Newsபோரினால் காஸாவுக்கு ஏற்பட்ட இழப்புக்கள்

போரினால் காஸாவுக்கு ஏற்பட்ட இழப்புக்கள்

-

இஸ்ரேல் அரசு முதல்முறையாக காசாவில் 4 நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்வதாக தற்போது அறிவித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 50 பணயக் கைதிகளை ஹமாஸ் போராளிகள் விடுவிப்பார்கள் என்று இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. மேலும், ஒவ்வொரு முறை 10 பணயக் கைதிகளை விடுவிப்பதற்கும், கூடுதலாக ஒருநாள் போர் நிறுத்தம் என்ற வகையில் போர் நிறுத்த நாட்களை அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

காஸா, ஒரு மாதத்திற்கும் மேலாக இஸ்ரேலின் இடைவிடாத குண்டுவீச்சுகளால் அழிக்கப்பட்டுள்ளது, இது முழு சுற்றுப்புறங்களையும் சமன் செய்துள்ளதுடன் பலருக்கு மரணத்தையும் அழிவையும் அளித்துள்ளது.

இஸ்ரேல், முற்றுகையிட்ட காஸாவின் வெறும் 365 சதுர கிலோமீற்றர் அளவுப்பகுதியில் 25,000 டன்களுக்கும் அதிகமான வெடிபொருட்களை வீசியுள்ளது.

காசாவின் 222,000 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதுடன், 40,000 க்கும் மேற்பட்டவை முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான அழிவுகள் வடக்கு காஸாவில் மையம் கொண்டிருந்தாலும், இஸ்ரேல் பாதுகாப்பான வலயமாக அறிவித்திருந்த தெற்குப்பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பலஸ்தீனத்தின் காஸா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் தரைவழி, வான்வழி தாக்குதலில் 14 ஆயிரத்து 100 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், பலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 219 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

பாலியல் பொம்மையுடன் MRI ஸ்கேன் செய்யப்பட்ட பெண் ஆபத்தான நிலையில்

ஒரு பெண்ணின் ஆசனவாயில் Sex Toy செருகப்பட்டதால், MRI ஸ்கேன் எடுக்கும்போது அவருக்கு உட்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, நோயாளிகள் MRI ஸ்கேன் எடுக்கும்போது அவர்கள்...

மேற்கு ஆஸ்திரேலிய மக்கள் தடுப்பூசி பெறுவது கட்டாயம் – சுகாதார அதிகாரிகள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் காய்ச்சல் தடுப்பூசி போடுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது . தேசிய நோய்த்தடுப்பு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி, மேற்கு ஆஸ்திரேலியாவில் 65 வயதுக்குட்பட்டவர்களில் காய்ச்சல்...

நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்கும் ANZ வங்கி

ரிசர்வ் வங்கியின் அடுத்த பணவியல் கொள்கை நடவடிக்கைக்கு இன்னும் 11 நாட்கள் மீதமுள்ள நிலையில், நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்க ANZ வங்கிக்கு ரிசர்வ் வங்கி...

வரி விதிப்புக்கு எதிராக விக்டோரியன் நாடாளுமன்றம் அருகே போராட்டம்

விக்டோரியன் பாராளுமன்றத்திற்கு அருகில் தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் இணைந்தனர். விக்டோரியாவின் முன்மொழியப்பட்ட அவசர சேவை வரியை எதிர்த்துப் போராடுவதற்காக அவர்கள் நாடாளுமன்றத்தின் படிகளில்...

நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்கும் ANZ வங்கி

ரிசர்வ் வங்கியின் அடுத்த பணவியல் கொள்கை நடவடிக்கைக்கு இன்னும் 11 நாட்கள் மீதமுள்ள நிலையில், நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்க ANZ வங்கிக்கு ரிசர்வ் வங்கி...

Harryயால் குணப்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை நோயாளிகள்

தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளுக்கு வலி மற்றும் பதட்டத்தைக் குறைக்க சிகிச்சை நாய்கள் (Therapy Dog) உதவுவதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. கான்பெர்ரா மருத்துவமனை ஹாரி என்ற...