Newsகுரங்குகளுக்கான நகரை உருவாக்கும் அமெரிக்கா!

குரங்குகளுக்கான நகரை உருவாக்கும் அமெரிக்கா!

-

அமெரிக்காவைச் சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனமான ‘சேபர் ஹியூமன் மெடிசின்ஸ்’ தொடர்ந்து மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் ஜார்ஜியா மாகாணத்தின் பெய்ன்பிரிட்ஜ் நகருக்கு அருகே சுமார் 30,000 குரங்குகள் வசிக்க 200 ஏக்கரில் ஒரு நகரை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

இங்கு இனப்பெருக்கம் செய்யப்பட்டு வளர்க்கப்படும் நீண்டவால் குரங்குகளை பல்கலைக்கழகங்கள் மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு மருத்துவ ஆய்வுக்கு அனுப்பி வைக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதிவாசி டேவிட் பார்பர் கூறும் போது, “பெய்ன்பிரிட்ஜ் நகரில் சுமார் 14 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இந்நகரில் 30 ஆயிரம் குரங்குகளை வளர்த்தால் எங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். எனவே இந்த திட்டத்தை உடனடியாக கைவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

இதுபோல, மருத்துவ ஆராய்ச்சிக்காக குரங்குகளை ஓரிடத்தில் அடைத்து வைத்து இனப்பெருக்கம் செய்வது கொடூரமானது என விலங்குகள் நல அமைப்புகள் தெரிவித்துள்ளன.

நன்றி தமிழன்

Latest news

உலக சுகாதார நிறுவனம் கொடிய நிபா வைரஸ் குறித்து எச்சரிக்கை

இந்தியாவில் கொடிய நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகளின் அறிக்கை குறித்து உலக சுகாதார நிறுவனம் கவனத்தை ஈர்த்துள்ளது. மேற்கு வங்காளத்தின் Barasat-இல் உள்ள ஒரு தனியார்...

உலகெங்கிலும் உள்ள பல இடங்களுக்கு Qantas சிறப்பு கட்டணங்கள்

Qantas Airlines இந்த ஆண்டின் மிகப்பெரிய சர்வதேச விமான விளம்பரத்தைத் தொடங்கியுள்ளது. இதன் கீழ், உலகெங்கிலும் உள்ள பல பிரபலமான இடங்களுக்கு சிறப்பு விலைச் சலுகைகள் கிடைக்கின்றன. நேற்று...

அர்ஜென்டினாவில் குழந்தைகளை தத்தெடுக்கத் திட்டமிடும் ஆஸ்திரேலியர்களுக்கு அரசு ஆலோசனை

அர்ஜென்டினாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை எதிர்பார்க்கும் ஆஸ்திரேலிய பெற்றோருக்கு அரசாங்கம் ஒரு சிறப்பு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. இது நாட்டில் உள்ள சட்ட நிலைமை மற்றும்...

பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை விற்க அரசு முடிவு

அல்பேனிய அரசாங்கம் பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 இடங்களை விற்க முடிவு செய்துள்ளது . இதன் மூலம் 1.8 முதல் 3 பில்லியன் டாலர்கள் வரை பெறலாம்...

பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை விற்க அரசு முடிவு

அல்பேனிய அரசாங்கம் பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 இடங்களை விற்க முடிவு செய்துள்ளது . இதன் மூலம் 1.8 முதல் 3 பில்லியன் டாலர்கள் வரை பெறலாம்...

மெல்பேர்ணில் 17 வயது சிறுவன் ஒருவன் வாளால் தாக்கப்பட்டு படுகாயம்

மெல்பேர்ண் , செயிண்ட் கில்டாவில் நடந்த ஒரு சம்பவத்தில், 17 வயது சிறுவன் ஒருவன் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு, வாகனம் ஒன்றினால் மோதி படுகாயமடைந்தான் . இந்த...