Newsசினிமா பட பாணியில் இலங்கை தொழிலதிபரை காப்பாற்றிய பொலிஸ்

சினிமா பட பாணியில் இலங்கை தொழிலதிபரை காப்பாற்றிய பொலிஸ்

-

இலங்கையிலிருந்து வந்த தொழிலதிபர் ஒருவரை சென்னையில் கடத்தி வைத்துக் கொண்டு ஒரு கும்பல் 15 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டி இருக்கிறது.

அவரது மகளும் முதல் தவணையாக 95 ஆயிரம் ரூபாயை வங்கிக் கணக்கில் கொடுத்து இருக்கிறார். பின்னர் என்ன நினைத்தாரோ? சென்னை போலீசாருக்கு தனது தந்தை கடத்தப்பட்டது பற்றி தகவல் தெரிவித்து விட்டார்.

தொழிலதிபர் பயன்படுத்திய இந்திய செல்போன் சிம் கார்டை ஆராய்ந்தபோது சென்னையில் கேகே நகர் பகுதியில் நடமாடியதாக காட்டியது.

இன்னொரு பக்கம் தொழிலதிபரின் மகள், கடத்தல் கும்பல் அனுப்பிய ஒரு வீடியோ கிளிப்பிங்கின் ஸ்க்ரீன் ஷாட்டை போலீசாரிடம் பகிர்ந்திருந்தார.

அந்த போட்டோவை போலீசார் ஜூம் செய்து பார்த்ததில் பேக்ரவுண்டில் ஒரு விளம்பரப் பலகை இருப்பது தெரியவந்தது.

குறிப்பிட்ட ஓட்டலில் வைத்துதான் கடத்தல்காரர்கள் வீடியோ எடுத்திருக்கிறார்கள் என்பதும் அம்பலமானது.

பிறகு என்ன? ஹோட்டலில் புகுந்து தொழிலதிபரை மீட்டதுடன் ஏழு பேரை நேற்று போலீசார் கைது செய்து இருக்கின்றனர். கடத்தல் கும்பலில் 43 வயது பெண்ணும் அடக்கம்.

விரிவான விசாரணை போய்க்கொண்டிருக்கிறது.

கமலின் வெற்றி விழா படத்தில் குஷ்புவை இப்படித்தான் கடத்திக் கொண்டு போய் விடுவார்கள்.

எந்த குளூவும் கிடைக்காத நேரத்தில், குஷ்புவை வைத்து எடுக்கப்பட்ட ஃபோட்டோ பேக் ட்ராப்பில் டிஜிட்டல் போர்டு சோப் விளம்பரம் ஒன்று தெரியவரும்.

அதை வைத்து, குஷ்பு அடைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை கண்டுபிடிப்பார்கள்.

Latest news

நாடு முழுவதும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான மக்கள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையை எதிர்கொள்கின்றனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாடு முழுவதும் மழை...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

இளையராஜாவின் இசைக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி

கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர...

விக்டோரியா அரசாங்கத்தின் புதிய வரி எங்களுக்கு ஒரு சுமை!

விக்டோரியன் கவுன்சில்கள் விக்டோரியன் அரசாங்கத்தின் புதிய அவசர சேவை வரியை சவால் செய்கின்றன. அந்த நோக்கத்திற்காக மேயர்கள் நேற்று மெல்பேர்ணில் கூடினர். பல பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தை எச்சரிக்கும் Google

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடையில் YouTube-ஐயும் சேர்த்தால் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடரப்போவதாக கூகிள் அச்சுறுத்தியுள்ளது. Daily Telegraph செய்தியின்படி, Google தகவல்...

தொலைபேசி அபராதங்களைத் தவிர்க்க NSW ஓட்டுநர்கள் கூறும் சாக்குகள்

நியூ சவுத் வேல்ஸில் ஓட்டுநர்கள் தொலைபேசி அபராதங்களைத் தவிர்க்க அற்புதமான சாக்குப்போக்குகளைச் சொல்வது தெரியவந்துள்ளது. நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்ட நான்கு மொபைல் போன் பயன்பாட்டு வழக்குகளில் மூன்று தள்ளுபடி...