Newsவெப்பநிலை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு கோரிக்கை

வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு கோரிக்கை

-

வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குறித்து உன்னிப்பாக அவதானம் செலுத்தியுள்ளதாக அவுஸ்திரேலியாவின் மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் அதிகபட்ச சராசரி வெப்பநிலை பதிவான ஆண்டாக 2023 கருதப்படுகிறது.

பல பிரதேசங்களில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸை அண்மித்துள்ளதாகவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் மக்களுக்கு பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறையினர் கருதுகின்றனர்.

அது தொடர்பில் அவதானம் செலுத்திய அவுஸ்திரேலிய அரசாங்கம், தற்போதைய நிலைமை தொடர்பில் மாநில அரச பிரதிநிதிகள் மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளது.

அதிக வெப்பநிலையை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய சில நடவடிக்கைகள் அங்கு இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 10 வருடங்களில் அவுஸ்திரேலியாவை பாதித்த வெப்பமான காலநிலை காரணமாக சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார மற்றும் நலன்புரி அவுஸ்திரேலியா நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழாயிரத்துக்கும் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Latest news

விக்டோரியாவில் தொற்றுநோய் பரவல் – 20 இடங்கள் அடையாளம்

2026 ஆம் ஆண்டில் இதுவரை விக்டோரியாவில் நான்கு தட்டம்மை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக மாநில சுகாதார...

ரொக்க விகிதம் குறித்த ரிசர்வ் வங்கியின் முடிவு

எதிர்பார்த்தது போலவே, ரிசர்வ் வங்கி ரொக்க விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்து, 3.85 சதவீதமாகக் கொண்டு வந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இன்று இதை அறிவித்துள்ளது. இதற்கிடையில், மத்திய...

ஆஸ்திரேலிய தின குண்டுவெடிப்பு தாக்குதல் முயற்சியை கண்டிக்கும் மத்திய நாடாளுமன்றம்

ஆஸ்திரேலிய தினத்தன்று நடந்த படையெடுப்பு தின பேரணியில் குண்டுவெடிப்பு நடத்த முயற்சித்ததை வன்மையாகக் கண்டிப்பதாக மத்திய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய தினத்திற்குப் பிறகு முதல் முறையாக கூட்டாட்சி...

ADHD சிகிச்சையை எளிதாக்க விக்டோரிய அரசாங்கத்தின் புதிய நடவடிக்கை

பெரியவர்கள் மற்றும் குழந்தைகளில் ADHD (கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு) நோயைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதை எளிதாக்குவதற்காக விக்டோரியன் அரசு ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ்,...

ஆஸ்திரேலிய தின குண்டுவெடிப்பு தாக்குதல் முயற்சியை கண்டிக்கும் மத்திய நாடாளுமன்றம்

ஆஸ்திரேலிய தினத்தன்று நடந்த படையெடுப்பு தின பேரணியில் குண்டுவெடிப்பு நடத்த முயற்சித்ததை வன்மையாகக் கண்டிப்பதாக மத்திய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய தினத்திற்குப் பிறகு முதல் முறையாக கூட்டாட்சி...

Bondi பயங்கரவாத சுவரொட்டிகள் குறித்து மெல்பேர்ண் மேயர் கருத்து

மெல்பேர்ண் நகரின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள Bondi பயங்கரவாதி நவீத் அக்ரமின் சுவரொட்டிகள் குறித்து மெல்பேர்ண் மேயர் Nick Reece கருத்து தெரிவித்துள்ளார். ஒரு பயங்கரவாதியை ஊக்குவிப்பதற்காகவோ...