Newsஆந்திராவில் இரு ரயில்கள் மோதி கோர விபத்து -19 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் இரு ரயில்கள் மோதி கோர விபத்து -19 பேர் உயிரிழப்பு

-

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடாவிற்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயில் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இந்த பயங்கர விபத்தில் பலாசா ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் ரயில் பெட்டிக்குள் இருந்த பயணிகள் அலறினர். ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம்புரண்டதில் உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது 19 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ரயில்கள் விபத்துக்கு உள்ளான தகவல் கிடைத்ததும் விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் பெட்டிகளின் இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகளை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இரவு நேரம் என்பதால் மீட்பு பணிகளில் சிரமங்கள் நிலவுகிறது. பலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ரயில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் அதிர்ச்சி அடைந்ததாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் அலுவலகத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டக பள்ளி ரயில் நிலையத்தில் இடம்பெற்ற ரயில்கள் விபத்து குறித்து முதலமைச்சர் அதிர்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். மீட்பு பணிகளை முடுக்கி விடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள ஜெகன் மோகன் ரெட்டி, காயமடைந்தவர்களுக்கு விரைவாக சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஒடிசாவில் கடந்த ஜுன் மாதம் 2 ஆம் திகதி சென்னை நோக்கி சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்த ரயில் விபத்தில் 280 பேர் பலியாகினர். இந்தியாவில் இடம்பெற்ற மிக மோசமான ரயில் விபத்துக்களில் ஒன்றாக ஒடிசாவின் பாலாசோர் ரயில் விபத்து அமைந்தது.

ஒடிசா ரயில் விபத்து சம்பவம் ஏற்படுத்திய ரணமே மக்கள் மத்தியில் இன்னும் முழுமையாக அகலாத நிலையில், ஆந்திராவில் இன்று இந்த ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

வாகனப் பராமரிப்பைத் தவிர்க்கும் பெரும்பாலான ஆஸ்திரேலிய கார் உரிமையாளர்கள்

தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக, 4ல் 1 ஆஸ்திரேலிய கார் உரிமையாளர்கள் தங்களது வாகன பராமரிப்பு சேவைகளை முறையாக மேற்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. ஃபைண்டரின் புதிய ஆய்வில்,...

மேலும் பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் சமந்தா மர்பி காணாமல் போனமை தொடர்பான சந்தேகநபர்

விக்டோரியா மாகாணத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி முதல் காணாமல் போன சமந்தா மர்பி காணாமல் போனமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேகநபர் மீது...

வாகனம் ஓட்ட மிகவும் ஆபத்தான நாடுகளின் வரிசையில் ஆஸ்திரேலியா

வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் ஆபத்தான வளர்ந்த நாடுகளின் தரவரிசைப்படி, ஆஸ்திரேலியா 18வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய அரசாங்கம் சர்வதேச சாலை பாதுகாப்பு தரப்படுத்தல் அறிக்கையை...

ஆஸ்திரேலியர்கள் குறைவாக உண்ணும் உணவுகள் குறித்து வெளியான புதிய அறிக்கை

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு , ஆஸ்திரேலியர்கள் காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் ஆகியவை குறைவாக உட்கொள்ளும் உணவுகள் என்று கண்டறிந்துள்ளனர். கடந்த நிதியாண்டைக் காட்டிலும் இந்த...

ஆஸ்திரேலியர்கள் குறைவாக உண்ணும் உணவுகள் குறித்து வெளியான புதிய அறிக்கை

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு , ஆஸ்திரேலியர்கள் காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் ஆகியவை குறைவாக உட்கொள்ளும் உணவுகள் என்று கண்டறிந்துள்ளனர். கடந்த நிதியாண்டைக் காட்டிலும் இந்த...

“மேதகு” இசையமைப்பாளர் பிரவீன் குமார் காலமானார்

மேதகு மற்றும் இராக்கதன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரவீன் குமார் நேற்று 2ம் திகதி காலமானார். அவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2021ஆம் ஆண்டு தமிழீழ...