Newsவெளியீட்டுக்கு தாயாராகும் கேலக்ஸி ரிங்

வெளியீட்டுக்கு தாயாராகும் கேலக்ஸி ரிங்

-

சம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ரிங் பற்றிய டீசரை சமீபத்தில் நடைபெற்று முடிந்த கேலக்ஸி அன்பேக்ட் 2024 நிகழ்வில் வெளியிட்டது. எனினும், இது பற்றிய விவரங்கள் அதிகளவில் வெளியாகவில்லை. எனினும், இதில் உடல் ஆரோக்கியம் சார்ந்த ஏராளமான அம்சங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான டீசரில் கேலக்ஸி ரிங் சாதனம் சில்வர் நிறம் கொண்டிருக்கும் என தெரியவந்தது.

புதிய கேலக்ஸி ரிங் சாதனத்தை பயன்படுத்தியதாக டெக் துறையை சேர்ந்த கிரீன்கார்ட் தெரிவித்துள்ளார். இந்த சாதனத்தை தன்னால் புகைப்படம் எடுக்க முடியவில்லை என்றும், சிறிது நேரம் அதை பயன்படுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, கேலக்ஸி ரிங் சாதனம் மிக குறைந்த எடை கொண்டிருக்கும் என்றும் இது பல்வேறு அளவுகளில் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது. புதிய சாதனம் அதிகபட்சம் மூன்றுவித நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்சங் வெளியிட்ட டீசரில் கேலகிஸி ரிங் சில்வர் நிறம் கொண்டிருந்தது.

இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரவிருக்கும் கேலக்ஸி ரிங் விலை விவரங்கள் மற்றும் இதர அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. தற்போதைய தகவல்களின் படி ஜூலை அல்லது ஒகஸ்ட் மாதம் நடைபெறும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் கேலக்ஸி ரிங் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

நன்றி தமிழன்

Latest news

திரும்பப் பெறப்பட்ட Tesla வாகனங்கள் 

மென்பொருள் பிரச்சினை காரணமாக இரண்டு கார் மாடல்களை திரும்பப் பெற Tesla நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மென்பொருள் பிரச்சினை வாகனத்தின் ஸ்டீயரிங் சரியாக இயங்குவதைத் தடுக்கக்கூடும் என்று...

பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ள 50 நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று

அதிக பயங்கரவாத ஆபத்து உள்ள 50 நாடுகளில் ஆஸ்திரேலியாவும் பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்திய ஆய்வின்படி, அந்த 50 நாடுகளில் மேற்கத்திய நாடுகளாகக் கருதப்படும் 7 நாடுகளும் அடங்கும், மேலும்...

செல்லப்பிராணிகளை வளர்க்கும் விக்டோரியர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு

செல்லப்பிராணிகளை வைத்திருக்கும் விக்டோரியர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்வான் ஹில் நகர சபை, அதன் அதிகார வரம்பில் வசிக்கும் விக்டோரியர்களிடம், செல்லப்பிராணியைத் தத்தெடுக்க இனி வீட்டுப்...

விமானப் பயணத்திற்கு பயப்படும் ஆஸ்திரேலியர்கள்!

ஆஸ்திரேலியர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் விமானப் பயணத்திற்கு பயப்படுவதாக சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை இதை ஒரு அதிர்ச்சிகரமான சூழ்நிலை என்று...

விக்டோரியா மாநிலத்தில் ஜாமீன் சட்டங்கள் கடுமையாக்க வேண்டும் – பிரதமர் ஜெசிந்தா ஆலன்

விக்டோரியா மாநிலத்தில் ஜாமீன் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ஜெசிந்தா ஆலன் வலியுறுத்துகிறார். இருப்பினும், குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள், மாநிலப் பிரதமரின் வாக்குறுதி வார்த்தைகளுக்குள் மட்டுமே...

பிரிஸ்பேர்ண் குடியிருப்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரிஸ்பேர்ண் உட்பட குயின்ஸ்லாந்து மக்கள் ஆல்ஃபிரட் சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூறாவளி குயின்ஸ்லாந்து கடற்கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், நேற்று...