Newsதிடீரென மூடப்பட்ட ஈபிள் கோபுரம் - சிறமத்துக்குள்ளான ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்

திடீரென மூடப்பட்ட ஈபிள் கோபுரம் – சிறமத்துக்குள்ளான ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்

-

உலக சுற்றுலாத் தலங்களில் ஒன்றான பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஈபிள் கோபுரத்தின் நிதி விவகாரங்கள் முறையாக நிர்வகிக்கப்படாமை மற்றும் செலவுகள் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி ஈபிள் கோபுரத்தின் தொழிற்சங்கங்கள் நேற்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈபிள் டவர் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வது இது இரண்டாவது முறையாகும்.

எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக இங்கு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்கான பணப்பற்றாக்குறை காரணமாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸின் பாரிஸில் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது, திருவிழாவின் போது தொழிலாளர்கள் மற்றொரு வேலைநிறுத்தம் செய்வது குறித்து குறிப்புகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வருடத்திற்கு ஏறக்குறைய 7 மில்லியன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஈபிள் கோபுரத்திற்கு வருகை தருவதாகவும், நேற்று கோபுரத்தை மூடியதன் மூலம் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸ் தலைநகரில் இவ்வருடம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதால், பாரிஸுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும், அந்தக் காலப்பகுதியில் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிப்பது பொருத்தமான சூழ்நிலையல்ல எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...