Newsதிருடு போன 9 மில்லியன் டொலர் பெறுமதியான தங்க கழிவறை திருட்டு...

திருடு போன 9 மில்லியன் டொலர் பெறுமதியான தங்க கழிவறை திருட்டு – 4 பேர் கைது

-

பிரித்தானியாவின் முன்னாள் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சிலின் பிறந்த இடமான பிளென்ஹெய்ம் அரண்மனையில் நிறுவப்பட்ட 9 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கக் கழிவறை திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

04 வருடங்களுக்கு முன்னர் அதாவது 2019 ஆம் ஆண்டு 18 காரட் தங்க மலசலகூடம் கொள்ளையடிக்கப்பட்டதுடன் சந்தேக நபர்களை கைது செய்ய முடியவில்லை.

சந்தேகநபர்கள் 35 மற்றும் 39 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் மீது திருட்டு, சதி மற்றும் சொத்து திருட்டு ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் பிளென்ஹெய்ம் அரண்மனை பொதுமக்களுக்கு திறக்கப்பட்டதன் மூலம், ஒவ்வொரு நபருக்கும் மூன்று நிமிடங்களுக்கு தங்கக் கழிப்பறையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது, மேலும் சந்தேக நபர்கள் அருகில் உள்ள ஜன்னலைப் பயன்படுத்தி அதை வெளியே எடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

திருடப்பட்ட குறித்த மலசலகூடப் பெட்டி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், உரிய நிலையில் உள்ள கழிவறைப் பெட்டியை கண்டுபிடிப்பது சவாலாக இருக்கும் எனவும் பிரித்தானிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 28ஆம் திகதி ஒக்ஸ்போர்ட் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Latest news

30 மில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரர்களான மெல்பேர்ண் தம்பதியினர்

மெல்பேர்ண், Point Cook-ஐ சேர்ந்த ஒரு ஜோடி, கடந்த 27ம் திகதி நடந்த PowerBall டிராவில் 30 மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வென்றுள்ளது. அவர்கள் இந்தப்...

விக்டோரியா பறவைக் காய்ச்சலின் தீவிரம் – 2028 வரை முட்டைகள் இல்லை.

விக்டோரியன் பறவைக் காய்ச்சல் பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவில் முட்டை விலைகள் மேலும் உயரும் என்று வர்த்தகர்கள் எச்சரிக்கின்றனர். முட்டை பற்றாக்குறை குறைந்தது 2028 வரை நீடிக்கும் என்று...

மூடப்படும் தருவாயில் உள்ள பிரபல ஆஸ்திரேலிய கேசினோ நிறுவனம்

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பெரிய சூதாட்ட வணிகம் நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது. கேசினோ நிறுவனமான The star அதன் அரையாண்டு நிதி முடிவுகளை அறிவிக்கத் தவறியதால், ஆஸ்திரேலிய...

தட்டம்மை குறித்து கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவிற்கு தட்டம்மை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து இரண்டு தட்டம்மை வழக்குகள் பதிவான பிறகு இது நிகழ்ந்தது. விக்டோரியன் சுகாதார அதிகாரிகள், வெளிநாடுகளுக்குச் செல்லாததால், சமூகத்திற்குள் தட்டம்மை பரவும்...

தட்டம்மை குறித்து கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவிற்கு தட்டம்மை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து இரண்டு தட்டம்மை வழக்குகள் பதிவான பிறகு இது நிகழ்ந்தது. விக்டோரியன் சுகாதார அதிகாரிகள், வெளிநாடுகளுக்குச் செல்லாததால், சமூகத்திற்குள் தட்டம்மை பரவும்...

இளம் குழந்தைகளின் நலனுக்காக Apple எடுத்துள்ள புதிய நடவடிக்கை

இளம் குழந்தைகளின் தொலைபேசி பயன்பாட்டை மேலும் பாதுகாக்க ஆப்பிள் பல புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெற்றோர் கட்டுப்பாட்டு அமைப்பில் பல புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தும், இது...