Cinemaமீண்டும் ரஜினியுடன் இணையும் நடிகை ஷோபனா

மீண்டும் ரஜினியுடன் இணையும் நடிகை ஷோபனா

-

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தலைவர் 171’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஜெயிலர் படத்தை தயாரித்த ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினியின் ‘First Look’ போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

ரஜினிகாந்த் தற்போது ஞானவேலின் இயக்கத்தில் உருவாகும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகின்ற நிலையில் இப்படம் ஒக்டோபர் மாதம் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜூன் மாதம் முதல் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 171 படப்பிடிப்பில் இணையவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கின்றார். கடந்த ஆறு மாத காலமாக இப்படத்தின் வேலைகளில் இருந்த லோகேஷ் தற்போது நடிகர்களின் தேர்வை தொடங்கியுள்ளார். அதன்படி இப்படத்தில் நடிக்க பிரபல நடன மாஸ்டர் சாண்டி முதல் ஆளாக கமிட்டாகியுள்ளார்.

இவர் ஏற்கனவே லோகேஷ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் மிரட்டலான வில்லன் ரோலில் நடித்து அனைவரையும் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் நாயகி தேர்வு நடைபெற்று வருகின்றதாம். அந்த வகையில் பிரபல நடிகையான ஷோபனாவை இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வைக்க லோகேஷ் முடிவெடுத்துள்ளாராம்.

தற்போது ஷோபனாவிடம் லோகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். ஷோபனாவிற்கும் கதை மிகவும் பிடித்திருப்பதால் கண்டிப்பாக அவர் தான் தலைவர் 171 திரைப்படத்தில் நாயகியாக நடிப்பார் என கூறப்படுகின்றது. இவர் ஏற்கனவே ரஜினியுடன் தளபதி படத்தில் இணைந்து நடித்திருந்தார்.

அதன் பிறகு 33 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக தலைவர் 171 படத்தின் மூலம் ஷோபனா நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

கைதிகளுக்கு தியானம் கற்றுத்தரும் ஆஸ்திரேலிய பெண்

நியூயார்க்கின் Rikers தீவில் உள்ள ஒரு ஆஸ்திரேலியப் பெண் ஒரு அற்புதமான திட்டத்தை நடத்தி வருகிறார். முன்னாள் ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் Joh Jarvis, கைதிகளுக்கும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும்...

Work from Home முறை மாற்றங்களுக்கு மன்னிப்பு கோரிய எதிர்க்கட்சித் தலைவர்

வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைமையில் திருத்தங்களை அறிமுகப்படுத்துவதாகக் கூறியதற்காக எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறார். ஆஸ்திரேலிய மக்களைக் கலந்தாலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்கப்படாது...

Gold Coast வீட்டில் தீப்பிடித்து எரிந்த மின்சார வாகனம்

கோல்ட் கோஸ்டில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (06) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்...

தாமதங்கள் மற்றும் ரத்துசெய்தல்களைத் தடுக்க Jetstar-இன் புதிய திட்டம்

விமான தாமதங்கள் மற்றும் ரத்துசெய்தல்களைக் குறைக்க செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் திட்டமிட்டுள்ளது. அதன்படி, அதன் அனைத்து விமானங்களையும் அதற்கேற்ப புதுப்பிக்கத் தொடங்கியுள்ளதாக...

மெல்பேர்ண் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான டாலர்கள்

மெல்பேர்ண் கடையில் இருந்து பல்லாயிரக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள பல ஆடம்பரப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மெல்பேர்ணில் உள்ள டேவிட் ஜோன்ஸ் கடையும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடையின்...

விக்டோரியா நெடுஞ்சாலையில் கண்டெடுக்கப்பட்ட மனித உடல் பாகங்கள்

விக்டோரியாவில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு தாக்குதலாகவோ அல்லது வாகன விபத்து சம்பவமாகவோ இருக்கலாம் என விக்டோரியா காவல்துறை...