Melbourneமெல்போனில் வாழும் இலங்கை குடும்பம் ஒன்றின் மீது தாக்குதல்

மெல்போனில் வாழும் இலங்கை குடும்பம் ஒன்றின் மீது தாக்குதல்

-

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் குடும்பம் ஒன்று இளைஞர் குழுவொன்றினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னை வசிப்பிடமாகக் கொண்ட குறித்த குடும்பத்தின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலின் போது அவர்களது விசேட தேவையுடைய மகளும் உடனிருந்துள்ளார்.

இந்த தாக்குதலின் பின்னர் சிறுமி அதிர்ச்சியில் இருப்பதாகவும் சிறுமியின் தந்தை வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல்லாரட் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும், தாக்குதலுக்கு எதிராக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குறித்த தந்தை குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் தாக்குதல் நடந்த இடத்தில் சிசிடிவி கெமராக்கள் வேலை செய்யவில்லை என பொலிஸ் அதிகாரிகள் அவருக்கு கூறியுள்ளனர். 

ஏறக்குறைய 10 வருடங்களாக மெல்போர்னில் வசிப்பதாகவும், இந்த எதிர்பாராத சம்பவத்தால் மிகுந்த சிரமத்திற்கு ஆளானதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் பல்லாரட் நகரசபை மேயரும் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

Latest news

இன்ஸ்டகிராம் பதிவால் சுட்டுக் கொல்லப்பட்ட அழகி

ஈகுவடாரில் அழகிப்போட்டியில் கலந்துகொண்ட பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. லாண்டி பராகா கோய்புரா என்ற 23 வயது இளம்பெண், 2022யில் மிஸ் ஈகுவடார் போட்டியில் பங்கேற்று...

உக்ரைன் மீது மீண்டும் டிரோன் தாக்குதல் செய்த ரஷ்ய படைகள்

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றின. இந்த நிலையில் உக்ரைனின்...

குயின்ஸ்லாந்தில் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இளைஞர்

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் பண்ணை ஒன்றில் உயிருடன் புதைக்கப்பட்டதாக கருதப்படும் நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குயின்ஸ்லாந்தில் உள்ள Mount Mee பகுதியில் அமைந்துள்ள பண்ணை ஒன்றில்...

Cashless முறைக்கு செல்லும் ஆஸ்திரேலியாவின் துரித உணவு நிறுவனம்

ஆஸ்திரேலியாவின் முக்கிய துரித உணவு நிறுவனமான Nandos, அந்த தயாரிப்புகளை பணமில்லா கொடுப்பனவுகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. ரொக்கமில்லா பொருட்களாக விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் இணையத்தில் தீவிர...

Cashless முறைக்கு செல்லும் ஆஸ்திரேலியாவின் துரித உணவு நிறுவனம்

ஆஸ்திரேலியாவின் முக்கிய துரித உணவு நிறுவனமான Nandos, அந்த தயாரிப்புகளை பணமில்லா கொடுப்பனவுகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. ரொக்கமில்லா பொருட்களாக விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் இணையத்தில் தீவிர...

ஆஸ்திரேலியாவில் வேலை தேடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை

அவுஸ்திரேலியாவில் வேலை வழங்குவதாக கூறி ஏமாற்றும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. சமீபத்திய ஸ்கேம்வாட்ச் அறிக்கையின்படி, கடந்த நிதியாண்டில் போலி ஆன்லைன் வேலைகளால் ஆஸ்திரேலியர்கள் $24.7 மில்லியன் இழந்துள்ளனர். வாழ்க்கைச் செலவு...