Breaking Newsவிக்டோரியாவில் மர்மநபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நான்கு பெண்கள்!

விக்டோரியாவில் மர்மநபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நான்கு பெண்கள்!

-

விக்டோரியா மாநிலத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரால் நான்கு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விக்டோரியாவின் Mornington இல் வசித்து வந்த நான்கு பெண்களை சந்தேகநபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாகவும் இந்த வருடத்தின் கடந்த 2 மாதங்களில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

துவிச்சக்கர வண்டியில் பயணித்த பெண்களின் பின்னால் இனந்தெரியாத ஆண் ஒருவர் வந்து துன்புறுத்தி விட்டு தனது துவிச்சக்கரவண்டியில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விக்டோரியா காவல்துறை கூறுகையில், இந்த நிகழ்வுகளின் சங்கிலியில் முதல் சம்பவம் ஜனவரி 22 அன்று பதிவாகியுள்ளது, மற்றவை ஜனவரி 31, பிப்ரவரி 1 மற்றும் பிப்ரவரி 13 ஆகிய தேதிகளில் நிகழ்ந்தன.

விசாரணைகள் தொடர்பான நபர் ஒருவரின் புகைப்படங்களும், அது தொடர்பான சைக்கிள் மற்றும் பை ஒன்றும் இன்று ஊடகங்களுக்கு வெளியாகியுள்ளன.

அவர் காகசியன் தோற்றம் கொண்டவர் மற்றும் 14 மற்றும் 19 வயதுக்கு இடைப்பட்டவர் என நம்பப்படுகிறது.

இவரைப் பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் 1800 333 000 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளுமாறும், இந்த நாட்களில் பெண்கள் வீதியில் பயணிக்கும் போது அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...