Newsபூமித்தாயின் மடியில் மீளாத் துயில் கொண்டார் சாந்தன்

பூமித்தாயின் மடியில் மீளாத் துயில் கொண்டார் சாந்தன்

-

சாந்தனின் பூதவுடல் நேற்று (4ம் திகதி) மாலை 7 மணிக்கு எள்ளங்குளம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கல்லீரல் செயலிழப்பு மற்றும் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், பெப்ரவரி 28ஆம் திகதி அதிகாலை சாந்தன் காலமானார்.

இந்நிலையில் அவரது உடல் கடந்த வெள்ளிக்கிழமை விமானம் வழியாக கட்டுநாயக்க விமான நிலையம் எடுத்து வரப்பட்டு, உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரை அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் சாந்தனின் உடல் எடுத்து செல்லப்பட்டது. வவுனியா, மாங்குளம், கிளிநொச்சி, பளை, கொடிகாமம் என பல இடங்களிலும் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு, நேற்று ஞாயிற்றுக்கிழமை அவரது சொந்த ஊரான உடுப்பிட்டிக்கு எடுத்து செல்லப்பட்டது.

நேற்று முன்தினம் தீருவிலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர், உடுப்பிட்டி, இலக்கணாவத்தையிலுள்ள சாந்தனின் சகோதரியின் வீட்டில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது.

நேற்று காலையில் இறுதிச்சடங்குகள் நடந்து, உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இலக்கணாவத்தை சனசமூக நிலையத்தில் அஞ்சலிக் கூட்டம் நடந்தது.

இதை தொடர்ந்து உடல் வாகன பேரணியாக வல்வெட்டித்துறையிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அந்த இல்லத்தின் வாயிலில் அஞ்சலிக்காக சிறிது தரித்து பயணித்தது.

பின்னர் வல்வெட்டித்துறை- பொலிகண்டி ஊடாக எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லத்துக்கு அண்மையிலுள்ள எள்ளங்குளம் இந்து மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Latest news

புதிய NSW வீட்டுத் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள்

நியூ சவுத் வேல்ஸின் Camellia-இல் உள்ள ஒரு தொழில்துறை பகுதியில் 10,000 புதிய வீடுகளைக் கட்டும் திட்டம் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2027 ஆம்...

மாணவர் விசா தாமதங்கள் மற்றும் நிராகரிப்புகளைத் தவிர்ப்பதற்கான உதவிக்குறிப்புகள்

மாணவர் விசா விண்ணப்பதாரர்களுக்கான அத்தியாவசிய ஆலோசனைகள் குறித்து ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் மீண்டும் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாணவர் விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சரியாக...

மக்கள் பக்கம் சாய்ந்து செயல்பட முயற்சிக்கும் BOM Web

ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தால் கடந்த வாரம் தொடங்கப்பட்ட புதிய வலைத்தளத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வந்ததால், இந்த புதிய...

தேசிய ஊடகங்கள் குறித்து மத்திய காவல்துறைத் தலைவரின் சிறப்பு அறிக்கை

இளம் பெண்கள் ஆன்லைனில் வன்முறைச் செயல்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவதைத் தடுக்க, மத்திய காவல்துறை ஒரு புதிய பணிக்குழுவை நிறுவத் தயாராகி வருகிறது. மோசடி நபர்கள் ஆன்லைனில் பெண்களை...

தேசிய ஊடகங்கள் குறித்து மத்திய காவல்துறைத் தலைவரின் சிறப்பு அறிக்கை

இளம் பெண்கள் ஆன்லைனில் வன்முறைச் செயல்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவதைத் தடுக்க, மத்திய காவல்துறை ஒரு புதிய பணிக்குழுவை நிறுவத் தயாராகி வருகிறது. மோசடி நபர்கள் ஆன்லைனில் பெண்களை...

ICU-வில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிகெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர்

உயிருக்கு ஆபத்தான காயத்தால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர், தற்போது நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒக்டோபர் 25 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான...