Newsவீட்டின் கிறிஸ்துமஸ் மரத்தின் அடியில் இருந்த கொடிய விஷப் பாம்பு!

வீட்டின் கிறிஸ்துமஸ் மரத்தின் அடியில் இருந்த கொடிய விஷப் பாம்பு!

-

அவுஸ்திரேலியாவில் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த கிறிஸ்துமஸ் மரத்துக்கு அடியில் இருந்து விஷ பாம்பு ஒன்றை சிறுவன் கண்டுபிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அவுஸ்திரேலியாவில் வீடு ஒன்றில் வைக்கப்பட்டு இருந்த கிறிஸ்துமஸ் மரத்துக்கு அடியில் கொடூர விஷ தன்மையுடைய பாம்பு ஒன்று இருப்பதை அந்த வீட்டின் சிறுவன் கண்டுபிடித்த பிறகு குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து உள்ளது.

இதையடுத்து சிறுவனின் தாய் தங்களுடைய வரவேற்பறையில் கிழக்கு பழுப்பு பாம்பு (eastern brown snakes) ஊடுருவி இருப்பதாக சம்பந்தப்பட்ட பிரிவுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

நியூஸ்வீக் வழங்கிய தகவல் அடிப்படையில், குயின்ஸ்லாந்து பகுதியை சேர்ந்த Drew Godfrey என்ற பாம்பு பிடிப்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளார்.

பின் பாம்பை லாவகமாக பிடித்த Drew Godfrey இது தொடர்பான வீடியோ காட்சிகளை யூடியூப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

இந்த மீட்பு குறித்து பத்திரிக்கைக்கு Drew Godfrey வழங்கிய தகவலில், கிழக்கு பழுப்பு பாம்பு (eastern brown snakes) உலகின் 2வது கொடிய விஷத் தன்மை கொண்ட தரைப் பாம்பு என்று தெரிவித்துள்ளார்.

இது கிழக்கு மற்றும் தெற்கு அவுஸ்திரேலிய பகுதிகளில் காணப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் பாம்பு கடியால் உயிரிழந்த பெரும்பாலானோருக்கு இந்த கிழக்கு பழுப்பு பாம்பு தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

இந்த பாம்புகள் ஏறக்குறைய 50 முதல் 60 செ.மீ நீளம் வளரக்கூடியது. அத்துடன் இதனை கையாளுவது மிகவும் கடினமானது மற்றும் ஆபத்தானது அத்துடன் தற்போது வீட்டில் பிடிபட்டுள்ள பாம்பு இளம் வயதுடையது என்று பாம்பு பிடிப்பவர் Godfrey உறுதிப்படுத்தியுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...