அடுத்த வார இறுதியில் இரண்டு வானிலை அமைப்புகளின் விளைவுகள் காரணமாக, ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் குயின்ஸ்லாந்து முதல் நியூ சவுத் வேல்ஸ் வரை பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கைகள் உள்ளன.
வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து நோக்கி நகர்ந்து வருவதாகவும், மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையை ஒட்டி தெற்கு நோக்கி நகர்வதாகவும் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா மாநிலங்கள் கடுமையான புயல் நிலைமைகளை சந்திக்கக்கூடும், அதே நேரத்தில் குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 300 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சில பிரதேசங்களில் 6 மணித்தியாலங்களில் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான காலநிலை அச்சுறுத்தல் கடந்துள்ள போதிலும், விக்டோரியாவின் பல பகுதிகளுக்கு பலத்த காற்று எச்சரிக்கை அமுலில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று மாலை முதல் மெல்போர்ன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மணிக்கு 90 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
மத்திய கடற்கரை, கிப்ஸ்லாந்து, போர்ட் பிலிப், மேற்கு துறைமுகம் மற்றும் மேற்கு கடற்கரையின் பல பகுதிகள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.