Newsகனடாவில் 6 இலங்கையர்களைக் கொன்ற இலங்கை மாணவர்!

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொன்ற இலங்கை மாணவர்!

-

கனடாவின் ஒட்டாவாவில் உள்ள வீடொன்றில் வைத்து இலங்கையைச் சேர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் குடும்பத்தின் தாய் மற்றும் பிள்ளைகள் அடங்குவதாகவும் தந்தை படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி பிபிசி உலகச் சேவை, இறந்தவர்கள் இலங்கை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளது.

உயிரிழந்த 6 பேரும் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் எனவும், உயிரிழந்த இளைய குழந்தைக்கு மூன்று மாதங்களுக்கும் குறைவான வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

குடும்பத்துடன் வசித்து வந்த 19 வயதுடைய இலங்கை மாணவன் ஒருவரே கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களில் 35 வயதான தர்ஷனி டிலந்திகா ஏகநாயக்க மற்றும் அவரது நான்கு பிள்ளைகளான 7 வயதான இனுகா விக்ரமசிங்க, 4 வயதான அஷ்வினி விக்ரமசிங்க, 2 வயதான ரின்யான விக்கிரமசிங்க மற்றும் இரண்டு மாத குழந்தை கெல்லி விக்ரமசிங்க ஆகியோர் அடங்குவர்.

உயிரிழந்த ஆறாவது நபர் 40 வயதான காமினி அமரகோன் என்பதுடன், அவர் அதே வீட்டில் வசித்த குடும்பத்தின் உறவினர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 19 வயதுடைய ஃபேப்ரியோ டி சொய்சா என அடையாளம் காணப்பட்ட பொலிசார், அவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் ஒட்டாவாவின் சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய கொலையாகும், இது ஒரு உண்மையான சோகம், இது கனடாவின் தலைநகரில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஒட்டாவாவின் மேயர் கூறினார்.

நகரத்தின் வரலாற்றில் நடந்த வன்முறைச் செயல்களில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் ஒரு கொலை என்று அவர் விவரித்தார்.

கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...