Newsதிருடு போன 9 மில்லியன் டொலர் பெறுமதியான தங்க கழிவறை திருட்டு...

திருடு போன 9 மில்லியன் டொலர் பெறுமதியான தங்க கழிவறை திருட்டு – 4 பேர் கைது

-

பிரித்தானியாவின் முன்னாள் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சிலின் பிறந்த இடமான பிளென்ஹெய்ம் அரண்மனையில் நிறுவப்பட்ட 9 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கக் கழிவறை திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

04 வருடங்களுக்கு முன்னர் அதாவது 2019 ஆம் ஆண்டு 18 காரட் தங்க மலசலகூடம் கொள்ளையடிக்கப்பட்டதுடன் சந்தேக நபர்களை கைது செய்ய முடியவில்லை.

சந்தேகநபர்கள் 35 மற்றும் 39 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் மீது திருட்டு, சதி மற்றும் சொத்து திருட்டு ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் பிளென்ஹெய்ம் அரண்மனை பொதுமக்களுக்கு திறக்கப்பட்டதன் மூலம், ஒவ்வொரு நபருக்கும் மூன்று நிமிடங்களுக்கு தங்கக் கழிப்பறையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது, மேலும் சந்தேக நபர்கள் அருகில் உள்ள ஜன்னலைப் பயன்படுத்தி அதை வெளியே எடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

திருடப்பட்ட குறித்த மலசலகூடப் பெட்டி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், உரிய நிலையில் உள்ள கழிவறைப் பெட்டியை கண்டுபிடிப்பது சவாலாக இருக்கும் எனவும் பிரித்தானிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 28ஆம் திகதி ஒக்ஸ்போர்ட் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...