Cinemaமீண்டும் ரஜினியுடன் இணையும் நடிகை ஷோபனா

மீண்டும் ரஜினியுடன் இணையும் நடிகை ஷோபனா

-

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தலைவர் 171’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஜெயிலர் படத்தை தயாரித்த ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினியின் ‘First Look’ போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

ரஜினிகாந்த் தற்போது ஞானவேலின் இயக்கத்தில் உருவாகும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகின்ற நிலையில் இப்படம் ஒக்டோபர் மாதம் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜூன் மாதம் முதல் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 171 படப்பிடிப்பில் இணையவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கின்றார். கடந்த ஆறு மாத காலமாக இப்படத்தின் வேலைகளில் இருந்த லோகேஷ் தற்போது நடிகர்களின் தேர்வை தொடங்கியுள்ளார். அதன்படி இப்படத்தில் நடிக்க பிரபல நடன மாஸ்டர் சாண்டி முதல் ஆளாக கமிட்டாகியுள்ளார்.

இவர் ஏற்கனவே லோகேஷ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் மிரட்டலான வில்லன் ரோலில் நடித்து அனைவரையும் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் நாயகி தேர்வு நடைபெற்று வருகின்றதாம். அந்த வகையில் பிரபல நடிகையான ஷோபனாவை இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வைக்க லோகேஷ் முடிவெடுத்துள்ளாராம்.

தற்போது ஷோபனாவிடம் லோகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். ஷோபனாவிற்கும் கதை மிகவும் பிடித்திருப்பதால் கண்டிப்பாக அவர் தான் தலைவர் 171 திரைப்படத்தில் நாயகியாக நடிப்பார் என கூறப்படுகின்றது. இவர் ஏற்கனவே ரஜினியுடன் தளபதி படத்தில் இணைந்து நடித்திருந்தார்.

அதன் பிறகு 33 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக தலைவர் 171 படத்தின் மூலம் ஷோபனா நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

2023ல் மோசடியால் 2.7 பில்லியன் டாலர்களை இழந்துள்ள ஆஸ்திரேலியர்கள்

2023 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்கள் 2.7 பில்லியன் டாலர் மோசடியால் இழந்துள்ளனர் என்று நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பின் சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியர்கள் 600,000...

அதிகரித்துவரும் புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை

கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய விக்டோரியன் புற்றுநோய் தரவுகளின்படி, குறைந்தது 6660 விக்டோரியர்கள் கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயின் அபாயத்தை...

சமந்தாவை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது விக்டோரியா காவல்துறை

விக்டோரியா மாநிலத்தில் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டு காரில் சென்ற பெண் காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சமந்தா என அடையாளம் காணப்பட்ட பெண்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டுகிறார் பிரதமர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். குடும்ப வன்முறைக்கு எதிராக செயற்படுமாறு நேற்றைய போராட்டத்தின் போது கிடைக்கப்பெற்ற...