Sydneyசிட்னியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை உட்பட மூன்று சடலங்கள்

சிட்னியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை உட்பட மூன்று சடலங்கள்

-

சிட்னியின் பால்காம் ஹில்ஸ் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் குழந்தை என சந்தேகிக்கப்படும் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த மரணங்கள் தொடர்பில் தற்காப்புக் கலை பயிற்றுவிப்பாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்கிழமை காலை 10.15 மணியளவில் பால்காம் ஹில்ஸின் வாட்கின்ஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் 30 வயதுடைய நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

வடக்கு பரமட்டாவில் உள்ள தற்காப்புக் கலை பயிற்றுவிப்பாளர் பயிற்சி நிலையத்தில் 40 வயதுடைய தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சீன தற்காப்புக் கலை பயிற்றுவிப்பாளரான சந்தேக நபர், இந்தக் கொலைகளுக்குப் பொறுப்பேற்றுள்ளதுடன், அவர் இன்னும் குறிப்பிட்ட காரணத்தை தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

உயிரிழந்த குழந்தை சந்தேக நபரின் கீழ் தற்காப்புக் கலையை பயின்று வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் காயங்களுக்கும் மூன்று சடலங்களுக்கும் இடையிலான தொடர்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Latest news

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...

பிலிப்பைன்ஸில் எரிமலை வெடிப்பு – 3000 குடும்பங்கள் வெளியேற்றம்

பிலிப்பைன்ஸின் Albay மாகாணத்தில் அமைந்துள்ள மாயோன் எரிமலை வெடிப்பு தொடர்பில் எச்சரிக்கை நிலை உயர்த்தப்பட்டுள்ளது. 05 கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நிலை, தற்போது மூன்றாம் நிலைக்கு...

எடை இழப்பு மருந்துகளை நிறுத்திய பிறகு என்ன நடக்கும்?

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகிவிட்ட எடை இழப்பு மருந்துகளின் பயன்பாடு குறித்த புதிய ஆய்வை பிரிட்டிஷ் மருத்துவ இதழ் (BMJ) வெளியிட்டுள்ளது. இந்த மருந்துகளின் பயன்பாட்டை நிறுத்திய...

வட கரோலினாவில் பிரபல நீச்சல் தலத்திற்கு அருகில் மிகப்பெரிய முதலை கண்டுபிடிப்பு

மழைக்காலத்தின் உச்சத்தில் வடக்குப் பிரதேசத்தில் உள்ள ஒரு பிரபலமான நீச்சல் இடத்திற்கு அருகில் 4.9 மீட்டர் உயரமுள்ள முதலை ஒன்று காணப்பட்டுள்ளது. டார்வினுக்கு தெற்கே சுமார் 150...