உலகின் வயதான மனிதர் என்ற கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த வெனிசுலாவைச் சேர்ந்த ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா காலமானார்.
ஜுவான் விசென்டே தனது 114வது வயதில் இறந்துவிட்டதாக அவரது சொந்த ஊரில் உள்ள அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் அறிவித்தனர்.
2022 ஆம் ஆண்டில் கின்னஸ் உலக சாதனைக் குழுவால் உலகின் வயதான நபர் என்று பெயரிடப்பட்டார்.
ஜுவான் விசென்டேவின் மரணம் குறித்து வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கின்னஸின் கூற்றுப்படி, பெரெஸ் பிப்ரவரி 4, 2022 அன்று 112 வயது மற்றும் 253 நாட்களில் வாழும் வயதான மனிதராக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டார்.
11 குழந்தைகளின் தந்தையான அவருக்கு 2022 ஆம் ஆண்டுக்குள் 59 பேரக்குழந்தைகள் மற்றும் 12 கொள்ளு பேரக்குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மே 27, 1909 அன்று ஆண்டியன் மாநிலத்தில் பிறந்த ஜுவான் விசென்டே, அந்த விவசாயக் குடும்பத்தில் 10 குழந்தைகளில் ஒன்பதாவது குழந்தை என்று கூறப்படுகிறது.