Newsமீண்டும் முதலிடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம்

மீண்டும் முதலிடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம்

-

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி சந்தையில் அதிக மதிப்பு மிக்க நிறுவனம் என்ற அந்தஸ்த்தை எட்டியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி மைக்ரோசாப்ட் சந்தை மதிப்பு 2.87 ட்ரில்லியன் டொலர்களாகும். முன்னதாக 2018 மற்றும் 2021 ஆண்டுகளில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இதே போன்று உலகின் மதிப்பு மிக்க நிறுவனம் என்ற நிலையை எட்டியமை குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் இந்த அந்தஸ்த்தை பெற்றிருக்கிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூடிங் பிரிவான அஸ்யூர் அதிக வருவாய் ஈட்டிக் கொடுத்ததே அந்தஸ்த்து அதிகரிக்க முக்கிய காரணம் என கூறப்படுகிறது. அமேசான் வெப் சேவைகளுக்கு கடும் போட்டியாளரான அஸ்யூர் வருவாய் வருடாந்திர அடிப்படையில் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

கிளவுட் கம்ப்யூடிங் பிரிவில் மைக்ரோசாப்ட் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கும் என்றும், இதன் சந்தை மதிப்பு மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகம் என தெரிகிறது. இதேபோன்று செயற்கை நுண்ணறிவு மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்களிலும் கவனம் செலுத்தும் போது மைக்ரோசாப்ட்-இன் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியா பயணித்துள்ள மன்னர் சார்லசின் ரகசிய மகனால் உருவாகியுள்ள ஆபத்து

பிரித்தானிய மன்னர் சார்லசும் அவரது மனைவியான கமீலாவும் ஆஸ்திரேலியாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார்கள். இந்நிலையில், சார்லசின் ரகசிய மகன் என தன்னை அழைத்துக்கொள்ளும் நபரால் பிரச்சினை ஒன்று...

ஆஸ்திரேலியாவில் வீட்டு வாடகை உயர்வதற்கான காரணம் குறித்து புதிய அறிக்கை

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வீட்டு வாடகைக்கு சொத்து உரிமையாளர்களே காரணம் என்ற கூற்று ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கியின் புதிய அறிக்கையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதங்கள் மற்றும் வாடகைகள்...

விக்டோரியாவின் ஆசிரியர்களுக்கு வாரத்தில் 4 நாள் வேலை திட்டமா?

விக்டோரியா மாகாண முதல்வர் ஜெசிந்தா ஆலன் மற்றும் எதிர்க்கட்சிகள் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வாரத்தில் நான்கு நாள் வேலை வழங்க வேண்டும் என்ற திட்டத்தை நிராகரித்துள்ளன. ஆஸ்திரேலிய...

விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இடியுடன் கூடிய புயல் நிலை

இடியுடன் கூடிய புயல் நிலை காரணமாக விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். விக்டோரியா மாநில அவசர சேவை கடந்த 24...

பெர்த்தில் ஒரு வீட்டின் மீது மோதிய கார் – 3 பேர் பலி

இன்று காலை பெர்த்தின் புறநகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு அருகில் கார் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 5.10 மணியளவில் Carlisle...

விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இடியுடன் கூடிய புயல் நிலை

இடியுடன் கூடிய புயல் நிலை காரணமாக விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். விக்டோரியா மாநில அவசர சேவை கடந்த 24...