Newsசினிமா பட பாணியில் இலங்கை தொழிலதிபரை காப்பாற்றிய பொலிஸ்

சினிமா பட பாணியில் இலங்கை தொழிலதிபரை காப்பாற்றிய பொலிஸ்

-

இலங்கையிலிருந்து வந்த தொழிலதிபர் ஒருவரை சென்னையில் கடத்தி வைத்துக் கொண்டு ஒரு கும்பல் 15 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டி இருக்கிறது.

அவரது மகளும் முதல் தவணையாக 95 ஆயிரம் ரூபாயை வங்கிக் கணக்கில் கொடுத்து இருக்கிறார். பின்னர் என்ன நினைத்தாரோ? சென்னை போலீசாருக்கு தனது தந்தை கடத்தப்பட்டது பற்றி தகவல் தெரிவித்து விட்டார்.

தொழிலதிபர் பயன்படுத்திய இந்திய செல்போன் சிம் கார்டை ஆராய்ந்தபோது சென்னையில் கேகே நகர் பகுதியில் நடமாடியதாக காட்டியது.

இன்னொரு பக்கம் தொழிலதிபரின் மகள், கடத்தல் கும்பல் அனுப்பிய ஒரு வீடியோ கிளிப்பிங்கின் ஸ்க்ரீன் ஷாட்டை போலீசாரிடம் பகிர்ந்திருந்தார.

அந்த போட்டோவை போலீசார் ஜூம் செய்து பார்த்ததில் பேக்ரவுண்டில் ஒரு விளம்பரப் பலகை இருப்பது தெரியவந்தது.

குறிப்பிட்ட ஓட்டலில் வைத்துதான் கடத்தல்காரர்கள் வீடியோ எடுத்திருக்கிறார்கள் என்பதும் அம்பலமானது.

பிறகு என்ன? ஹோட்டலில் புகுந்து தொழிலதிபரை மீட்டதுடன் ஏழு பேரை நேற்று போலீசார் கைது செய்து இருக்கின்றனர். கடத்தல் கும்பலில் 43 வயது பெண்ணும் அடக்கம்.

விரிவான விசாரணை போய்க்கொண்டிருக்கிறது.

கமலின் வெற்றி விழா படத்தில் குஷ்புவை இப்படித்தான் கடத்திக் கொண்டு போய் விடுவார்கள்.

எந்த குளூவும் கிடைக்காத நேரத்தில், குஷ்புவை வைத்து எடுக்கப்பட்ட ஃபோட்டோ பேக் ட்ராப்பில் டிஜிட்டல் போர்டு சோப் விளம்பரம் ஒன்று தெரியவரும்.

அதை வைத்து, குஷ்பு அடைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை கண்டுபிடிப்பார்கள்.

Latest news

ஏலத்திற்கு வரும் உலகின் மிக உயரமான விக்டோரியன் Gothic கோபுரம்

53 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள ஒரு அசாதாரண ஆங்கில கோட்டை தான் ஐக்கிய இராச்சியத்தில் அமைந்துள்ள இந்த Hadlow Tower ஆகும். இந்த கோபுரம் 19 ஆம்...

அணுசக்தி கொள்கையை வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அறிமுகப்படுத்தும் தேசியக் கட்சி

ஆஸ்திரேலியாவின் எரிசக்தி திட்டத்திற்கான அணுசக்தி கொள்கையை வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்போவதாக தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. வரவிருக்கும் பொதுத் தேர்தலில் கட்சி முன்வைக்கும் முக்கிய சட்டமன்ற முன்மொழிவுகளில்...

ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவு பற்றி வெளியான ஆய்வு

ஆஸ்திரேலியாவில் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவை வெளிப்படுத்தும் ஒரு ஆய்வை UNSW SMaRT மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் வண்டல்...

ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு 3 பில்லியன் டாலர்களைக் கொண்டு வரும் நாய்கள்

ஆஸ்திரேலியாவின் வேலை செய்யும் நாய்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு $3 பில்லியன் மதிப்பைக் கொண்டு வருவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ANZ நடத்திய ஆய்வில், கடந்த 10 ஆண்டுகளில்...

பெர்த்தில் இருந்து வந்த விமானத்தில் தீ விபத்து

பெர்த்தில் இருந்து பாலி நோக்கிச் சென்ற AirAsia விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. AirAsia விமானம் QZ545 இன் இயந்திரத்திலிருந்து தீப்பிழம்புகள் வெடித்ததால், விமானிகள் விமானத்தை பெர்த்...

ஏலத்திற்கு வரும் உலகின் மிக உயரமான விக்டோரியன் Gothic கோபுரம்

53 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள ஒரு அசாதாரண ஆங்கில கோட்டை தான் ஐக்கிய இராச்சியத்தில் அமைந்துள்ள இந்த Hadlow Tower ஆகும். இந்த கோபுரம் 19 ஆம்...