Newsவீடு வாங்கினால் மனைவி இலவசம் - சர்ச்சைக்குள்ளான விளம்பரம்

வீடு வாங்கினால் மனைவி இலவசம் – சர்ச்சைக்குள்ளான விளம்பரம்

-

போட்டி நிறைந்த உலகில் தங்கள் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு வியாபார நிறுவனங்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. மேலும், வியாபாரத்தை பெருக்குவதற்காகவும், வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும் சில நிறுவனங்கள் பம்பர் பரிசு, கேஷ் பேக் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவிக்கின்றன.

அதுபோன்ற விளம்பரங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சில நேரங்களில் எதிர்மறையாகவும் அமைந்து விடுகிறது. அப்படி ஒரு நிகழ்வு சீனாவில் நடைபெற்றுள்ளது.

சீனாவின் டிரையஜின் நகரை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று சமீபத்தில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒரு விளம்பரம் செய்தது. அதில் எங்கள் நிறுவனத்தில் வீடு வாங்கினால் உங்கள் மனைவியை இலவசமாக பெறுங்கள் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

இந்த விளம்பரம் சமூகவலைத்தளங்கள் மற்றும் சுவர் போஸ்டர்கள் மூலம் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடு வாங்கினால் மனைவி இலவசமா? என அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ஆஸ்திரேலிய மதிப்பில் 6000 டொலர்கள் அபராதம் விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்த விளம்பரத்தை மக்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அதாவது தங்கள் முயற்சியில் வீடு வாங்கி உங்கள் மனைவிக்கு கொடுங்கள் என்ற அர்த்தத்தில் விளம்பரம் செய்யப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Latest news

சமூக ஊடகங்களின் அச்சுறுத்தலில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற மற்றொரு முயற்சி

நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா பிரச்சாரம், சமூக ஊடகங்களின் அச்சுறுத்தலில் இருந்து ஆஸ்திரேலியாவின் குழந்தைகளைக் காப்பாற்ற அரசாங்கத்தை கட்டாயப்படுத்தும் ஆன்லைன் மனுவில் கையெழுத்திட திட்டமிட்டுள்ளது. நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா...

அதிவேக ஆம்புலன்ஸ் சேவை கொண்ட மாநிலங்களின் பட்டியல் இதோ!

ஆஸ்திரேலியா மாநிலங்களில் அவசர அழைப்புகளுக்கு விரைவாக பதிலளிக்கும் ஆம்புலன்ஸ் சேவை பற்றிய சமீபத்திய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 3 ஆண்டுகளுக்குப் பிறகு, தெற்கு ஆஸ்திரேலிய ஆம்புலன்ஸ் சேவை...

விக்டோரியாவின் மக்கள் தொகை பற்றி வெளியான புதிய தகவல்

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளரும் மாநிலமாக விக்டோரியா அடையாளம் காணப்பட்டுள்ளது. 2022-2023 நிதியாண்டிற்கான புள்ளியியல் தரவுகளின்படி, மெல்போர்னின் மக்கள்தொகை 3.3 சதவீதம் அதிகரித்துள்ளது, இது விக்டோரியாவின் மற்ற பகுதிகளுடன்...

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு வயதுக் கட்டுப்பாடுகள்

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு வயதுக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கைகள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், இணையத்தில் குழந்தைகளின்...

போண்டாய் சந்தியில் வாள்வெட்டுக்கு இலக்கானவரின் தாயார் அரசாங்கத்திடம் விடுத்துள்ள வேண்டுகோள்

போண்டாய் சந்தியில் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவரின் தாயொருவர் அரசாங்கத்திடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளார். இந்த குற்றத்தில் ஈடுபட்ட நபரைப் போன்ற மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல நிதி மற்றும்...

கைது செய்யப்பட்ட மெல்போர்னில் போராட்டக்காரர்கள்

மெல்போர்னின் CBD இல் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆதரவு போராட்ட குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு தனித்தனி கூட்டங்களிலும் சுமார்...