குற்றச் செயல்களில் ஈடுபட்ட சில கைதிகள் தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு உள்துறை அமைச்சர் கிளேர் ஓ நீல் பொதுமக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
அண்மையில், தடுப்புக் காவலில் இருந்த 148 புலம்பெயர்ந்தோர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் விடுவிக்கப்பட்டனர், அவர்களில் 6 பேர் திருட்டு, போதைப்பொருள் வைத்திருந்தல் மற்றும் தாக்குதல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதன் காரணமாக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் விடுதலையானது பல கட்டங்களாக அண்மையில் ஆரம்பிக்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் மற்றுமொரு குழுவினர் விடுவிக்கப்படவுள்ளனர்.
புலம்பெயர்ந்தோரை காலவரையற்ற காவலில் வைத்திருப்பது புலம்பெயர்ந்தோரின் உரிமைகளுக்கு எதிரானது என்று நவம்பர் 8 ஆம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதற்கிடையில், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சவால் செய்யத் தயாராக இல்லை என்று உள்துறை அமைச்சர் கிளேர் ஓ நீல் தெரிவித்துள்ளார்.
எனினும், ஆஸ்திரேலியர்களின் பாதுகாப்பில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியம், மேலும் கடுமையான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு குடியுரிமையை ரத்து செய்யவும், சிறை தண்டனையை நீட்டிக்கவும் பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.





