Newsகூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய AI தொழில்நுட்பம்

கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய AI தொழில்நுட்பம்

-

செய்யறிவு தொழில்நுட்பங்கள் தற்போது அதிக வளர்ச்சியைக் கண்டு, பல வகையான செய்யறிவு தொழில்நுட்பங்கள் இப்போது இணையத்தில் பயன்பாட்டில் உள்ளன. அந்த வரிசையில் கூகுள் நிறுவனம் தனது ‘ஜெமினி’ (Gemini) எனும் புதிய செய்யறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

‘சாட் ஜிபிடி’க்கு (ChatGPT) போட்டியாக தனது ‘பார்ட்’ (Bard) செய்யறிவு தொழில்நுட்பத்தை கூகுள் அறிமுகம் செய்திருந்தது. பல போட்டிகளுக்கு நடுவில் ‘பார்ட்’ தொழில்நுட்பம் பெரிய வரவேற்பினைப் பெறவில்லை. ஆனால் கூகுள் தற்போது வெளியிட்டுள்ள ‘ஜெமினி’ அனைத்து செய்யறிவு தொழில்நுட்பங்களையும் விஞ்சும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.

ஜெமினி நனோ (Gemini Nano), ஜெமினி ப்ரோ (Gemini Pro), ஜெமினி அல்ட்ரா (Gemini Ultra) என மூன்று வடிவங்களில் இச்செய்யறிவு தொழில்நுட்பம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

ஜெமினி அல்ட்ரா, பல வழிகளில் உரையாடல்களை மேற்கொள்ளும் திறன்கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. எழுத்து வடிவில் மட்டுமல்லாமல், புகைப்படங்கள், காணொளி, ஒலி மற்றும் குறியீடு வடிவிலும் உரையாடல்களை மேற்கொள்ளும் திறன்கொண்டதாக ஜெமினி உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘ஜெமினி நனோ’ தற்போது ‘கூகுள் பார்ட்’ தளத்தில் பயன்பாட்டிற்கு உள்ள நிலையில், ஜெமினி ப்ரோ டிசம்பர் 13 அன்றும், ஜெமினி அல்ட்ரா அடுத்த ஆண்டும் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.

Latest news

சமூக ஊடகங்களின் அச்சுறுத்தலில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற மற்றொரு முயற்சி

நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா பிரச்சாரம், சமூக ஊடகங்களின் அச்சுறுத்தலில் இருந்து ஆஸ்திரேலியாவின் குழந்தைகளைக் காப்பாற்ற அரசாங்கத்தை கட்டாயப்படுத்தும் ஆன்லைன் மனுவில் கையெழுத்திட திட்டமிட்டுள்ளது. நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா...

அதிவேக ஆம்புலன்ஸ் சேவை கொண்ட மாநிலங்களின் பட்டியல் இதோ!

ஆஸ்திரேலியா மாநிலங்களில் அவசர அழைப்புகளுக்கு விரைவாக பதிலளிக்கும் ஆம்புலன்ஸ் சேவை பற்றிய சமீபத்திய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 3 ஆண்டுகளுக்குப் பிறகு, தெற்கு ஆஸ்திரேலிய ஆம்புலன்ஸ் சேவை...

விக்டோரியாவின் மக்கள் தொகை பற்றி வெளியான புதிய தகவல்

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளரும் மாநிலமாக விக்டோரியா அடையாளம் காணப்பட்டுள்ளது. 2022-2023 நிதியாண்டிற்கான புள்ளியியல் தரவுகளின்படி, மெல்போர்னின் மக்கள்தொகை 3.3 சதவீதம் அதிகரித்துள்ளது, இது விக்டோரியாவின் மற்ற பகுதிகளுடன்...

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு வயதுக் கட்டுப்பாடுகள்

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு வயதுக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கைகள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், இணையத்தில் குழந்தைகளின்...

போண்டாய் சந்தியில் வாள்வெட்டுக்கு இலக்கானவரின் தாயார் அரசாங்கத்திடம் விடுத்துள்ள வேண்டுகோள்

போண்டாய் சந்தியில் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவரின் தாயொருவர் அரசாங்கத்திடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளார். இந்த குற்றத்தில் ஈடுபட்ட நபரைப் போன்ற மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல நிதி மற்றும்...

கைது செய்யப்பட்ட மெல்போர்னில் போராட்டக்காரர்கள்

மெல்போர்னின் CBD இல் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆதரவு போராட்ட குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு தனித்தனி கூட்டங்களிலும் சுமார்...