Newsபூமித்தாயின் மடியில் மீளாத் துயில் கொண்டார் சாந்தன்

பூமித்தாயின் மடியில் மீளாத் துயில் கொண்டார் சாந்தன்

-

சாந்தனின் பூதவுடல் நேற்று (4ம் திகதி) மாலை 7 மணிக்கு எள்ளங்குளம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கல்லீரல் செயலிழப்பு மற்றும் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், பெப்ரவரி 28ஆம் திகதி அதிகாலை சாந்தன் காலமானார்.

இந்நிலையில் அவரது உடல் கடந்த வெள்ளிக்கிழமை விமானம் வழியாக கட்டுநாயக்க விமான நிலையம் எடுத்து வரப்பட்டு, உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரை அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் சாந்தனின் உடல் எடுத்து செல்லப்பட்டது. வவுனியா, மாங்குளம், கிளிநொச்சி, பளை, கொடிகாமம் என பல இடங்களிலும் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு, நேற்று ஞாயிற்றுக்கிழமை அவரது சொந்த ஊரான உடுப்பிட்டிக்கு எடுத்து செல்லப்பட்டது.

நேற்று முன்தினம் தீருவிலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர், உடுப்பிட்டி, இலக்கணாவத்தையிலுள்ள சாந்தனின் சகோதரியின் வீட்டில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது.

நேற்று காலையில் இறுதிச்சடங்குகள் நடந்து, உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இலக்கணாவத்தை சனசமூக நிலையத்தில் அஞ்சலிக் கூட்டம் நடந்தது.

இதை தொடர்ந்து உடல் வாகன பேரணியாக வல்வெட்டித்துறையிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அந்த இல்லத்தின் வாயிலில் அஞ்சலிக்காக சிறிது தரித்து பயணித்தது.

பின்னர் வல்வெட்டித்துறை- பொலிகண்டி ஊடாக எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லத்துக்கு அண்மையிலுள்ள எள்ளங்குளம் இந்து மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Latest news

இளவரசர் ஹரியை கைவிட்ட தந்தை – உதவிக்கு ஓடோடி வந்த இளவரசி டயானாவின் உறவினர்கள்

பிரித்தானியா வந்த இளவரசர் ஹரியை அவரது தந்தையான மன்னர் சார்லஸ் புறக்கணித்த நிலையில், ஹரிக்கு ஆதரவாக நிற்க, இளவரசி டயானாவின் சகோதரரும் சகோதரியும் ஓடோடிவந்த சம்பவம்...

மக்கள் இன்றி காலியாக இருக்கும் 9 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள்

ஜப்பானில் காலியாக உள்ள வீடுகளின் எண்ணிக்கை சாதனை எண்ணிக்கையான ஒன்பது மில்லியனாக உயர்ந்துள்ளது. நாட்டில் மக்கள் தொகை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக...

பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி திருட்டை தடுக்க புதிய மென்பொருள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி திருட்டு சுமார் 85 வீதத்தால் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருடர்களை குறிவைத்து பாதுகாப்பை...

வரலாறு காணாத அளவுக்கு உயரும் வீடுகளின் விலை

ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களின் புறநகர்ப் பகுதிகளில் வீடுகளின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் வட்டி விகித சுழற்சி உள் நகரங்கள், புறநகர்ப் பகுதிகள் மற்றும்...

பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி திருட்டை தடுக்க புதிய மென்பொருள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி திருட்டு சுமார் 85 வீதத்தால் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருடர்களை குறிவைத்து பாதுகாப்பை...

சிட்னி உட்பட பல பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை

சிட்னி உட்பட பல பகுதிகளில் மழையுடனான வானிலை வார இறுதி நாட்களிலும் தொடரும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வார இறுதியில் நியூ சவுத் வேல்ஸ்...