Newsதிடீரென மூடப்பட்ட ஈபிள் கோபுரம் - சிறமத்துக்குள்ளான ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்

திடீரென மூடப்பட்ட ஈபிள் கோபுரம் – சிறமத்துக்குள்ளான ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்

-

உலக சுற்றுலாத் தலங்களில் ஒன்றான பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஈபிள் கோபுரத்தின் நிதி விவகாரங்கள் முறையாக நிர்வகிக்கப்படாமை மற்றும் செலவுகள் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி ஈபிள் கோபுரத்தின் தொழிற்சங்கங்கள் நேற்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈபிள் டவர் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வது இது இரண்டாவது முறையாகும்.

எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக இங்கு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்கான பணப்பற்றாக்குறை காரணமாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸின் பாரிஸில் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது, திருவிழாவின் போது தொழிலாளர்கள் மற்றொரு வேலைநிறுத்தம் செய்வது குறித்து குறிப்புகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வருடத்திற்கு ஏறக்குறைய 7 மில்லியன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஈபிள் கோபுரத்திற்கு வருகை தருவதாகவும், நேற்று கோபுரத்தை மூடியதன் மூலம் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸ் தலைநகரில் இவ்வருடம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதால், பாரிஸுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும், அந்தக் காலப்பகுதியில் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிப்பது பொருத்தமான சூழ்நிலையல்ல எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...

மாசுபடும் அபாயம் காரணமாக திரும்பப் பெறப்பட்ட Deli Meats

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் Deli இறைச்சிகள் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. இந்த பொருட்கள் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. உணவு...