Newsவிக்டோரியாவின் மின்சார வாகன வரி சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு

விக்டோரியாவின் மின்சார வாகன வரி சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு

-

விக்டோரியா மாநிலத்தில் மின்சார வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட வரி சட்ட விரோதமானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பின்படி, எந்த மாநில அரசும் எலக்ட்ரிக் அல்லது ஹைபிரிட் வாகனங்களுக்கு சட்டவிரோதமாக வரி விதிக்க அனுமதிக்கப்படவில்லை.

மின்சார வாகனங்கள் பயணிக்கும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 02 சென்ட் வரி அறவிடுவதன் மூலம் விக்டோரியா அரசினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை அறிவிக்கும் போதே உயர்நீதிமன்றம் இதனைத் தெரிவித்துள்ளது.

2027-ம் ஆண்டுக்குள் மேலும் இரு மாநிலங்களும் இதேபோன்ற வரிகளை விதிக்க உள்ள நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள மின்சார வாகன உரிமையாளர்களுக்கு கிடைத்த வெற்றி என்று கூறப்படுகிறது.

விக்டோரியா மாநிலத்தில் மின்சார வாகனங்களுக்கு வரி விதிப்பது நியாயமற்றது என்று மாநில அரசின் ஒம்புட்ஸ்மேன் விசாரணையில் சமீபத்தில் தெரியவந்தது.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிபொருளைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு சாலைப் பராமரிப்புக்கு விதிக்கப்படும் வரிக்கு இணையான வரி விதிக்கப்படும் என்றும், அது தீங்கு விளைவிக்கும் காற்று மாசுவைத் தடுக்கும் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்பன் உமிழ்வு இலக்குகளை எட்டுவதற்கு மின்சார வாகனங்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட வேண்டிய சூழ்நிலையில் அதிக வரி விதிப்பதை ஏற்க முடியாது என ஒம்புட்ஸ்மேன் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...