Newsசினிமா பட பாணியில் இலங்கை தொழிலதிபரை காப்பாற்றிய பொலிஸ்

சினிமா பட பாணியில் இலங்கை தொழிலதிபரை காப்பாற்றிய பொலிஸ்

-

இலங்கையிலிருந்து வந்த தொழிலதிபர் ஒருவரை சென்னையில் கடத்தி வைத்துக் கொண்டு ஒரு கும்பல் 15 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டி இருக்கிறது.

அவரது மகளும் முதல் தவணையாக 95 ஆயிரம் ரூபாயை வங்கிக் கணக்கில் கொடுத்து இருக்கிறார். பின்னர் என்ன நினைத்தாரோ? சென்னை போலீசாருக்கு தனது தந்தை கடத்தப்பட்டது பற்றி தகவல் தெரிவித்து விட்டார்.

தொழிலதிபர் பயன்படுத்திய இந்திய செல்போன் சிம் கார்டை ஆராய்ந்தபோது சென்னையில் கேகே நகர் பகுதியில் நடமாடியதாக காட்டியது.

இன்னொரு பக்கம் தொழிலதிபரின் மகள், கடத்தல் கும்பல் அனுப்பிய ஒரு வீடியோ கிளிப்பிங்கின் ஸ்க்ரீன் ஷாட்டை போலீசாரிடம் பகிர்ந்திருந்தார.

அந்த போட்டோவை போலீசார் ஜூம் செய்து பார்த்ததில் பேக்ரவுண்டில் ஒரு விளம்பரப் பலகை இருப்பது தெரியவந்தது.

குறிப்பிட்ட ஓட்டலில் வைத்துதான் கடத்தல்காரர்கள் வீடியோ எடுத்திருக்கிறார்கள் என்பதும் அம்பலமானது.

பிறகு என்ன? ஹோட்டலில் புகுந்து தொழிலதிபரை மீட்டதுடன் ஏழு பேரை நேற்று போலீசார் கைது செய்து இருக்கின்றனர். கடத்தல் கும்பலில் 43 வயது பெண்ணும் அடக்கம்.

விரிவான விசாரணை போய்க்கொண்டிருக்கிறது.

கமலின் வெற்றி விழா படத்தில் குஷ்புவை இப்படித்தான் கடத்திக் கொண்டு போய் விடுவார்கள்.

எந்த குளூவும் கிடைக்காத நேரத்தில், குஷ்புவை வைத்து எடுக்கப்பட்ட ஃபோட்டோ பேக் ட்ராப்பில் டிஜிட்டல் போர்டு சோப் விளம்பரம் ஒன்று தெரியவரும்.

அதை வைத்து, குஷ்பு அடைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை கண்டுபிடிப்பார்கள்.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...