Newsஆஸ்திரேலியாவில் தவறுதலாக 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட தாய்

ஆஸ்திரேலியாவில் தவறுதலாக 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட தாய்

-

ஆஸ்திரேலியாவில் 4 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்ட தாய் 20 ஆண்டுகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் 1989 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் காலேப், பேட்ரிக், சாரா, லாரா, ஆகிய நான்கு குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் அவர்களுடைய தாய் கேத்லீன் போல்பிக்கின்(Kathleen Folbigg) கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில், கேத்லீன் போல்பிக்கின் தன்னுடைய 4 குழந்தைகளையும் அடித்தே கொன்றதாக குற்றம் சாட்டியதுடன் 2003ம் ஆண்டு கொலையாளி என தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பின் மேல்முறையீட்டில் அவருக்கான சிறை தண்டனை 30 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

தான் குழந்தைகளை கொலை செய்யவில்லை என தெரிவித்து தாய் கேத்லீன் தொடர்ந்து போராடி வந்த நிலையில், 2019 ஆண்டு விசாரணையின் போதும் அவர் மீதான குற்றம் உறுதிப்படுத்தப்பட்டது.

இறுதியில் 2022ம் ஆண்டு நடைபெற்ற விசாரணையின் போது குழந்தைகளின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு இருப்பது இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என்ற ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களின் மீது நியாயமான சந்தேகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நியூ செளத் வேல்ஸ் மாகாண இந்த ஆண்டு ஜூன் மாதம் தாய் கேத்லீனை மன்னித்து சிறையில் இருந்து விடுவித்தது.

இந்நிலையில் 4 குழந்தைகள் இறந்த வழக்கில் தாய் கேத்லீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நம்பமானதாக இல்லை என தெரிவித்து நியூ செளத் வேல்ஸ் நீதிமன்றம் அவரை இன்று இந்த வழக்கில் இருந்து விடுவித்துள்ளது.

அதே சமயம் இத்தனை ஆண்டுகள் சிறையில் தவறுதலாக அடைக்கப்பட்ட கேத்லீனுக்கு இழப்பீடு வழங்க கோரி அவரது வழக்கறிஞர் ரனீ ரெகோவின் சட்டக்குழு தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...