Newsஸ்மாா்ட்போன் பயன்பாட்டால் குழந்தைகளுக்கு மனநலம் பாதிக்கப்படும்

ஸ்மாா்ட்போன் பயன்பாட்டால் குழந்தைகளுக்கு மனநலம் பாதிக்கப்படும்

-

பெற்றோர்களில் 94 சதவீதமானோர், தங்கள் குழந்தைகளின் மனநலம் ஸ்மாா்ட்போன் பயன்பாட்டால் அதிகம் பாதிக்கப்படுவதாக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில் 91 சதவீதமானோர், இதன் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், சில கட்டுப்பாடுகள் வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

ஸ்மாா்ட்போனின் பயன்பாடு தவிா்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளமையால் பெற்றோா்கள்-குழந்தைகளுக்கு இடையேயான உறவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

கடந்த 2 மாதங்களில் 1,000 பெற்றோா்கள், 500 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில்,‘பெற்றோா்கள் ஒவ்வொரு நாளும் சராசரியாக 7.42 மணிநேரம் ஸ்மாா்ட்போனை பயன்படுத்துகின்றனா். இவ்வாறு பயன்படுத்தும் நேரத்தில், குழந்தைகள் ஏதாவது கேட்கும்போது தங்களுக்கு கோபம் ஏற்படுவதாக 90 சதவீத பெற்றோா்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்மாா்ட்போனின் அதீத பயன்பாடு தங்கள் குழந்தைகளின் சமூகத் தொடா்புக்கான திறன்களைப் பாதிப்பதாக அவா்களில் 91 சதவீதம் போ் கவலை தெரிவித்துள்ளனர்.

சராசரியாக, 12 வயதில் அறிதிறன்பேசியைப் பயன்படுத்தத் தொடங்கும் குழந்தைகள், அவற்றை சுமாா் 6.30 மணிநேரம் பயன்படுத்துவதுடன், அதில் விளையாட்டுகளில் (Gaming) பெரும்பாலான நேரத்தைக் கழிக்கின்றனா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளில் 60 சதவீதம் போ் தகவல்-பொழுதுபோக்கு அம்சங்களுக்காக அறிதிறன்பேசியைப் பயன்படுத்துவதாகவும் 50 சதவீதம் போ் தொலைதூரத்தில் உள்ள குடும்ப உறுப்பினா்கள், உறவினா்கள், நண்பா்கள் உள்ளிட்டோரைத் தொடா்புகொள்வதற்காக பயன்படுத்துவதாகவும் ஆய்வின்போது தெரியவந்துள்ளது.

Latest news

Pocket Money-ஐ சேமிக்கும் குழந்தைகள் – ஆய்வில் தகவல்

ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான டாலர்களை பாக்கெட் மணியாக சேமித்து வைப்பதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நாட்டில் உள்ள பிள்ளைகள்...

ஆஸ்திரேலியர்களின் முக்கிய கவலைகளில் ஒன்றாக மாறியுள்ள வீட்டுக் காப்பீடு

ஆஸ்திரேலியர்களுக்கு வீட்டுக் காப்பீடு முதன்மையான பிரச்சனையாக மாறியுள்ளது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. வீட்டுக் காப்பீட்டு நிறுவனங்களை மாற்றுவதன் மூலம் நூற்றுக்கணக்கான டாலர்களைச் சேமிக்க முடியும்...

ஜெர்மனிக்கு சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவின் மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு பயணித்த இந்திய விமானம் வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து,...

கடத்தப்பட்ட விசாரணைக்கு சென்ற போலீஸ் கார்

நியூ சவுத் வேல்ஸின் நரோமைன் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல்துறை அதிகாரிகளின் காரை யாரோ திருடிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை...

ஜெர்மனிக்கு சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவின் மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு பயணித்த இந்திய விமானம் வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து,...

கடத்தப்பட்ட விசாரணைக்கு சென்ற போலீஸ் கார்

நியூ சவுத் வேல்ஸின் நரோமைன் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல்துறை அதிகாரிகளின் காரை யாரோ திருடிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை...