Newsவீட்டின் கிறிஸ்துமஸ் மரத்தின் அடியில் இருந்த கொடிய விஷப் பாம்பு!

வீட்டின் கிறிஸ்துமஸ் மரத்தின் அடியில் இருந்த கொடிய விஷப் பாம்பு!

-

அவுஸ்திரேலியாவில் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த கிறிஸ்துமஸ் மரத்துக்கு அடியில் இருந்து விஷ பாம்பு ஒன்றை சிறுவன் கண்டுபிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அவுஸ்திரேலியாவில் வீடு ஒன்றில் வைக்கப்பட்டு இருந்த கிறிஸ்துமஸ் மரத்துக்கு அடியில் கொடூர விஷ தன்மையுடைய பாம்பு ஒன்று இருப்பதை அந்த வீட்டின் சிறுவன் கண்டுபிடித்த பிறகு குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து உள்ளது.

இதையடுத்து சிறுவனின் தாய் தங்களுடைய வரவேற்பறையில் கிழக்கு பழுப்பு பாம்பு (eastern brown snakes) ஊடுருவி இருப்பதாக சம்பந்தப்பட்ட பிரிவுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

நியூஸ்வீக் வழங்கிய தகவல் அடிப்படையில், குயின்ஸ்லாந்து பகுதியை சேர்ந்த Drew Godfrey என்ற பாம்பு பிடிப்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளார்.

பின் பாம்பை லாவகமாக பிடித்த Drew Godfrey இது தொடர்பான வீடியோ காட்சிகளை யூடியூப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

இந்த மீட்பு குறித்து பத்திரிக்கைக்கு Drew Godfrey வழங்கிய தகவலில், கிழக்கு பழுப்பு பாம்பு (eastern brown snakes) உலகின் 2வது கொடிய விஷத் தன்மை கொண்ட தரைப் பாம்பு என்று தெரிவித்துள்ளார்.

இது கிழக்கு மற்றும் தெற்கு அவுஸ்திரேலிய பகுதிகளில் காணப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் பாம்பு கடியால் உயிரிழந்த பெரும்பாலானோருக்கு இந்த கிழக்கு பழுப்பு பாம்பு தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

இந்த பாம்புகள் ஏறக்குறைய 50 முதல் 60 செ.மீ நீளம் வளரக்கூடியது. அத்துடன் இதனை கையாளுவது மிகவும் கடினமானது மற்றும் ஆபத்தானது அத்துடன் தற்போது வீட்டில் பிடிபட்டுள்ள பாம்பு இளம் வயதுடையது என்று பாம்பு பிடிப்பவர் Godfrey உறுதிப்படுத்தியுள்ளார்.

Latest news

விக்டோரியாவில் 4 அவசர நிலை காட்டுத்தீகள்

விக்டோரியாவில் நான்கு அவசர நிலை காட்டுத்தீகளை தீயணைப்பு வீரர்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இருப்பினும், காட்டுத்தீயால் ஏற்படும் சேதம் அதிகரித்து வருவதாகவும், பலத்த காற்று காரணமாக நிலைமை...

குயின்ஸ்லாந்தை தாக்கும் ஒரு புயல்

குயின்ஸ்லாந்து மாநிலம் ஒரு சூறாவளிக்கு தயாராகி வருகிறது. வெப்பமண்டல புயல் சூறாவளியாக மாற 60 சதவீத வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. Cairns இலிருந்து வடகிழக்கே...

குயின்ஸ்லாந்து வெள்ளத்தில் இறந்த 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்

குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து முதல்வர் David Crisafulli உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் ஆயிரக்கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில்,...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

Thai Pongal – Traditional Celebration

📅 15 January 2026🕗 8:00 AM – 11:00 AMIncludes traditional Pongal cooking, light refreshments, and the official launch of...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...