Newsபோரினால் காஸாவுக்கு ஏற்பட்ட இழப்புக்கள்

போரினால் காஸாவுக்கு ஏற்பட்ட இழப்புக்கள்

-

இஸ்ரேல் அரசு முதல்முறையாக காசாவில் 4 நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்வதாக தற்போது அறிவித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 50 பணயக் கைதிகளை ஹமாஸ் போராளிகள் விடுவிப்பார்கள் என்று இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. மேலும், ஒவ்வொரு முறை 10 பணயக் கைதிகளை விடுவிப்பதற்கும், கூடுதலாக ஒருநாள் போர் நிறுத்தம் என்ற வகையில் போர் நிறுத்த நாட்களை அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

காஸா, ஒரு மாதத்திற்கும் மேலாக இஸ்ரேலின் இடைவிடாத குண்டுவீச்சுகளால் அழிக்கப்பட்டுள்ளது, இது முழு சுற்றுப்புறங்களையும் சமன் செய்துள்ளதுடன் பலருக்கு மரணத்தையும் அழிவையும் அளித்துள்ளது.

இஸ்ரேல், முற்றுகையிட்ட காஸாவின் வெறும் 365 சதுர கிலோமீற்றர் அளவுப்பகுதியில் 25,000 டன்களுக்கும் அதிகமான வெடிபொருட்களை வீசியுள்ளது.

காசாவின் 222,000 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதுடன், 40,000 க்கும் மேற்பட்டவை முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான அழிவுகள் வடக்கு காஸாவில் மையம் கொண்டிருந்தாலும், இஸ்ரேல் பாதுகாப்பான வலயமாக அறிவித்திருந்த தெற்குப்பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பலஸ்தீனத்தின் காஸா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் தரைவழி, வான்வழி தாக்குதலில் 14 ஆயிரத்து 100 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், பலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 219 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

Air Vanuatu நெருக்கடியால் தவித்து வரும் ஆஸ்திரேலிய பயணிகள் 

எர்ன்ஸ்ட் அண்ட் யங் தேசிய விமான நிறுவனமான ஏர் வனுவாடுவைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. எவ்வாறாயினும், அவுஸ்திரேலியா மற்றும் வனுவாட்டுவில் பயணிகள் இன்னும் சிக்கித் தவித்து வருவதாகவும், இடைநிறுத்தப்பட்ட...

பாலஸ்தீனம் பற்றிய விவாதத்தில் ஆஸ்திரேலியா

பாலஸ்தீனம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் நடத்தப்படவுள்ள வாக்கெடுப்பு குறித்து அவுஸ்திரேலியா இன்னும் கலந்துரையாடி வருவதாக வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில்...

உக்ரைன்-ரஷ்யா போரில் 08 இலங்கையர்கள் உயிரிழப்பு

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் இடம்பெற்று வரும் யுத்தத்தில் இலங்கையின் 8 போர்வீரர்கள் உயிரிழந்துள்ளதாக விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த போர்வீரர்களில் ஆறு பேர் ரஷ்யாவிலும் இருவர்...

இரண்டு உயிர்காக்கும் மருந்துகளின் விலையை குறைக்க நடவடிக்கை

இருதய நோயாளர்களுக்கு வழங்கப்படும் இரண்டு உயிர்காக்கும் மருந்துகளின் விலையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மருந்து பயன் திட்டம் தொடர்பான இரண்டு மருந்துகளின் விலை அரசால் குறைக்கப்பட்டுள்ளது. விலைக்...

அவுஸ்திரேலியாவின் பெண்கள் தலைமை தாங்கும் தொழிற்துறைகளில் ஊதிய உயர்வு

அவுஸ்திரேலியாவின் பெண்கள் தலைமை தாங்கும் தொழிற்துறைகளில் 9 வீத ஊதிய உயர்வுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய தொழிற்சங்கம் பெண் ஆதிக்கம் செலுத்தும் தொழில்களில் ஒன்பது சதவீத...

சிட்னி மற்றும் பிரிஸ்பேன் விமான நிலையங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு அறிவிப்பு

ஏர் வனுவாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், அந்த விமானங்களில் இருக்கைகளை முன்பதிவு செய்துள்ள பயணிகள் இன்றும் நாளையும் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டாம் என பிரிஸ்பேன்...