Newsபோரினால் காஸாவுக்கு ஏற்பட்ட இழப்புக்கள்

போரினால் காஸாவுக்கு ஏற்பட்ட இழப்புக்கள்

-

இஸ்ரேல் அரசு முதல்முறையாக காசாவில் 4 நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்வதாக தற்போது அறிவித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 50 பணயக் கைதிகளை ஹமாஸ் போராளிகள் விடுவிப்பார்கள் என்று இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. மேலும், ஒவ்வொரு முறை 10 பணயக் கைதிகளை விடுவிப்பதற்கும், கூடுதலாக ஒருநாள் போர் நிறுத்தம் என்ற வகையில் போர் நிறுத்த நாட்களை அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

காஸா, ஒரு மாதத்திற்கும் மேலாக இஸ்ரேலின் இடைவிடாத குண்டுவீச்சுகளால் அழிக்கப்பட்டுள்ளது, இது முழு சுற்றுப்புறங்களையும் சமன் செய்துள்ளதுடன் பலருக்கு மரணத்தையும் அழிவையும் அளித்துள்ளது.

இஸ்ரேல், முற்றுகையிட்ட காஸாவின் வெறும் 365 சதுர கிலோமீற்றர் அளவுப்பகுதியில் 25,000 டன்களுக்கும் அதிகமான வெடிபொருட்களை வீசியுள்ளது.

காசாவின் 222,000 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதுடன், 40,000 க்கும் மேற்பட்டவை முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான அழிவுகள் வடக்கு காஸாவில் மையம் கொண்டிருந்தாலும், இஸ்ரேல் பாதுகாப்பான வலயமாக அறிவித்திருந்த தெற்குப்பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பலஸ்தீனத்தின் காஸா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் தரைவழி, வான்வழி தாக்குதலில் 14 ஆயிரத்து 100 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், பலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 219 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

சுற்றுலா தளமாக மாற்றவுள்ள ஆஸ்திரேலியாவிலுள்ள தீவு

குயின்ஸ்லாந்து மாநில அரசு, Great Barrier Reef அருகே அமைந்துள்ள ஒரு சிறிய தீவை சுற்றுலா மையமாக மாற்ற திட்டமிட்டுள்ளது. அதன்படி, கெய்ர்ன்ஸுக்கு வடக்கே அமைந்துள்ள Double...

கைதிகளுக்கு தியானம் கற்றுத்தரும் ஆஸ்திரேலிய பெண்

நியூயார்க்கின் Rikers தீவில் உள்ள ஒரு ஆஸ்திரேலியப் பெண் ஒரு அற்புதமான திட்டத்தை நடத்தி வருகிறார். முன்னாள் ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் Joh Jarvis, கைதிகளுக்கும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும்...

Work from Home முறை மாற்றங்களுக்கு மன்னிப்பு கோரிய எதிர்க்கட்சித் தலைவர்

வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைமையில் திருத்தங்களை அறிமுகப்படுத்துவதாகக் கூறியதற்காக எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறார். ஆஸ்திரேலிய மக்களைக் கலந்தாலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்கப்படாது...

Gold Coast வீட்டில் தீப்பிடித்து எரிந்த மின்சார வாகனம்

கோல்ட் கோஸ்டில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (06) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்...

Work from Home முறை மாற்றங்களுக்கு மன்னிப்பு கோரிய எதிர்க்கட்சித் தலைவர்

வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைமையில் திருத்தங்களை அறிமுகப்படுத்துவதாகக் கூறியதற்காக எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறார். ஆஸ்திரேலிய மக்களைக் கலந்தாலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்கப்படாது...

கைதிகளுக்கு தியானம் கற்றுத்தரும் ஆஸ்திரேலிய பெண்

நியூயார்க்கின் Rikers தீவில் உள்ள ஒரு ஆஸ்திரேலியப் பெண் ஒரு அற்புதமான திட்டத்தை நடத்தி வருகிறார். முன்னாள் ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் Joh Jarvis, கைதிகளுக்கும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும்...