Newsஆஸ்திரேலியாவில் தவறுதலாக 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட தாய்

ஆஸ்திரேலியாவில் தவறுதலாக 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட தாய்

-

ஆஸ்திரேலியாவில் 4 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்ட தாய் 20 ஆண்டுகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் 1989 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் காலேப், பேட்ரிக், சாரா, லாரா, ஆகிய நான்கு குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் அவர்களுடைய தாய் கேத்லீன் போல்பிக்கின்(Kathleen Folbigg) கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில், கேத்லீன் போல்பிக்கின் தன்னுடைய 4 குழந்தைகளையும் அடித்தே கொன்றதாக குற்றம் சாட்டியதுடன் 2003ம் ஆண்டு கொலையாளி என தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பின் மேல்முறையீட்டில் அவருக்கான சிறை தண்டனை 30 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

தான் குழந்தைகளை கொலை செய்யவில்லை என தெரிவித்து தாய் கேத்லீன் தொடர்ந்து போராடி வந்த நிலையில், 2019 ஆண்டு விசாரணையின் போதும் அவர் மீதான குற்றம் உறுதிப்படுத்தப்பட்டது.

இறுதியில் 2022ம் ஆண்டு நடைபெற்ற விசாரணையின் போது குழந்தைகளின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு இருப்பது இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என்ற ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களின் மீது நியாயமான சந்தேகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நியூ செளத் வேல்ஸ் மாகாண இந்த ஆண்டு ஜூன் மாதம் தாய் கேத்லீனை மன்னித்து சிறையில் இருந்து விடுவித்தது.

இந்நிலையில் 4 குழந்தைகள் இறந்த வழக்கில் தாய் கேத்லீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நம்பமானதாக இல்லை என தெரிவித்து நியூ செளத் வேல்ஸ் நீதிமன்றம் அவரை இன்று இந்த வழக்கில் இருந்து விடுவித்துள்ளது.

அதே சமயம் இத்தனை ஆண்டுகள் சிறையில் தவறுதலாக அடைக்கப்பட்ட கேத்லீனுக்கு இழப்பீடு வழங்க கோரி அவரது வழக்கறிஞர் ரனீ ரெகோவின் சட்டக்குழு தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் தங்கப்பல்

தங்கம் மற்றும் வைரங்களால் செய்யப்பட்ட நீக்கக்கூடிய பல் உள்வைப்பு ஆஸ்திரேலியாவில் பிரபலமடைந்து வருகிறது. Grillz என்று அழைக்கப்படும் இது, பெர்த் பல் மருத்துவர் மஹிர் ஷாவால் தொடங்கப்பட்டது. ஒரு...

Weighted Vest தொடர்பில் நிபுணர்கள் எச்சரிக்கை

இணையத்தில் புதிய உடற்பயிற்சி போக்காக பிரபலமாகி வரும் எடையுள்ள ஆடையான Weighted Vest பற்றி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது கொழுப்பைக் குறைப்பதற்கும் தசையை வளர்ப்பதற்கும் பிரபலமாகிவிட்டது. ஆனால், எடையுள்ள...

வானிலை பேரழிவுகளை எதிர்கொள்ள பாரிய நிவாரணங்களை வழங்கும் அரசாங்கம்

கடுமையான வானிலை நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிப்பதற்காக ஆஸ்திரேலிய அரசாங்கம் 200 மில்லியன் டாலர் நிதியை அறிவித்துள்ளது. வெள்ளம், காட்டுத்தீ மற்றும் சூறாவளி போன்ற பேரழிவுகளைத் தணிப்பதற்காக...

$104 சேமிக்க $53,000 செலவிடும் ஆஸ்திரேலியப் பெண்

தெற்கு ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் பார்க்கிங் டிக்கெட்டுக்கு எதிராக நான்கு வருட சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு விதிக்கப்பட்ட அபராதம் வெறும் $104 மட்டுமே என்றாலும்,...

ஆஸ்திரேலிய பாராலிம்பிக் சாம்பியன் காலமானார்

ஆஸ்திரேலிய பாராலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற பைஜ் கிரேக்கோ ஞாயிற்றுக்கிழமை காலமானார். 28 வயதான அவர் அடிலெய்டில் உள்ள தனது வீட்டில் காலமானார். திடீர் உடல்நலக் குறைவு காரணமாக...

விக்டோரியன் லிபரல் கட்சிக்குள் எழுந்துள்ள தலைமைத்துவ நெருக்கடி

விக்டோரியன் எதிர்க்கட்சித் தலைவர் பிராட் பேட்டினை இனி ஆதரிக்கப் போவதில்லை என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, விக்டோரியன் லிபரல் கட்சிக்குள் தலைமைத்துவ நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாளைய...