Newsபலஸ்தீனத்த சிறுவனை 26 முறை கத்தியால் குத்தி கொலை செய்த முதியவர்

பலஸ்தீனத்த சிறுவனை 26 முறை கத்தியால் குத்தி கொலை செய்த முதியவர்

-

அமெரிக்கா சிகாகோவில் இருந்து தென்மேற்கே 65 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பகுதியில் கத்திக் குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 32 வயதுடைய முஸ்லிம் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அத்துடன் குறித்த பெண்ணின் 6 வயது மகன் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது 71 வயது முதியவர் ஒருவர் வீட்டுக்குள் கத்தியுடன் நுழைந்துள்ளார்.

திடீரென அவர் அந்த பெண்ணையும், அவரது மகனையும் வெறித்தனமாக கத்தியால் தாக்கியுள்ளார். 6 வயது சிறுவனை அவர் தொடர்ந்து கத்தியால் குத்திக்கொண்டே இருந்தார். இதில் அவனது உடலில் 26 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளது.

இதைகண்ட அந்த பெண் தனது மகனை காக்க முதியவருடன் போராடினார். அவரையும் முதியவர் கத்தியால் குத்தினார்.அவரிடம் இருந்து தப்பிக்க அந்த பெண் வீட்டு குளியல் அறைக்குள் ஓடினார்.

ஆனாலும் அந்த முதியவர் அவரை விடவில்லை. கத்தியால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அவர் தொலைபேசி மூலம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

கத்திக் குத்திற்கு இலக்கான இருவரையும் மீட்டு பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், சிறுவன் உயிரிழந்தார்.

சிறுவனின் தாய்க்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

30 மில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரர்களான மெல்பேர்ண் தம்பதியினர்

மெல்பேர்ண், Point Cook-ஐ சேர்ந்த ஒரு ஜோடி, கடந்த 27ம் திகதி நடந்த PowerBall டிராவில் 30 மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வென்றுள்ளது. அவர்கள் இந்தப்...

விக்டோரியா பறவைக் காய்ச்சலின் தீவிரம் – 2028 வரை முட்டைகள் இல்லை.

விக்டோரியன் பறவைக் காய்ச்சல் பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவில் முட்டை விலைகள் மேலும் உயரும் என்று வர்த்தகர்கள் எச்சரிக்கின்றனர். முட்டை பற்றாக்குறை குறைந்தது 2028 வரை நீடிக்கும் என்று...

மூடப்படும் தருவாயில் உள்ள பிரபல ஆஸ்திரேலிய கேசினோ நிறுவனம்

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பெரிய சூதாட்ட வணிகம் நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது. கேசினோ நிறுவனமான The star அதன் அரையாண்டு நிதி முடிவுகளை அறிவிக்கத் தவறியதால், ஆஸ்திரேலிய...

தட்டம்மை குறித்து கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவிற்கு தட்டம்மை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து இரண்டு தட்டம்மை வழக்குகள் பதிவான பிறகு இது நிகழ்ந்தது. விக்டோரியன் சுகாதார அதிகாரிகள், வெளிநாடுகளுக்குச் செல்லாததால், சமூகத்திற்குள் தட்டம்மை பரவும்...

தட்டம்மை குறித்து கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவிற்கு தட்டம்மை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து இரண்டு தட்டம்மை வழக்குகள் பதிவான பிறகு இது நிகழ்ந்தது. விக்டோரியன் சுகாதார அதிகாரிகள், வெளிநாடுகளுக்குச் செல்லாததால், சமூகத்திற்குள் தட்டம்மை பரவும்...

இளம் குழந்தைகளின் நலனுக்காக Apple எடுத்துள்ள புதிய நடவடிக்கை

இளம் குழந்தைகளின் தொலைபேசி பயன்பாட்டை மேலும் பாதுகாக்க ஆப்பிள் பல புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெற்றோர் கட்டுப்பாட்டு அமைப்பில் பல புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தும், இது...