Newsகனடாவில் 6 இலங்கையர்களைக் கொன்ற இலங்கை மாணவர்!

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொன்ற இலங்கை மாணவர்!

-

கனடாவின் ஒட்டாவாவில் உள்ள வீடொன்றில் வைத்து இலங்கையைச் சேர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் குடும்பத்தின் தாய் மற்றும் பிள்ளைகள் அடங்குவதாகவும் தந்தை படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி பிபிசி உலகச் சேவை, இறந்தவர்கள் இலங்கை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளது.

உயிரிழந்த 6 பேரும் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் எனவும், உயிரிழந்த இளைய குழந்தைக்கு மூன்று மாதங்களுக்கும் குறைவான வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

குடும்பத்துடன் வசித்து வந்த 19 வயதுடைய இலங்கை மாணவன் ஒருவரே கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களில் 35 வயதான தர்ஷனி டிலந்திகா ஏகநாயக்க மற்றும் அவரது நான்கு பிள்ளைகளான 7 வயதான இனுகா விக்ரமசிங்க, 4 வயதான அஷ்வினி விக்ரமசிங்க, 2 வயதான ரின்யான விக்கிரமசிங்க மற்றும் இரண்டு மாத குழந்தை கெல்லி விக்ரமசிங்க ஆகியோர் அடங்குவர்.

உயிரிழந்த ஆறாவது நபர் 40 வயதான காமினி அமரகோன் என்பதுடன், அவர் அதே வீட்டில் வசித்த குடும்பத்தின் உறவினர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 19 வயதுடைய ஃபேப்ரியோ டி சொய்சா என அடையாளம் காணப்பட்ட பொலிசார், அவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் ஒட்டாவாவின் சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய கொலையாகும், இது ஒரு உண்மையான சோகம், இது கனடாவின் தலைநகரில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஒட்டாவாவின் மேயர் கூறினார்.

நகரத்தின் வரலாற்றில் நடந்த வன்முறைச் செயல்களில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் ஒரு கொலை என்று அவர் விவரித்தார்.

கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...