புத்தாண்டில் பல்வேறு குற்றங்களுக்காக 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக விக்டோரியா காவல்துறை தெரிவித்துள்ளது.
தாக்குதல், பாலியல் வன்முறை, போக்குவரத்து விதிமீறல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விக்டோரியா காவல்துறையினரால் 26 ஆயுதங்களைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், புத்தாண்டை முன்னிட்டு பெரும்பாலான மக்கள் ஒழுக்கத்துடனும் பொறுப்புடனும் நடந்து கொண்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டதாகவும் இதனால் பல முரண்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.





