Sydneyசிட்னியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை உட்பட மூன்று சடலங்கள்

சிட்னியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை உட்பட மூன்று சடலங்கள்

-

சிட்னியின் பால்காம் ஹில்ஸ் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் குழந்தை என சந்தேகிக்கப்படும் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த மரணங்கள் தொடர்பில் தற்காப்புக் கலை பயிற்றுவிப்பாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்கிழமை காலை 10.15 மணியளவில் பால்காம் ஹில்ஸின் வாட்கின்ஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் 30 வயதுடைய நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

வடக்கு பரமட்டாவில் உள்ள தற்காப்புக் கலை பயிற்றுவிப்பாளர் பயிற்சி நிலையத்தில் 40 வயதுடைய தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சீன தற்காப்புக் கலை பயிற்றுவிப்பாளரான சந்தேக நபர், இந்தக் கொலைகளுக்குப் பொறுப்பேற்றுள்ளதுடன், அவர் இன்னும் குறிப்பிட்ட காரணத்தை தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

உயிரிழந்த குழந்தை சந்தேக நபரின் கீழ் தற்காப்புக் கலையை பயின்று வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் காயங்களுக்கும் மூன்று சடலங்களுக்கும் இடையிலான தொடர்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...