Melbourneமெல்போர்ன் தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் கைது

மெல்போர்ன் தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் கைது

-

மெல்போர்ன் மற்றும் பல்லாரத்தில் தீ வைப்பில் ஈடுபட்ட இரண்டு சிறுமிகள் உட்பட நான்கு வாலிபர்களை விக்டோரியா காவல்துறை கைது செய்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய மூவரையும் சிறுவர் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டு பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்பிரிங்வேல் பகுதியில் உள்ள மூன்று வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு சிறுவர்களும் இரண்டு சிறுமிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் வோங்கா பூங்காவில் நடந்த மோசமான கொள்ளை, பல்லாரத்தில் உள்ள புகையிலை கடையில் தீவைப்பு மற்றும் மில் பார்க் உணவகத்தில் இரண்டு தீ தாக்குதல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர்கள் 14, 15 மற்றும் 16 வயதுடையவர்கள் மற்றும் தீயினால் கிரிமினல் சேதம், உயிருக்கு ஆபத்தை விளைவித்தல், கடுமையான உடல் உபாதைகளை ஏற்படுத்துதல், காரைத் திருடுதல் மற்றும் தடைசெய்யப்பட்ட ஆயுதம் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Latest news

2023ல் மோசடியால் 2.7 பில்லியன் டாலர்களை இழந்துள்ள ஆஸ்திரேலியர்கள்

2023 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்கள் 2.7 பில்லியன் டாலர் மோசடியால் இழந்துள்ளனர் என்று நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பின் சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியர்கள் 600,000...

அதிகரித்துவரும் புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை

கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய விக்டோரியன் புற்றுநோய் தரவுகளின்படி, குறைந்தது 6660 விக்டோரியர்கள் கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயின் அபாயத்தை...

சமந்தாவை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது விக்டோரியா காவல்துறை

விக்டோரியா மாநிலத்தில் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டு காரில் சென்ற பெண் காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சமந்தா என அடையாளம் காணப்பட்ட பெண்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டுகிறார் பிரதமர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். குடும்ப வன்முறைக்கு எதிராக செயற்படுமாறு நேற்றைய போராட்டத்தின் போது கிடைக்கப்பெற்ற...