Sportsதோனியின் இலக்கம் 7 ஜேர்சிக்கு ஓய்வு

தோனியின் இலக்கம் 7 ஜேர்சிக்கு ஓய்வு

-

இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனியின் இலக்கம் 7 ஜேர்சிக்கு ஓய்வளிக்க BCCI முடிவு செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட்டுக்கு மகேந்திர சிங் தோனி வழங்கியுள்ள பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக BCCI இந்த முடிவை எடுத்துள்ளது. இந்திய அணியின் மிகவும் வெற்றிகரமான தலைவராக வலம் வந்த மகேந்திர சிங் தோனி கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்குப் பிறகு சர்வதேசப் போட்டிகளில் விளையாடவில்லை. அதன்பின், 2020 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 15 ஆம் திகதி தனது ஓய்வு முடிவை தோனி அறிவித்தார்.

மகேந்திர சிங் தோனியின் ஓய்வுக்குப் பிறகு அவர் அணிந்திருந்த இலக்கம் 7 ஜேர்சி எந்த ஒரு வீரருக்கும் வழங்கப்படவில்லை. சச்சின் டெண்டுல்கரின் நம்பர் 10 ஜெர்சியும் அவரது ஓய்வுக்குப் பிறகு யாருக்கும் வழங்கப்படாமல் இருந்தது. பின்னர், கடந்த 2013 ஆம் ஆண்டு இலக்கம் 10 ஜேர்சி அணியை அணிவதற்கு விருப்பம் தெரிவித்த ஷர்துல் தாக்குர் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அதன்பின், எந்த ஒரு வீரரும் சச்சினின் நம்பர் 10 ஜேர்சி அணிந்து விளையாடவில்லை.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனியின் இலக்கம் 7 ஜேர்சிக்கு ஓய்வளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக BCCI துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது: மகேந்திர சிங் தோனி மிகச் சிறந்த வீரர். இந்திய மற்றும் உலக கிரிக்கெட்டுக்கு அவர் அளித்துள்ள பங்களிப்பு அளப்பரியது. அவரது பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக நம்பர் 7 ஜேர்சிக்கு ஓய்வளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது என்றார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நியூசிலாந்துடனான உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு தோனி தனது ஓய்வு முடிவை அறிவித்த பிறகு, BCCI விரைவில் வெள்ளைப் பந்து போட்டிகளில் இலக்கம் 7 ஜேர்சிக்கு ஓய்வளிக்கும் என நம்புவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest news

$4,500 மதிப்புள்ள புற்றுநோய் மருந்தை $35க்கு வழங்கத் தயாராகும் ஆஸ்திரேலிய அரசாங்கம் 

மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்தான டுகாடினிப்பை, எதிர்காலத்தில் மருந்து நன்மைகள் திட்டத்தில் (PBS) சேர்க்க மத்திய அரசு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இது செயல்படுத்தப்பட்டால்,...

“போராட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன” – NSW பிரதமர் கடுமையான விதிகள்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் ஒரு வார ஆண்டு நிறைவையொட்டி போராட்டங்களைத் திட்டமிடும் எவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ்...

Bondi நினைவேந்தல் – கட்டிடங்களின் உச்சியில் துப்பாக்கி சுடும் வீரர்கள்

ஆஸ்திரேலியாவில் Bondi நினைவேந்தல் நிகழ்வை கண்காணிக்க, காவல்துறையினர் துப்பாக்கிகளுடன் கட்டிடங்களின் உச்சியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.  15 உயிர்களை பலி வாங்கிய போண்டி துயர சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம்...

குழந்தைகளுக்கான ஹார்மோன் சிகிச்சைகளை நிறுத்த NT அரசாங்கம் முடிவு

வடக்குப் பிரதேச அரசாங்கம், அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பாலியல்-மாற்ற ஹார்மோன் சிகிச்சை மற்றும் 'பருவமடைதல் தடுப்பான்கள்' வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. சுகாதார...

குழந்தைகளுக்கான ஹார்மோன் சிகிச்சைகளை நிறுத்த NT அரசாங்கம் முடிவு

வடக்குப் பிரதேச அரசாங்கம், அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பாலியல்-மாற்ற ஹார்மோன் சிகிச்சை மற்றும் 'பருவமடைதல் தடுப்பான்கள்' வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. சுகாதார...

பிரபலமான கோல்ட் கோஸ்ட் பூங்காவில் பெண் ஒருவர் மீது தாக்குதல்

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணியளவில் பர்லீ ஹெட்ஸ் தேசிய பூங்காவில் நடந்து சென்று கொண்டிருந்த 38 வயது பெண் ஒருவர், அடையாளம் தெரியாத ஒருவரால்...