Sportsதோனியின் இலக்கம் 7 ஜேர்சிக்கு ஓய்வு

தோனியின் இலக்கம் 7 ஜேர்சிக்கு ஓய்வு

-

இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனியின் இலக்கம் 7 ஜேர்சிக்கு ஓய்வளிக்க BCCI முடிவு செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட்டுக்கு மகேந்திர சிங் தோனி வழங்கியுள்ள பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக BCCI இந்த முடிவை எடுத்துள்ளது. இந்திய அணியின் மிகவும் வெற்றிகரமான தலைவராக வலம் வந்த மகேந்திர சிங் தோனி கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்குப் பிறகு சர்வதேசப் போட்டிகளில் விளையாடவில்லை. அதன்பின், 2020 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 15 ஆம் திகதி தனது ஓய்வு முடிவை தோனி அறிவித்தார்.

மகேந்திர சிங் தோனியின் ஓய்வுக்குப் பிறகு அவர் அணிந்திருந்த இலக்கம் 7 ஜேர்சி எந்த ஒரு வீரருக்கும் வழங்கப்படவில்லை. சச்சின் டெண்டுல்கரின் நம்பர் 10 ஜெர்சியும் அவரது ஓய்வுக்குப் பிறகு யாருக்கும் வழங்கப்படாமல் இருந்தது. பின்னர், கடந்த 2013 ஆம் ஆண்டு இலக்கம் 10 ஜேர்சி அணியை அணிவதற்கு விருப்பம் தெரிவித்த ஷர்துல் தாக்குர் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அதன்பின், எந்த ஒரு வீரரும் சச்சினின் நம்பர் 10 ஜேர்சி அணிந்து விளையாடவில்லை.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனியின் இலக்கம் 7 ஜேர்சிக்கு ஓய்வளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக BCCI துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது: மகேந்திர சிங் தோனி மிகச் சிறந்த வீரர். இந்திய மற்றும் உலக கிரிக்கெட்டுக்கு அவர் அளித்துள்ள பங்களிப்பு அளப்பரியது. அவரது பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக நம்பர் 7 ஜேர்சிக்கு ஓய்வளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது என்றார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நியூசிலாந்துடனான உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு தோனி தனது ஓய்வு முடிவை அறிவித்த பிறகு, BCCI விரைவில் வெள்ளைப் பந்து போட்டிகளில் இலக்கம் 7 ஜேர்சிக்கு ஓய்வளிக்கும் என நம்புவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta, லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு Instagram, Facebook மற்றும் Threads-இல் இருந்து தங்கள் தரவை "download or delete"...