார்பாக போப் லியோ XIV ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் விடுத்தார். உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான...

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கான புதிய விதிகள்

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. டாக்ஸி ஓட்டுநர்கள் பல முறை கட்டணங்களை மாற்றி பயணிகளை ஏமாற்றுவது தெரியவந்ததை அடுத்து, இந்தப்...

சாதனை அளவை எட்டிய ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி

ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி சாதனை அளவை எட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியா சீனா மற்றும் அமெரிக்காவிற்கு சாதனை அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின்...

பாகிஸ்தானில் உள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை மீட்க சிறப்பு விமானம்

நாட்டை விட்டு வெளியேற துடிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்காக பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு ஒரு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதிப்படுத்தியுள்ளது. பிராந்தியத்தில் நடந்து...

கான்பெர்ரா மருத்துவமனையில் சக ஊழியரால் துன்புறுத்தப்பட்ட மற்றொரு ஊழியர்

கான்பெர்ரா மருத்துவமனை ஊழியர் ஒருவர், அதே மருத்துவமனையில் பெண் ஊழியரை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Santhoshreddy Khambam என்ற 31 வயது நபர், மருத்துவமனையின் தொழில்நுட்ப அமைப்பைப்...