Sportsதோனியின் இலக்கம் 7 ஜேர்சிக்கு ஓய்வு

தோனியின் இலக்கம் 7 ஜேர்சிக்கு ஓய்வு

-

இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனியின் இலக்கம் 7 ஜேர்சிக்கு ஓய்வளிக்க BCCI முடிவு செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட்டுக்கு மகேந்திர சிங் தோனி வழங்கியுள்ள பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக BCCI இந்த முடிவை எடுத்துள்ளது. இந்திய அணியின் மிகவும் வெற்றிகரமான தலைவராக வலம் வந்த மகேந்திர சிங் தோனி கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்குப் பிறகு சர்வதேசப் போட்டிகளில் விளையாடவில்லை. அதன்பின், 2020 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 15 ஆம் திகதி தனது ஓய்வு முடிவை தோனி அறிவித்தார்.

மகேந்திர சிங் தோனியின் ஓய்வுக்குப் பிறகு அவர் அணிந்திருந்த இலக்கம் 7 ஜேர்சி எந்த ஒரு வீரருக்கும் வழங்கப்படவில்லை. சச்சின் டெண்டுல்கரின் நம்பர் 10 ஜெர்சியும் அவரது ஓய்வுக்குப் பிறகு யாருக்கும் வழங்கப்படாமல் இருந்தது. பின்னர், கடந்த 2013 ஆம் ஆண்டு இலக்கம் 10 ஜேர்சி அணியை அணிவதற்கு விருப்பம் தெரிவித்த ஷர்துல் தாக்குர் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அதன்பின், எந்த ஒரு வீரரும் சச்சினின் நம்பர் 10 ஜேர்சி அணிந்து விளையாடவில்லை.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனியின் இலக்கம் 7 ஜேர்சிக்கு ஓய்வளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக BCCI துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது: மகேந்திர சிங் தோனி மிகச் சிறந்த வீரர். இந்திய மற்றும் உலக கிரிக்கெட்டுக்கு அவர் அளித்துள்ள பங்களிப்பு அளப்பரியது. அவரது பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக நம்பர் 7 ஜேர்சிக்கு ஓய்வளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது என்றார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நியூசிலாந்துடனான உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு தோனி தனது ஓய்வு முடிவை அறிவித்த பிறகு, BCCI விரைவில் வெள்ளைப் பந்து போட்டிகளில் இலக்கம் 7 ஜேர்சிக்கு ஓய்வளிக்கும் என நம்புவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...