Newsதிடீரென மூடப்பட்ட ஈபிள் கோபுரம் - சிறமத்துக்குள்ளான ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்

திடீரென மூடப்பட்ட ஈபிள் கோபுரம் – சிறமத்துக்குள்ளான ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்

-

உலக சுற்றுலாத் தலங்களில் ஒன்றான பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஈபிள் கோபுரத்தின் நிதி விவகாரங்கள் முறையாக நிர்வகிக்கப்படாமை மற்றும் செலவுகள் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி ஈபிள் கோபுரத்தின் தொழிற்சங்கங்கள் நேற்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈபிள் டவர் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வது இது இரண்டாவது முறையாகும்.

எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக இங்கு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்கான பணப்பற்றாக்குறை காரணமாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸின் பாரிஸில் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது, திருவிழாவின் போது தொழிலாளர்கள் மற்றொரு வேலைநிறுத்தம் செய்வது குறித்து குறிப்புகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வருடத்திற்கு ஏறக்குறைய 7 மில்லியன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஈபிள் கோபுரத்திற்கு வருகை தருவதாகவும், நேற்று கோபுரத்தை மூடியதன் மூலம் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸ் தலைநகரில் இவ்வருடம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதால், பாரிஸுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும், அந்தக் காலப்பகுதியில் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிப்பது பொருத்தமான சூழ்நிலையல்ல எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Latest news

காட்டுத்தீக்குப் பிறகு விக்டோரியாவிற்கு மேலும் 15 மில்லியன் டாலர்கள் நிதியுதவி

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆஸ்திரேலிய கூட்டாட்சி அரசாங்கமும் விக்டோரியன் மாநில அரசாங்கமும் மேலும் 15 மில்லியன் டாலர்களை உதவியாக வழங்க திட்டமிட்டுள்ளன. காட்டுத்தீ அச்சுறுத்தல் குறைந்துவிட்டாலும், மாநிலம்...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை நிறைவேற்ற மீண்டும் கூடும் நாடாளுமன்றம்

வெறுப்புப் பேச்சு மற்றும் துப்பாக்கி திரும்பப் பெறுதல் சட்டங்களை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றம் அடுத்த வாரம் மீண்டும் கூட உள்ளது. இன்று பிற்பகல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பிரதமர்...

தீப்பிழம்புகளுக்கு மத்தியில் ஒரு கப்பல் கொள்கலனில் தங்கியிருந்த மூவர் மீட்பு

விக்டோரியாவிலிருந்து ஒரு நபர் தனது வீடு காட்டுத்தீயில் எரிந்து கொண்டிருந்தபோது, ​​ஒரு கப்பல் கொள்கலனுக்குள் ஒளிந்து கொண்டு உயிர் பிழைத்ததைப் பற்றிய ஒரு கதை பதிவாகியுள்ளது. Longwood-இல்...

சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து இன்ஸ்டாகிராம் பயனர்கள் எச்சரிக்கை

கடவுச்சொல் மீட்டமைப்புகளைக் கேட்கும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து மில்லியன் கணக்கான பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இன்ஸ்டாகிராம் எச்சரித்துள்ளது. கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சல்களைக் கோராமலேயே பெறுவது குறித்து பயனர்கள்...

சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து இன்ஸ்டாகிராம் பயனர்கள் எச்சரிக்கை

கடவுச்சொல் மீட்டமைப்புகளைக் கேட்கும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து மில்லியன் கணக்கான பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இன்ஸ்டாகிராம் எச்சரித்துள்ளது. கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சல்களைக் கோராமலேயே பெறுவது குறித்து பயனர்கள்...

குயின்ஸ்லாந்திற்குள் நுழையும் Koji புயல் – 2 பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாயம்

வெப்பமண்டல சூறாவளி Koji குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் Ayr மற்றும் Bowen-ஐ சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மிக அதிக மழையால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது...