Newsஸ்மாா்ட்போன் பயன்பாட்டால் குழந்தைகளுக்கு மனநலம் பாதிக்கப்படும்

ஸ்மாா்ட்போன் பயன்பாட்டால் குழந்தைகளுக்கு மனநலம் பாதிக்கப்படும்

-

பெற்றோர்களில் 94 சதவீதமானோர், தங்கள் குழந்தைகளின் மனநலம் ஸ்மாா்ட்போன் பயன்பாட்டால் அதிகம் பாதிக்கப்படுவதாக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில் 91 சதவீதமானோர், இதன் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், சில கட்டுப்பாடுகள் வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

ஸ்மாா்ட்போனின் பயன்பாடு தவிா்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளமையால் பெற்றோா்கள்-குழந்தைகளுக்கு இடையேயான உறவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

கடந்த 2 மாதங்களில் 1,000 பெற்றோா்கள், 500 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில்,‘பெற்றோா்கள் ஒவ்வொரு நாளும் சராசரியாக 7.42 மணிநேரம் ஸ்மாா்ட்போனை பயன்படுத்துகின்றனா். இவ்வாறு பயன்படுத்தும் நேரத்தில், குழந்தைகள் ஏதாவது கேட்கும்போது தங்களுக்கு கோபம் ஏற்படுவதாக 90 சதவீத பெற்றோா்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்மாா்ட்போனின் அதீத பயன்பாடு தங்கள் குழந்தைகளின் சமூகத் தொடா்புக்கான திறன்களைப் பாதிப்பதாக அவா்களில் 91 சதவீதம் போ் கவலை தெரிவித்துள்ளனர்.

சராசரியாக, 12 வயதில் அறிதிறன்பேசியைப் பயன்படுத்தத் தொடங்கும் குழந்தைகள், அவற்றை சுமாா் 6.30 மணிநேரம் பயன்படுத்துவதுடன், அதில் விளையாட்டுகளில் (Gaming) பெரும்பாலான நேரத்தைக் கழிக்கின்றனா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளில் 60 சதவீதம் போ் தகவல்-பொழுதுபோக்கு அம்சங்களுக்காக அறிதிறன்பேசியைப் பயன்படுத்துவதாகவும் 50 சதவீதம் போ் தொலைதூரத்தில் உள்ள குடும்ப உறுப்பினா்கள், உறவினா்கள், நண்பா்கள் உள்ளிட்டோரைத் தொடா்புகொள்வதற்காக பயன்படுத்துவதாகவும் ஆய்வின்போது தெரியவந்துள்ளது.

Latest news

ஆடம்பர ஹோட்டல் போல தோற்றமளிக்கும் குயின்ஸ்லாந்து சிறை அறை

குயின்ஸ்லாந்தின் புதிய மற்றும் மிகப்பெரிய அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலையான Lockyer பள்ளத்தாக்கு சீர்திருத்த மையம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த சிறைச்சாலைக்கு $965.2 மில்லியன் செலவிடப்பட்டதாகவும், இதில் 1,500...

சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்த இணையும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள்

Utta பல்கலைக்கழகத்தில் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க பழமைவாத வர்ணனையாளர் சார்லி கிர்க்கிற்கு மெழுகுவர்த்திகளை ஏற்றி இறுதி மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இது சார்லி கிர்க்கின்...

“வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு” – த.வெ.க. தலைவர் விஜய்

‘திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?’ என திருச்சியில் தொண்டர்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் தலைவா் விஜய் கேள்வி...

நேபாளத்தில் முதல் பெண் பிரதமர் ஒருவர் பதவி ஏற்பு

இளைஞர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார்....

சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்த இணையும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள்

Utta பல்கலைக்கழகத்தில் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க பழமைவாத வர்ணனையாளர் சார்லி கிர்க்கிற்கு மெழுகுவர்த்திகளை ஏற்றி இறுதி மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இது சார்லி கிர்க்கின்...

“வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு” – த.வெ.க. தலைவர் விஜய்

‘திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?’ என திருச்சியில் தொண்டர்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் தலைவா் விஜய் கேள்வி...