Newsவெப்பநிலை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு கோரிக்கை

வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு கோரிக்கை

-

வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குறித்து உன்னிப்பாக அவதானம் செலுத்தியுள்ளதாக அவுஸ்திரேலியாவின் மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் அதிகபட்ச சராசரி வெப்பநிலை பதிவான ஆண்டாக 2023 கருதப்படுகிறது.

பல பிரதேசங்களில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸை அண்மித்துள்ளதாகவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் மக்களுக்கு பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறையினர் கருதுகின்றனர்.

அது தொடர்பில் அவதானம் செலுத்திய அவுஸ்திரேலிய அரசாங்கம், தற்போதைய நிலைமை தொடர்பில் மாநில அரச பிரதிநிதிகள் மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளது.

அதிக வெப்பநிலையை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய சில நடவடிக்கைகள் அங்கு இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 10 வருடங்களில் அவுஸ்திரேலியாவை பாதித்த வெப்பமான காலநிலை காரணமாக சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார மற்றும் நலன்புரி அவுஸ்திரேலியா நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழாயிரத்துக்கும் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Latest news

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பேரிடர் நிவாரணம் வழங்கும் ANZ

விக்டோரியன் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பேரிடர் நிவாரண உதவிகளை வழங்க ANZ தயாராகி வருகிறது. அதன்படி, வீட்டுக் கடன்கள், கிரெடிட் கார்டுகள், தனிநபர் கடன்கள் மற்றும் சில...

அமெரிக்காவை விட ஆஸ்திரேலியாவில் குழந்தைகளை விரும்பாத தம்பதிகளின் விகிதம் அதிகம்

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 2026 ஆம் ஆண்டில் 28 மில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு குடியேற்றத்தில் குறைவு மற்றும் குறைந்த பிறப்பு விகிதம் இருக்கலாம் என்று...

உடனடியாக திரும்பப் பெறப்படும் Kmart Ice Packs

ஆஸ்திரேலியா முழுவதும் Kmart கடைகளிலும் ஆன்லைனிலும் விற்கப்பட்ட இரண்டு Anko சிறிய மற்றும் பெரிய ஜெல் ஐஸ் பேக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன, ஏனெனில் அவற்றில் நச்சுப்...

தெற்கு ஆஸ்திரேலியாவில் 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள கோகோயின் பறிமுதல்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு $20 மில்லியன் மதிப்புள்ள கோகைனை ரகசியமாக இறக்குமதி செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, அடிலெய்டைச் சேர்ந்த ஒரு பெண் நீதிமன்றத்தில் ஆஜரானார். துப்பறியும் நபர்கள்,...

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி – 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காணாமல் போயுள்ளனர். வியாழக்கிழமை பிற்பகல் செபு நகரின் பினாலிவ் கிராமத்தில் மலை போல்...