Melbourneமெல்போனில் வாழும் இலங்கை குடும்பம் ஒன்றின் மீது தாக்குதல்

மெல்போனில் வாழும் இலங்கை குடும்பம் ஒன்றின் மீது தாக்குதல்

-

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் குடும்பம் ஒன்று இளைஞர் குழுவொன்றினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னை வசிப்பிடமாகக் கொண்ட குறித்த குடும்பத்தின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலின் போது அவர்களது விசேட தேவையுடைய மகளும் உடனிருந்துள்ளார்.

இந்த தாக்குதலின் பின்னர் சிறுமி அதிர்ச்சியில் இருப்பதாகவும் சிறுமியின் தந்தை வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல்லாரட் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும், தாக்குதலுக்கு எதிராக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குறித்த தந்தை குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் தாக்குதல் நடந்த இடத்தில் சிசிடிவி கெமராக்கள் வேலை செய்யவில்லை என பொலிஸ் அதிகாரிகள் அவருக்கு கூறியுள்ளனர். 

ஏறக்குறைய 10 வருடங்களாக மெல்போர்னில் வசிப்பதாகவும், இந்த எதிர்பாராத சம்பவத்தால் மிகுந்த சிரமத்திற்கு ஆளானதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் பல்லாரட் நகரசபை மேயரும் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

Latest news

பிரபல ஆஸ்திரேலிய எழுத்தாளரின் புத்தகங்கள் பள்ளிப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கம்

விருது பெற்ற ஆஸ்திரேலிய எழுத்தாளர் கிரெய்க் சில்விக்கு எதிரான கடுமையான குழந்தை துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளால் இலக்கிய உலகம் அதிர்ந்துள்ளது. அவரது அனைத்து படைப்புகளையும் சந்தை மற்றும் பள்ளி...

ஆஸ்திரேலிய பாதாள உலகத் தலைவர் ஈராக்கில் கைது

ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறையினரால் தேடப்படும் முக்கிய பாதாள உலகக் கும்பல் தலைவரான Kazem Hamad ஈராக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஏராளமான பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்...

ஆஸ்திரேலியா முழுவதும் அமேசானுக்கு எதிராக பாரிய போராட்டங்கள்

பில்லியனர் ஜெஃப் பெசோஸின் அமேசானுக்கு எதிராக ஆஸ்திரேலியா முழுவதும் ஒரு பெரிய தொழிற்சங்க நடவடிக்கை தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலிய தொழிலாளர்களை அமேசான் சுரண்டுவதையும் உள்ளூர் வணிகங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதையும்...

விக்டோரியாவில் மூடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சாலைகள்

விக்டோரியா முழுவதும் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க காட்டுத்தீயால், மாநிலம் முழுவதும் ஏராளமான சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விக்டோரியன் அவசர சேவைகள் துறை தெரிவித்துள்ளது. (மாநில மறுமொழி கட்டுப்பாட்டாளர், டேவிட் நுஜென்ட்)...

விக்டோரியாவில் மூடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சாலைகள்

விக்டோரியா முழுவதும் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க காட்டுத்தீயால், மாநிலம் முழுவதும் ஏராளமான சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விக்டோரியன் அவசர சேவைகள் துறை தெரிவித்துள்ளது. (மாநில மறுமொழி கட்டுப்பாட்டாளர், டேவிட் நுஜென்ட்)...

விக்டோரியன் பிரதமருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட அலெக்ஸாண்ட்ரா நகரத்திற்கு விஜயம் செய்த விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன், உள்ளூர்வாசிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டார். போராட்டக்காரர்களைத் தவிர்த்து, ஒரு கட்டிடத்தின் பின் கதவு...